ஆக்சுவலி அது அட்டாச் பாத் என்றாலும் அங்கு இரண்டு பக்கமுமாய் இரு அறை இருக்கும்….ஒன்று வாட்ரோப் செக்க்ஷன் ட்ரஃஸ் சேஞ்ச் செய்ய எல்லா வசதியோடும் இருக்கும்….அடுத்தது குளியல் அறை….இரண்டுக்கும் நடுவில் ஒரு கதவு….அதை திறந்தால் வீட்டிலிருக்கும் இன்டோர் ஸ்விம்மிங் பூல்…
விவன் இவளை அங்குதான் படு வேகமாய் கொண்டு போனான்…. பூல் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்க….அதன் ஒரு புறம் சில படிக்கட்டுகள் பூலுக்குள் இறங்க….. ரியாவை கூட்டிச் சென்று அந்த படிகளில் சில படிகள் இறக்கி
“உட்கார் ரியு…” உட்காரவும் சொன்னான்… அவனைப் பொறுத்தவரை தரை கூட தீ பிடிக்கிறது என்றால்….வேறு எங்கு ரியா சேஃபாக இருக்க முடியும்? அதான் அவளை தண்ணியில் உட்கார வைக்க நினைத்தான் அவன்
ரியாவுக்கு இருந்த அதிர்ச்சி மற்றும் அவன் கூட்டி வந்த வேகத்தில் எதுவும் முழுதாய் புரிபடவில்லை எனினும்…..அவன் அவளை இங்கு விட்டுவிட்டு கிளம்பப் போகிறான் என புரியவும்… ஏற்கனவே அவனையே ஆதாரமாய் சாய்ந்திருந்தவள்….இருகைகளாலும் அவனை வளைத்துக் கொண்டு…. இன்னுமாய் அவன் மீது இறுகினாள்……
“ப்ளீஸ் ப்ளீஸ்ப்பா என்ன விட்டுட்டுப் போய்டாதீங்க….” கெஞ்சினாள்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
ஆனால் விவனது கண்களோ அங்கு சுற்று முற்றும் பார்க்க… அவனை அணைத்திருந்த அவளது கைகளை சற்று பலம் கொடுத்து வெடுக்கென பிரித்துவிட்டான் அவன்… இல்லனாதான் விட மாட்டேங்கிறாளே…
அவனைப் பொறுத்தவரை யாரோ இதையெல்லாம் செய்கிறார்கள்…..இவளை பத்திரமாய் ஒரு இடத்தில் வைத்துவிட்டு வேகமாய் போய் அந்த கல்ப்ரிட்டை தேடி பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவன் மனதிலிருந்தது.
ரியாவுக்கோ இது எதுவும் ஆட்களின் வேலையாக இருக்கும் என துளி கூட தோன்றி இருக்கவில்லை….எதோ சூப்பர் நேச்சுரல் அமனுஷ்யம் என்ற புரிதலே அவளுக்கு….
ஆக அவள் மீண்டுமாய் அவனை அப்ப… “பச் ரியு… பிகேவ் யுவர்செல்ஃப்… இதென்ன வேலை” என காரமாய் சொல்லியபடி, அவளது இரண்டு கையையும் வெடுக்கென உருவி விட்டுவிட்டு அந்த பூலைவிட்டு வெளியே தாவி ஓடினான் விவன்.
“மூடிக்கோ…” என்றபடி அருகிலிருந்த செல்ஃபிலிருந்த இன்னொரு டவலையும் எடுத்து அவள் மீதாய் ஏறத்தாழ வீசினான்……இவ்ளவு நேரம் துவட்டாமல் நின்றிருந்த நிலையில் அவள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாளே….
பூலிலிருந்து வீட்டிற்கு வெளியே செல்லும் வாசல் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தான்..…
எல்லாம் இரண்டு நொடிகளுக்குள் நடந்துவிட… அவன் எறிந்து இவள் மீது விழுந்த டவலை பற்றிக் கொண்ட ரியா அருவருக்கப்பட்ட புழு போல் உணர்ந்தாள்….
ஆவியோட வேலை…..பேயோட லீலை என நினைத்திருப்பவளுக்கு, விவன் கல்ப்ரிட்டை தேடி ஓடுகிறான் என சின்னதாய் கூட சிந்தனையில் எழும்ப வாய்ப்பில்லைதானே….
