“ஏண்டா அவ தான் அழறான்னா அவளை சமாதானப்படுத்தாம நீயும் கூட சேர்ந்து அழுதுட்டிருக்குற?..”
“வேற என்ன செய்ய?... நீங்க தான் பேசமாட்டிக்குறீங்களே?...”
அவன் குழந்தை போல் முகம் தூக்கி வைத்துக்கொள்ள,
“என்னடா இது கடல்ன்னு பேர் வச்சதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குற?...”
“என்ன சிஸ் சொல்லுறீங்க?...”
“பின்ன தண்ணீரை பொங்க பொங்க அள்ளித் தெளிக்குறியே…”
“ஹாஹா…” அவன் சிரிக்க, சரயூவும் சிரித்தாள்…
“என்னடி நீ மட்டும் சிரிக்காம இருக்குற?...”
சரயூ ஜானவியைப் பார்த்து கேட்க, “நீங்க சிரிக்குறதை ரசிச்சிட்டிருக்கேன்..” என்றாள் அவள்..
“அடியே… அடியே.. போதும்டி… முடியலை…”
“எங்களாலயும் தான் சிஸ் முடியலை…” என்றான் அர்னவும்…
“என்னடா சொல்லுற?...”
“அங்க பாருங்க மாமா உங்களையே சைட் அடிக்குறதை…”
ஜானவி சரயூவின் அருகில் வந்து கிசுகிசுப்பாக கூற,
“அடிங்க… பக்கிகளா… ஓடிப்போங்க….” என்று இருவரையும் விரட்டினாள் அவள்..
“பாருங்க கார்த்தி… உண்மையை சொன்னா அடிக்க வராங்க…”
“அதான… சிஸ்… ஜானு உண்மையை தான சொன்னா?.. அதுக்கு எதுக்கு அடிக்க வரீங்க… வர வர நல்லதுக்கே காலம் இல்லப்பா?...”
அவன் அலுத்துக்கொள்ள, அவன் முதுகில் ஒன்று போட்டாள் அவள்….
“அய்யோ சிஸ்… வலிக்குது….”
“நல்லா வலிக்கட்டும்… அக்கான்ற நினைப்பு இல்லாம நீயும் அவ கூட சேர்ந்து கிண்டல் பண்ணிட்டிருக்குற?...”
“அதெல்லாம் சும்மா சிஸ்… ஒரு டைம் பாசுக்கு…”
“ஓஹோ… உங்க டைம் பாசுக்கு நான் தான் கிடைச்சேனா?...” என்றவள் மீண்டும் அடிக்க கை ஓங்க, அவளிடமிருந்து தப்பித்து ஓடினான் அர்னவ்…
கலகலவென்று சிரித்துக்கொண்டிருந்த மனைவியையே தூரத்தில் இன்னமும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் திலீப்…
எதேச்சையாக சிரித்துக்கொண்டே அவள் அவன் இருக்கும் பக்கம் பார்க்க, அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான் புன்னகையோடு…
“ம்ம்…. நடத்துங்க நடத்துங்க…” ஜானவி சரயூவின் தோள் மீது கைவைத்து அவளை கேலி செய்ய,
“போடி… லூசு….” என்றபடி அவ்விடம் விட்டு ஓடினாள் சரயூ…
அனைவருக்கும் துணி எடுத்துவிட்டு கடைசியாக அர்னவிற்கும் ஜானவிக்கும் எடுக்க ஆரம்பித்தனர்…
அர்னவிற்கு பட்டு வேஷ்டி சட்டை எடுத்துவிட்டு, அவளுக்கு எடுக்கும்போது அவள் அவனைத் தேட அவன் சற்று தூரத்தில் நிற்பது புரிந்தது…
பின்னர் அவனைக் கண்களால் அவள் அழைக்க, அவனும் அவளருகில் வந்தான்…
“உங்களுக்கு பிடிச்ச ஒரு புடவையை எடுத்து கொடுங்க…”
அவள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல கூற, அவன் அவளைப் பார்த்தான்…
அவனின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தவள்,
“ப்ளீஸ் கார்த்தி… எல்லாரும் இருக்குறாங்க…” என்று சிணுங்க,
“சரிடா…” என்றான் அவனும்…
பின்னர் அவளுக்குப் பொருத்தமான ஒரு புடவையை தேர்ந்தெடுத்தவன், அவளிடம் அதை கொடுக்க, அவள் அதனை ஆசையாக தொட்டு பார்த்தாள்..
“கண்ணாடியில வச்சுப் பார்க்குறீயா சகி?...”
“ம்ம்.. ஹூம்….”
“ஏண்டா பிடிக்கலையா?..”
“அப்படி சொன்னேனா நான்?... முகூர்த்தப்புடவையை முகூர்த்தம் அப்போ தான் கட்டணும்…”
“ம்ம்… அப்போ சரிடா…” என்றவனின் மனதும் அந்த நாளுக்காக ஏங்க துவங்க,
அவள் மெல்ல விழி உயர்த்தி அவனைப் பார்க்க, அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்திருந்தான்…
இருவரும் பார்வையை விலக்கிக்கொள்ளவே தோன்றாது சிலையாக நின்றிருக்க,
“ம்ம்…கும்…. போகலாமா தம்பி… நேரமாச்சு…” என்றனர் ஜனனியும், சரயூவும் கேலியாக அர்னவினைப் பார்த்தபடி…