அதன் தொடர்ச்சியாய் “அவங்க மெடிசின்லாம் எடுத்துக்கனும்….இப்டி சாப்டாம தூங்குறாங்களேன்னு பார்த்தேன்….” என அடிக்கடி மித்ரன் மீது போய் வரும் தன் பார்வைக்கு காரணமும் சொன்னாள்.
பின் “அவங்களுக்கு ரெஸ்ட்டே இல்ல அகி….ஸ்விஸ்ல இருந்து வரவும் இன்பா அண்ணி விஷயம்…..அடுத்து இப்ப பெரியத்தான் ப்ராப்ளம்……” என சற்றாய் புலம்பியும் கொண்டாள்.
“அதான் சொல்றேன் மகி……இப்ப அப்டியே நேர ரெண்டு பேரும் உங்க வேலைக்கு போய்டாதீங்க….. ஒரு ஒன் ஆர் டூ வீக்ஸாவது லீவு எடுங்க…..முடிஞ்சா எங்கயாவது ட்ரிப் போய்ட்டு வாங்க….” என்று அதற்கு ஆலோசனை சொன்ன அகதன் தன் தங்கை முகத்தை சற்று ஆராய்தலாய்ப் பார்த்தான்….
மித்ரனின் காயம் காரணமாக இவள் தன்னவனிடம் இளகிப் போகிறாளா…இல்லை உண்மையில் அவளது கோபம் முடிந்து விட்டதா…? கல்யாணத்தை வேணும்னா அப்றமா வச்சுகலாமான்னு கேட்டதுக்கு இல்ல இப்பவே மேரேஜ் செய்துக்கிறேன்னு செய்துட்டு….அடுத்து ஹனிமூன் கூட போக மாட்டேன்னு சொன்னதோட மித்ரனுக்கு பிடிக்காத அவன் அம்மா வீட்ல போய் இருந்தாளே….
அவனது பார்வையை சட்டை செய்யாமல் மனோ தன் மன ஓட்டத்தை பகிர்ந்து கொண்டாள். “கண்டிப்பா ரெஸ்ட் தான்…..ஆனா ட்ரிப் போவமான்னு தெரியலை…..அதை அவங்கதான் சொல்லனும்…ஆனா இன்னைக்கு ஈவ்னிங் பெரியத்தான் டிஸ்சார்ஜ் ஆனதும் அவங்களை வீட்ல கொண்டு விட்டுட்டு….அப்டியே நாங்க எங்க அபார்ட்மென்ட்க்கு வந்துடுவோம்……அங்க இருக்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்குது…..” என்றவள்
தொடர்ந்து “நான் இந்த சி இ ஓ போஸ்ட்டைலாம் கன்டின்யூ செய்றதா இல்ல அகி….அது ஏதோ அந்நேரம் ஒரு இமோஷன்ல எடுத்த முடிவு…..பட் மனசுக்கு பிடிக்கல……எனக்குலாம் ஒன் ஸ்டெப் அட் அ டைம்னு ஒழுங்கா லேடர்ல க்ரோ ஆகி வர்றது தான் பிடிச்சுறுக்கு…. அதோட பெரியத்தான் ஹெல்த்தும் நல்லா இருக்குதுன்னுதான் டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க….பயோ சி அவங்களோடது….அவங்களே பார்த்துப்பாங்க….விஜிலாவும் இன்னும் ஃப்யூ மந்த்ஸ்ல ஆஃபீஸ் வர முடியுமே…. சோ நான் என் பழைய ரோலைதான் கன்டின்யூ செய்றதா இருக்கேன்…… அதுவும் ஒரு லாங்க் வெகேஷன்க்கு அப்றம்…” என தன் திட்டத்தை விளக்கினாள்….
இப்போது அகதன் மென்மையாய் பாராட்டாய் அவள் தலையில் தட்டினான்……இதுதான் அவனது இயல்பான தங்கை….
“சரி…இதெல்லாம் நீ யோசிக்றது சரியாதான் இருக்குது…பட் எதுனாலும் ரெண்டு பேருமா பேசி செய்ங்க…..எப்பவும் எதையும் ஒருத்தரா ஹேண்டில் பண்றதவிட ரெண்டு பேரா செய்றது பெட்டர்…..” என்ற அகதன் அடுத்தும் எதோ சொல்ல தொடங்க….