‘பிஹேவ் யுவர்செல்ஃபா….?’ இவள் அவன் மீது சாய்வதை என்னதாக எடுத்துக் கொண்டான் இவன்????
‘மெல்ல உறைக்கிறது அவளது உடைக் கோலம்…. ஐயோ அதான் அவன தொடகூட கூடாதுன்னு தள்ளிவிட்டுட்டுப் போறானாமா…?
அதுவும் டவலை வேறு எடுத்து வீசிட்டு போறான்…..
அவ்ளவு கீழ்தரமான பொண்ணாவ என்னை தெரியுது இவனுக்கு….என்னமோ நானா போய் அரை குறை ட்ரஸ்ல இவன் மேல விழுற மாதிரியும்… அவன் என்னமோ தன்னை காப்பாத்திக்க ஓடுற மாதிரியும்…. நினைத்து முடிக்கவில்லை இவள்…..
ஃபர்ஸ்ட் நைட் கிஸ்ஸிங் இன்சிடென்ட்…… ஸ்கூல்ல வச்சு இவ ஹக் செய்ததற்கு அவன் பதில் செய்யாமல் போனது எல்லாம் இப்போது லாஜிகலாய் நியாபகம் வந்து நக்கலாய் ‘பிறகு அவன் உன்ன என்னதா நினைப்பான்’ என கேள்வி கேட்க, சாக்கடைப் புழுவாக உணர்ந்தாள் ரியா…
அவமானத்தை அடி முதல் நுனி வரை ஆழ ஆழமாய் அறிந்தாள்…. தன்மானத்தில் விழுந்த தடி அடியால் தாறுமாறாய் காயப்பட…உள்ளுக்குள் ஊமையாய் வீரிட்டு அழுகிறது அவள் பெண்மை…..
விவனோ முதல்ல இந்த பூலிலிருந்து வீட்டிற்கு வெளியே செல்லும் கதவைத்தான் நோக்கிப் பாய்ந்தான்….. அது உட்பக்கமாக பத்திரமாகாவே தாழிடப் பட்டிருந்தது…..
அப்டின்னா யாரும் இந்த கதவு வழியா வெளிய இருந்து வீட்டுக்குள்ள வந்திருக்க முடியாது….. அதோட இங்க இப்ப ரியாவ விட்டுட்டுப் போகலாம்….அடுத்த செகன்ட் பாத்ரூமிற்குள் போய் அங்கிருந்து ரியாவின் அறை….அடுத்து ஹால்….. வீட்டோட இன்டு இடுக்கு…. கூடவே செக்யூரிட்ட சொல்லி வெளிய என எல்லா வகையிலும் செம அலசல்…
ஆனால் ஆள்தான் யாரையும் காணோம்…. முடிந்த வரை தேடிவிட்டு….. ஆதிரன் சாருக்கும் ஒரு கால் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு…. அடுத்தும் விபரீதமாய் வித்யாசமாய் எதுவும் இல்லை என்றானபின்
ரியவைத் தேடி சற்று சோர்வாகவே சென்றான் விவன்…
யார் ஏன் எதுக்காக இப்படி செய்யனும்??? இதற்கு பதில் இல்லை அவனிடம்….. கூடவே ரியாவின் பாதுகாப்பு….அதோடு இப்படி உணர்வு ரீதியாக அவள் அலைக்கழிக்கப்பட்டால்…. அவளுக்கும் குழந்தைக்கும் எத்தனை கொடுமை இது?
தவிப்பாக இருந்தது அவனது தாய்மனதிற்கு…. தோல்வியாக உணர்கிறது அவனது தலைமைத்துவம்….
இவன் பூலிற்குப் போகும் போது ஒரு சல்வார் அணிந்து பூல் பக்கத்தில் இருந்த ரெக்லைனர் ஒன்றில் சாயாமல் நிமிர்ந்து விரைப்பாய் உட்கார்ந்திருந்தாள் ரியா. அவள் முகம் உர்ர்ர்
“தண்ணில இருன்னு சொன்னேன்ல ரியு….” என்றபடி அவளுக்கு அருகில் தரையில் போய் அமர்ந்தான் விவன்….. அவ இவன் விட்டுட்டுப் போனத என்னதா புரிஞ்சு வச்சுறுக்கான்னு இவனுக்கு தெரியுமா என்ன?