மறுநாள் காலை ரியா எழும்போது செம ஃப்ரெஷ்ஷாகவே எழுந்தாள்…நேற்றைய தலைவலி அது இதென எதுவும் அவள் கவனத்தில் இல்லை…. இருந்த சூப்பர் வெதர், ஹக் செய்தபடி தூங்குற அவ ஹஸ்பண்ட்….அட்டென் செய்ய வேண்டிய கிரகபிரவேசம்….இவ்ளவுதான் அவ மைன்டில்….
எதிர் வீட்டோடு நார்மலாக பழகுவது போல் ஒரு சீன் க்ரியேட் செய்து கொண்டால்தான் அவங்க இங்க வந்து போறதும் இவங்க அங்க போய் வர்றதும் கல்ப்ரிட்க்கு கேஷுவல் விஷயமா ஃபீல் ஆகும்….இவங்க சேஃப்டிக்கு இப்படி ஏற்பாடு செய்துறுக்காங்கன்னு தோணாது என்பதற்காகத்தான் இந்த கிரகப்பிரவேசம். இருந்தாலும் ஃபங்க்ஷன் அட்டென் செய்ய ஆசையாகவே இருக்கிறது ரியாவுக்கு…
விவன் கூட எங்க போகவும் அவ ரெடி…
இழுத்து பிடிச்சு அவன கிளப்பி…..வொயிட் ஷேடில் வயலட் ப்ளூ இன்டிகோ க்ரீன்னு மல்டி கலர்ல பார்டர் வந்த ஒரு சேரி கட்டி இவளும் ரெடியாகி பங்ஷனுக்கு போயாச்சு….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அதே தெருவில் உள்ள இன்னும் சில ஃபேமிலி மக்களும் வந்திருக்க…….ஜெபர்சன் சௌந்தரி கசின்ஸ் என்ற பெயரில் செக்யூரிட்டி பீப்புளும் சுற்றி வர ….. ஃபங்ஷன் படு ஜோரா போய்ட்டு இருந்துச்சு….
விவன் அருகாமையில் இயல்பிலேயே கலகலக்க தோணும் அவளது தற்போதைய மனோபாவத்துக்கு….. வந்திருந்த மக்களும் அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு கலகலவென பேசி பழக….
ரியா விவனோட பழைய கிலுகிலுப்பையாகவே மாறியாச்சு.
வந்திருந்த ரெண்டு குட்டீஸ்க்கு ஆஸ்தான ஃப்ரெண்டாகி அவங்க வழியா அவங்க அம்மாக்களுக்கு அடுத்த வீட்டு அரட்டை பார்ட்னர் அளவுக்கு அந்த நேரத்துக்குள் இவள் ரெடியாக….
லேடீஸ்ட்ட பேசுறப்ப ஜென்ட்ஸ் கூட இருக்க முடியாதே…..ஆக அவ லேடீஸ் கூட்டத்திலும் விவன் வந்திருந்த ஆண்களிடமுமாய் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நேரம் எல்லோரையும் சாப்பாட்டுக்கு அழைத்தனர் ஜெபர்சன் தம்பதியினர்….. அவள் பேசிக் கொண்டிருந்த மக்களுடன் கேஷுவலாய் ரியாவும் பந்திக்கு கிளம்ப… சுற்று முற்றும் விவனை தேடினால்….
சிரித்தபடி வந்த சௌந்தரி “ உங்க சார் உங்கள தேடினாங்க…” என்றபடி மெல்ல உள்ளறைக்கு கூட்டி வந்தாள்….
அங்க அவளுக்கும் விவனுக்கும் இன்னும் சில சோ கால்ட் சௌந்தரி ஜெபர்சன் ரிலடிவ்ஸுக்கும் பந்தி….. “எல்லாமே ஒரே சாப்பாடுதான்…..ஸ்டில் உங்க ஃபூட்ல எதுவும் யாரும் மிக்ஸ் செய்துட கூடாதுன்றதால…. டைரக்ட்டா நம்ம கண்பார்வையிலேயே வச்சுறுந்த ஃபூட் இது……” என ஒரு விளக்கம் அதற்கு.
