(Reading time: 35 - 70 minutes)

த்தனை நேரம் அவளிருந்த full bloom நிலைக்கும் இந்த உர் மூஞ்சி நிலைக்கும் பார்க்க எப்படி இருக்கிறதாம் விவனுக்கு….

இவன் அவளிடம் பேச்சு கொடுக்க…..என்னமோ விந்த வனத்தை வெளிய தெரியாம ஒழிச்சு வச்சதே அவன்தான்றாப்ல இவ முறைக்க…..

அவளிருந்த சோஃபாவில் அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்து அவள் தோளோடு  இவன் கை போட்டால்…. வெடுக்கென எழுந்து போய் அடுத்த ரூமில் கிடந்த ஒற்றை  சேரில் போய் உட்காந்தாள்…

அங்கு தரையில் அவள் முன் அமர்ந்து அவள் மடியில் இவன் முகம் புதைக்க….. அதில் அந்த நொடி அவன் மீது உருகியவள்…. அவன் முடி கலைத்து….கண்ணில் பட்ட அவன் காய கட்டிற்கருகில் பாசமாய் இதழ் ஒற்றி…... அவன்  நிமிர்ந்து பார்க்கவும்….இதான் சான்ஸ் என சட்டென எழுந்து போய்விட்டாள்…

“ஏய் ராட்சசி ஏன்டி உனக்கு இப்டி கோபம் வருது….?” இவன் அவளை தேடி அவள் பின்னால் போக…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“நான் ஒன்னும் யார் மேலயும் கோபமா இல்ல…..” வெடுக்கென வருகிறது பதில்…

இதற்குள் கிட்செனுக்கு வந்திருந்தவள்…… “நான் வெளிய ரிவர்க்கு போகனும்…” என்றாள் இவனைப் பார்த்து…

பெர்மிஷன் கேட்கிறாள் என்பது அவனுக்கு புரிகிறது…

சின்னதாய் உதடுக்குள் சிரித்தான் விவன். அவளுக்கு சூழ்நிலை எரிச்சலாகிறதே தவிர…..கண்டிப்பா சேஃப்டி விஷயங்களை மீற மாட்டாள் என்பதும் அப்போது அவனுக்கு கன்ஃபார்மாக  புரிய…

கையில் தன் மொபலை எடுத்து  பார்த்துக்  கொண்டவன்….பின் பக்க கதவை திறந்தான்….மறக்காமல் அங்கிருந்த கேமிராவை ஆஃப் செய்தும் வைத்தான்…

அவன் கேமிராவை ஆஃப் செய்வதை பார்த்துக் கொண்டேதான் வெளியே போனாள் ரியா… கேமிராவ ஆஃப் செய்றான்னா என்ன அர்த்தம்…?

“எதாவது ரொமான்ஸ் அது இதுன்னு தொட்டீங்க…. அப்றம் இருக்கு…”  சொல்லிக் கொண்டே அவள் நடக்க….

“நிலவை பார்த்து  வானம் சொன்னது என்னை தொடாதே…” மிக மிக சோகம் போல பாடினான் அவளை இமிடேட் செய்தபடி அவளோடு நடந்த விவன்…

சட்டென அவன் புறம் திரும்பி  ஒற்றை விரல் நீட்டி “ இங்க பாருங்க அந்த மூவில ஒரு பொண்ண அவளுக்கே தெரியாம அவ அப்பாட்ட பந்தயம் கட்டி ஹீரோ கல்யாணம் செய்றதா போகும் கதை…… அது என்னமோ தப்பில்லன்றது போலவும் இருக்கும்…. எனக்கு சுத்தமா அதெல்லாம் பிடிக்காது…பொண்ணு என்ன ஆடா மாடா? நீங்க என்ன அப்டியா மேரேஜ் செய்துறுக்கீங்க…..இப்டில்லாம் பாடிகிட்டு….” அவள் பெண்ணியம் பேச

‘அடபாவி அந்த கால மூவிக்கெல்லாம் கதை படிச்சு வச்சுட்டு நம்மள இப்டி போட்டு வாங்குறாளே…’ என ஜெர்க் வாங்கிய அவன்…

“சரி உனக்கு பிடிச்ச கதை சொல்லு ….அதுக்கு ஏத்த டூயட் பாடுறேன்…”  இப்படியாய் கவ்ன்டர் கொடுக்க…

“ப்ச் போங்கப்பா…. எனக்கு எங்கயாவது வெளிய போகனும்….. நாம  இப்டி வீட்டுகுள்ளயே இருந்தா எப்டி அந்த விந்த வனத்த கண்டு பிடிப்போம்” என அவள் மனதின் ரியல் தேவையை பதிலாக சொன்னாள்…

அவன் அதற்கு எதுவும் சொல்லும் முன்….

“குற்றாலமாவது போவமாபா….. அது பீபுள் நிறைய வர்ற இடம் தான்…..விஷயம் எதுவும் தெரிய வரலாம்…. குறஞ்ச பட்சம் ஒரு இன்ஃபோவும் கிடைக்கலைனா கூட அருவியில குளிச்சுட்டாவது வரலாம்….அந்த ஃபால்ஸ் சூப்பரா இருக்கும்..”

“இதுக்கு முன்ன குற்றாலம் வந்திருக்கியா ரியா?” இவன் பேச்சை மாற்ற முயல…

“இல்ல ஃபோட்டோஸ் பார்த்திருக்கேன்….. ஒன்ஸ் ட்ரிப் ப்ளான் செய்தோம்…..லாஸ்ட் மினிட்ல வர முடியல…. இப்பவும் நீங்க கூட்டிட்டு போக போறது இல்ல…” இதற்குள்  ஆற்றின் கடைசி படியில் போய் அவள் அமர்ந்திருக்க…

“ஹேய் நான் கூட்டிட்டு போக மாட்டேன்னு சொன்னனா?” என்றபடி இப்போது இவன் அவளை அணைக்க…

“பச் தொடாதீங்கன்னு சொன்னேன்…” என சொல்லிக் கொண்டாலும் அவன் அணைப்பிற்குள்ளே அசையாது இருந்தவள்…

“செம ஃப்ரெஸ்ட்ரேட்டிங்கா இருக்குப்பா” என முனங்க….

ஒரு கணம் ஆறை சுற்று முற்றும் பார்த்தவன்….

“ஒன் மினிட் ரியு…” ஆற்றுக்குள் இறங்க…

“அச்சோ ….நோ வேண்டாம்…” பதறியபடி இவள் அவன் கையைப் பற்ற

“இது குளிக்கிற  இடம்தான் ரியு….ஆழம் கிடையாது….இங்க வா…” என அவள் பற்றிய கையை பற்றி அழைத்தான் அவன்…

“குற்றாலம்தான்னு இல்ல இங்க குளிச்சா கூட சூப்பராதான் இருக்கும்…..இப்ப இங்க குளி…. நான் அடுத்து கண்டிப்பா உன்ன குற்றாலம் கூட்டிட்டு போறேன்…”

அவனது கைகளை பற்றியபடி மெல்லவே ஆற்றுக்குள் இறங்கி இருந்தாள் அவள்….

 இடுப்பு வரை ஓடிய அந்த ஜில் நீரே அந்நேர மன நிலைக்கு பெரும்  ஃஸ்ட்ரெஸ் பஸ்டராய் இருக்க….. சற்று நேரம் அவன் கைகளுக்குள் நின்று அவள் விளையாடிய விளையாட்டு  வெகுவாகவே அவள் மனதை இலகுவாக்கி இருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.