அவரின் பரபரப்பு பார்த்து சிரித்தபடி சுறா, பரத் இருவரும் வெளியேறினர்.
“அண்ணா.. நீங்க ரா agent ன்னு சொல்லவே இல்லை.. “
“ஹேய்.. அது எல்லாம் சொல்லக் கூடாது.. நீ யாரிடமும் சொல்லாதே..”
“சரின்னா.. நீங்க கொடுத்த ரிப்போர்ட் லே என்ன இருந்தது.. ?”
“ஹ்ம்ம்.. அது கேட்க கூடாது.. நீயும் சீப் தவிர வேறு யாரிடமும் சொல்ல கூடாது.. நானும் அவரை தவிர யாரிடமும் சொல்ல மாட்டேன்.. புரிகிறதா..?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
“சரி அண்ணா..” என்றவள் மீண்டும் சீப் அழைப்பிற்காக காத்து இருந்தாள். இந்த யோசனையில் அவள் அர்ஜுன்க்கு கூட அந்த வாரம் மெயில் அனுப்பவில்லை.
இங்கே சுபத்ராவிற்கு சந்தேகம் ஏற்பட்ட அதே நேரம் அர்ஜுன்க்கும் சில சந்தேகங்கள் ஏற்பட்டது.
அவர்கள் இருக்கும் லடாக் பகுதியில்தான் கார்கில் உள்ளது. கார்கில் மலை சில உயரமான மலை முகடுகளை கொண்டது.. இங்கு தட்பவெப்பம் என்பது கோடையில் சுமாரகவும், பனி காலத்தில் அதிகமான , மற்றும் நீளமான பனி பொழிவும் கொண்ட காலாமாக இருக்கும்.
இதில் இரு நாட்டு எல்லைகளும் வேலி போடப்பட்டு இருக்கும்.. வேலிக்கு நடுவில் சிறு பாதை ஒன்றும் இருக்கும்.
வேலியை ஒட்டி சாதாரண காலங்களில் ரோந்து போகும் ராணுவத்தினர் , குளிர் காலங்களில் போக மாட்டார்கள்.. அது உறைய வைக்கும் பனி என்பதால் ஏதோ ஒரு நேரம் ஜீப்பில் வந்து பார்த்து விட்டு போவார்கள்.
இந்த நேரத்தில் தான் இரண்டு மூன்று முறை அர்ஜுன் ரௌண்ட்ஸ் வரும்போது அந்த முகடுகளில் நடமாட்டம் இருப்பதாக அவன் கண்களுக்கு பட்டது.. அவன் இதை தன் superior இடம் சொல்ல, அவர்கள் இருவரும் இந்த காலத்தில் யாராலும் நடமாட முடியாது என்று மறுத்து விட்டனர்.
ஆனால் அவன் உள்ளுணர்வு அதை மறுத்தது.. அவன் தன் கண்காணிப்பை அங்கே பலபடுதினான்.. ஆனாலும் தட்ப வெப்பத்தால் அவனால் எதிர்பார்த்த அளவு செயல்பட முடியவில்லை..
அவனின் உள்ளுணர்வு சொல்வது சரியா?
மழை பொழியும்
{kunena_discuss:1031}