பந்தி முடிய மீண்டுமாய் அரட்டை கச்சேரி நடந்து கொண்டிருக்க…. அவளது ஆஸ்தான ஃப்ரெண்டான ரெண்டு குட்டீஸும் கப்பில் பாயசம் கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்…. இப்ப ஆசையா இந்த ப்ரியா ஆன்டிக்கும் ஒரு கப் எடுத்து வந்து கொடுக்க….
ரியாவும் குட்டீஸ் கூட சளசளத்தபடி அதை வாங்கிக் கொள்ள…. பேச்சு சுவாரஸ்யத்தில் சற்று நேரம் கழித்து அதை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்க போனவளை…
அவளது ட்ரேட் மார்க் சிரிப்புடன் வந்து கை பற்றிக் கொண்ட சௌந்தரி “இங்கயா இருக்கீங்க….. உங்கட்ட ஒரு விஷயம் கேட்கனும்” என்றபடி இவளை மீண்டுமாய் உள் அறைக்கு அழைக்க
நிமிர்ந்து சௌந்தரியை பார்க்கும் போதே விஷயம் பாயசம் பற்றியது என ரியாவுக்கு புரிந்து விட்டது.
கொஞ்சமே கொஞ்சம் அவளுக்கு இரிட்டேட் ஆனது நிஜம்……எல்லோரும் சாப்டுறதுதான…..அப்றம் என்னவாம்?
இதற்குள் உள்ளறைக்குள் வரவும் ரியாவிடமிருந்த பாயாசத்தை வாங்கிக் கொண்டு அடுத்த கப் பாயசத்தை அவள் கையில் கொடுத்தாள் சௌந்தரி.
அந்நேரமாய் அவளைத் தேடி அங்கே வந்தான் விவன். ரியா கொஞ்சம் எரிச்சலாகி இருந்தாளே…. சோ சிரித்தபடி “ ஆவி மந்திரவாதில்லாம் இப்டி பாயசத்தில் பாய்சன் கலந்துதான் நம்ம அட்டாக் செய்வாங்க போல…அவங்களுக்கு வேற வழியே தெரியாது பாருங்க “ என அவனிடம் கிண்டலடித்தாள்.
ரியாவுக்கு நடப்பது எதுவும் மனித செயல் என்ற நம்பிக்கை இல்லையே அதோட விளைவு இது…
“தென்காசி தான் வந்துட்டோம்ல….இனி ஒரு ப்ராப்ளமும் வராதுப்பா….இது தேவையில்லாத வேலை…” அவள் புலம்ப
“ஆவிதான் செய்துன்னே வச்சுகிட்டாலுமே….. விந்த வனத்துக்குதான அது வர சொல்லிச்சு….. நாம தென்காசியில் இன்னும் அந்த இடத்தை கண்டு பிடிக்கலையே ரியு…..அது வரைக்குமாவது கேர் ஃபுல்லா இருப்பமே….” எங்க எல்லாம் சரியாகிட்டுன்னு கவன குறைவா இருந்து ரியா ப்ரச்சனைல மாட்டிப்பாளோ என்ற நினைவில் விவன் இப்படி சொல்ல…
விட்டு சென்றிருந்த எல்லா பயமும் வந்து அப்பிக் கொண்டது ரியாவை…
‘ஆமால்ல… இன்னும் விந்த வனம் போகலையே இவங்க…..’
அவ்வளவுதான் அடுத்து அவனை விட்டு அவள் அங்கு இங்கு அசையவில்லை…. அவனை அடைகாக்க துவங்கினாள். அதோடு ஆன் த ஸ்பாட் விந்தவனத்துக்கு போகனும் என அடம் பிடிக்கவும் தொடங்கினாள்.
“விசாரிச்ச வரை இங்க யாருக்கும் அப்டி ஒரு இடமே தெரியலை…..இன்ஃபேக்ட் நிறைய பேருக்கு இது பாண்டிய தலை நகரம்…இங்க தான் பராக்கிரமர் இருந்து ஆட்சி செய்தார்னு கூட தெரியலை….” விவனின் இப்படி ஒரு பதிலில் ஒரு விதமாய் அப்செட் மூடிலேயே வீடு வந்து சேர்ந்தாள்.