(Reading time: 78 - 156 minutes)

தவைத் திறந்து ஜானவி வந்ததும், சட்டென எழுந்து கொண்டான் அர்னவ் கட்டிலிலிருந்து…

சந்தன நிறப்புடவையில், தேவதையாய் அவனருகே வந்தவள், அவனது பாதம் பணிய, அவன் தடுத்தான்…

“சகி… என்ன பண்ணுற?...”

“ஆசீர்வாதம் பண்ணுங்க என்னை….”

“லூசு… முதல்ல… எந்தி….” என்றவன், அவளை எழுந்து கொள்ள சொல்ல அவளும் எழுந்து கொண்டாள்…

அருகில் நின்ற மனைவியை ரசித்து பார்த்தான் அவன்…

அவன் ரசிப்பதை உணர்ந்தவள், விழி தாழ்த்திக்கொள்ள, அவன் அவளை கட்டிலில் அமர சொன்னான்…

அவனும் அவளருகில் அமர்ந்து கொள்ள, அவள் தன் விரல்களை பிசைய ஆரம்பித்தாள்…

“சகி….”

அவன் மென்மையாக அழைக்க, “ம்ம்ம்….” என்றாள் அவள்…

“என்னைப் பாரு….”

“ம்ம்… ஹூம்ம்….”

“ஹேய்… பாருடி….”

அவன் கெஞ்ச, “நீங்க எனக்கு முதல்ல விஷயத்தை சொல்லுங்க…” என்றாள் அவள்…

“எந்த விஷயம்டா?...”

“தெரியாத மாதிரி நடிக்காதீங்க… இன்னைக்கு சொல்லுறேன்னு சொல்லி இத்தனை நாள் சொல்லாம இருந்தீங்கள்ள அந்த விஷயத்தைதான் சொல்லுங்க…”

“ம்ம்….. இப்பவே சொல்லணுமா?...”

“ம்ம்… ஆமா… எத்தனை நாள் காத்திருக்கேன்னு தெரியுமா?.. தலையே வெடிச்சிடும் போல இருக்கு… ப்ளீஸ்… கார்த்தி… சொல்லுங்க…”

அவள் சொல்லிக்கொண்டே, அவனை நெருங்கி அமர, அவனுக்கு தேகம் படபடத்தது…

அவன் எதுவும் பேசாது அவளையேப் பார்த்துக்கொண்டிருக்க,

“என்னாச்சு கார்த்தி….” என்றாள்

“நீ இப்படி பக்கத்துல வந்து கேட்டா, நான் ஃப்ரீஸ் ஆகாம வேற என்ன செய்வேன்….”

அவன் அவளருகே சற்றே குனிந்து கூற, அவள் முகத்தில் தோன்றியது வெட்கம்…

“ம்ம்… ஹூம்… ப்ளீஸ்… கார்த்தி….”

அவள் தன் முகம் மறைத்துக்கொள்ள,

“ப்ளீஸ்டி… இப்படி எல்லாம் சிணுங்காத… என்னால வெயிட் பண்ண முடியாது…”

அவன் சொல்லி முடித்ததும்,

“அன்னைக்கும் இப்படித்தான் சொன்னீங்க… இன்னைக்கும் அப்படித்தான் சொல்லுறீங்க… எதுக்கு வெயிட் பண்ணுறீங்க?... எனக்கு புரியலை நீங்க சொல்லுறது?...”

அவள் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு கூற, அவனுக்கோ சிரிப்பு வந்தது…

“போங்க… சிரிக்காதீங்க…”

அவள் தன் முகம் திருப்பிக்கொள்ள,

“இப்போ என்ன உங்கிட்ட நான் சொல்லணும்… அவ்வளவுதான?...”

அவன் கேட்க அவள் அமைதியாக இருந்தாள்…

“இனி யாருமே வெயிட் பண்ண வேண்டாம்… சரியா?...” என்றவன்,

“கொஞ்சம் இரு…” என எழுந்து சென்றவன், அவளின் முன் ஒன்றை நீட்ட, அவள் விழித்தாள்…

“கார்த்தி… இது?....”

அவள் விழிக்க, “வாங்கிப் பாரு…” என்றான் அவன் புன்னகையோடு…

அவளும் அவனிமிருந்து அதை வாங்கினாள்…

அந்த கவரைப் பிரித்து படித்து பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…

கண்கள் நிறைந்து நீர் இப்பவோ அப்பவோ என விழத் தயாராக, அவன் அவளருகே வந்து நின்றான்…

“ம்ம்… இப்போ சந்தோஷமா என் சகிக்கு?...”

“கார்த்தி…. இது….” அவளுக்கு பேச்சே வரவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.