கொஞ்சம் பயந்து போனவளாக அவனை பார்த்து அவசரமாக 'இல்லை' என தலை அசைத்தாள் இந்து.
'என்ன இல்லை ம்???' என்றபடியே அவளுக்கு போட வேண்டிய ஊசியை கையில் எடுத்துக்கொண்டான் அவன்.
ஊசியை அவள் கையில் செலுத்திக்கொண்டே அவள் கண்களுக்குள் பார்த்தான் விஷ்வா. அவள் கண்களுக்குள் எத்தனை தவிப்பு??? புன்னகைத்துக்கொண்டான் அவன். ஊசி கைக்குள் இறங்கும் வலிகூட தெரியவில்லை அவளுக்கு.
'பதில் எப்படி இருந்தா உனக்கு சௌகரியம். எஸ் ஆ நோ வா??? ம்??? இன்னமும் அவன் தொனி இறங்கவில்லை. இடம் வலமாக தலை அசைத்து விட்டு கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள்.
சிரிஞ்சை குப்பையில் போட்டு விட்டு அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளுருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் விஷ்வா. அங்கே கட்டிலில் அவளருகில் இருந்தது அவளது கைப்பேசி.
அவன் அதை பார்த்துவிட்டு ஒரு முறை அவள் முகம் பார்க்க.
பேச முடியாது ஆனா மெசேஜ் அனுப்பலாம் இல்ல..' அவன் மனதை படித்தவளாக சைகையில் சொன்னாள் இந்து.
இதழ்களில் புன்னகை ஓட கொஞ்ச நேரம் அவளையே பார்த்திருந்தான் விஷ்வா . இன்னமும் அந்த கேள்விக்கு அவன் பதில் சொல்லி இருக்கவில்லை.
என்ன தோன்றியதோ ஒரு சில நொடிகள் கழித்து அவளது கைப்பேசியை கையில் எடுத்துக்கொண்டு சின்ன புன்னகையுடன் அதை உரிமையுடன் துழாவ ஆரம்பித்தவனுக்கு ஏனோ திடுக்கென்றது. அவளது கைபேசி திரையில் சிரித்திருந்தான் அருண்!!!
முகத்தில் நிறையவே யோசனை ரேகைகள் ஓட, இவன் யாரென அவளிடம் விஷ்வா கேட்க இதை அவனிடம் எப்படி விளக்குவது என யோசித்தவள் அவனிடம் ஒரு பேப்பரையும் பென்சிலையும் வாங்கிக்கொண்டாள்.
என்ன எழுதுகிறாள் என அவன் சுவாரஸ்யமாக எட்டிப்பார்க்க
'இவர் என் அண்ணன். என்னுடைய பெரியப்பா மகன். எங்கள் குடும்பத்துக்கு எல்லாமே எங்கள் பெரியப்பாதான் என எழுதி இருந்தாள் இந்துஜா!!!'
அதை படித்தவனின் முகம் மெல்ல மெல்ல மாற்றம் கொண்டது. அவனது மனத்திரையில் பரத் வந்து போனான். கட்டிலில் அவளது கைக்கு மிக அருகில் இருந்த அவனது கரம் ஏனோ அவளை விட்டு மெல்ல மெல்ல விலகியது.
தொடரும்......
{kunena_discuss:982}