சட்டென நியாபகம் வந்தவளாக இடையிட்டாள் மனோ இப்போது…
“உன்ட்ட ஒன்னு கேட்கனும் அகி…..” அவள் குரலிலேயே விஷயம் சற்று சீரியஸ் என புரிய அவள் என்ன சொல்ல போகிறாள் என முழு கவனத்தையும் அவள் மேல் குவித்தான் அகதன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??
படிக்க தவறாதீர்கள்...
“இன்பா அண்ணி மேரேஜ் விஷயம்…” என இவள் ஆரம்பிக்கவும்…..
“இதெல்லாம் என்ட்ட பேசினா அவங்களுக்கு ஒன்னும் தோணாதா…” என தயங்கினான் அகதன். “அதோட இதெல்லாம் மாப்ள அவங்க சிஸ்ட்டர்ட்ட பேசி முடிவெடுத்துக்க வேண்டியது மகி… நான் இதுல பேசுறது சரி இல்லையே…” அவன் சொல்லிக் கொண்டிருக்க……
இப்போது தூங்கிக் கொண்டிருந்த மித்ரன் மெல்ல எழுந்து உட்கார்ந்தான்.
“வாங்க அகதன்….எப்ப வந்தீங்க….” என முறையான உபசரிப்பு படலம் அவர்களுக்குள் தொடங்க….. எழுந்து மனோவோ தன் அம்மா அனுப்பி இருந்த சாப்பாடை எடுத்து மித்ரன் சாப்பிடும் வண்ணம் தட்டில் பரிமாறி வைத்தாள்.
அடுத்து தன்னை ஃப்ரெஷ் அப் செய்து கொண்டு வந்து அகதனுக்கு எதிரில் அமர்ந்த மித்ரன் கையில் ஸ்பூனோடு சாப்பாடை கொடுத்தவள்…. “அப்டியே சாப்டுறுங்க மனு……டைம் ஆகுது…. டேப்லெட் போடனும் நீங்க…” என்றபடி அவன் அருகில் போய் அமர்ந்தும் கொண்டாள்.
பின் மித்ரனிடம்…. “ அண்ணி மேரேஜ் பத்தி அகிட்ட பேச ஆரம்பிச்சேன்….” என சொல்லி மீண்டும் பழைய டாபிகிற்கே வந்தாள்.
அகதனிடம் சற்று தர்ம சங்கடம்.
“இவன் நான் இதெல்லாம் அவன்ட்ட பேச கூடாதுன்னு சொல்றான்….” என்று மனோ தன் அண்ணன் பத்தி கணவனிடம் ஒரு கம்ப்ளெய்ண்ட் வாசித்துவிட்டு
அண்ணனிடம் திரும்பி “நீ மட்டும் இவங்க கூட சேர்ந்து என்னை கிட்நாப் பண்ணியாவது கல்யாணம் செய்றதைப் பத்தி பேசலாம்….ஆனா அவங்க உன்ட்ட அவங்க அக்காவுக்கு உறுப்படியா மேரேஜ் செய்றத பத்தி கூட பேசக் கூடாதா” என கிண்டலால் குத்தினாள்.
இதற்கு சற்று சிரித்த மித்ரன்….. “என்ன இருந்தாலும் நான் இங்க வளரலையா…. இது மாதிரி விஷயங்கள்ள…..கல்சுரல் சம்பந்தபட்ட சென்சிடிவிடி எனக்கு முழுசா புரியாது….. அதனால உங்கட்ட இதை கேட்கனும்னு நினச்சேன் அகதன்…..என்னதான் நமக்கு ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும்….சில ஃபேமிலி விஷயங்களை நாம வீட்டுக்குள்ள தான பேசிக்க முடியும்….வெளிய பேச முடியாதே…..அதான் இதயெல்லாம் உங்கள தவிர என்னால வேற யார்ட்டயும் டிஸ்கஸ் செய்ய முடியாது….”
மித்ரனின் வார்த்தைகளில் அகதனிடம் முழு சம்மதம் வந்து இருந்தாலும்….அவன் தன் தங்கையைப் பார்த்தான்….