(Reading time: 78 - 156 minutes)

ன்ன திலீப்… நீங்க… இப்படி பார்த்துட்டே இருக்குறீங்க…”

“……………………….”

“யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…?....”

“………………………”

“அந்த வாண்டுங்க என்னையே கிண்டல் செய்யுறாங்க தெரியுமா?...”

“………………………”

“அய்யோ… வெட்கமா போச்சு…”

“……………………..”

“எல்லாம் உங்களால தான்… போங்க….”

சரயூ திலீப்பிடம் சிணுங்கிக்கொண்டே கூற, அவன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்…

“என்ன திலீப்… நான் பேசிட்டே…..”

சொல்லிக்கொண்டே போனவள், அவன் பார்வையை உணர்ந்து தலை கவிழ்ந்து கொள்ள,

அவளின் முகம் நிமிர்த்தினான் அவன்…

“ப்ளீஸ் திலீப்… யாராச்சும் வந்துடுவாங்க… வேண்டாம்….”

“நான் ஒன்னும் செய்ய மாட்டேன்….”

அவன் பதிலில் சற்றே புருவம் உயர அவள் அவனைப் பார்க்க,

“நீ ரொம்ப அழகா இருக்குற… அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்… வேற ஒன்னும் இல்லை….” என்றான் அவன் இலகுவாக…

“ஓ…. சரி…” என்றவள், முகம் வாடிப்போனவளாக அங்கிருந்து நகர முயன்ற போது, அவள் கரங்களைப் பற்றினான் அவன்…

“அதான் சொல்லிட்டீங்கல்ல… இன்னும் என்ன?...”

திரும்பாமல் அவள் கோபமாக கேட்க,

“இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்… அதான்…” என்றான் அவன் மெதுவாக…

“சரி… இப்போ சொல்லுங்க…”

சரயூ வேகமாக திரும்ப, அவன் சற்று நேரம் அவளையேப் பார்த்திருந்தான்…

அவனிடமிருந்து பதில் வராது போகவே, அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் அவளையே பார்ப்பது புரிந்தது…

“சொல்ல வந்ததை சொல்லுங்க… வேலை இருக்கு… நான் போகணும்…”

அவள் மீண்டும் முகம் தூக்கி வைத்துக்கொண்டு கூற,

“ம்ம்ம்…..” என்றான் அவன்…

“சொல்லுங்க திலீப்… நேரமாகுது…”

“சரி என்னைப் பாரு… சொல்லுறேன்…”

“உங்களை தான் பாக்குறேன் சொல்லுங்க…”

“நான் உன் முன்னாடி நிக்குறேன்… நீ சைடா பார்க்குற….”

“அய்யோ… சரி சொல்லுங்க…” என்றவள், அவனை நேரடியாக பார்க்க,

“ஐ லவ் யூ சரயூ…”

அவன் தன் காதலை வெளிப்படுத்த, சற்று நேரம் எதுவுமே பேசவில்லை அவள்…

அவளின் மனநிலை புரிந்தவன் போல், “கேட்டுச்சா சரயூ?...” என்று கேட்க, அவளிடமிருந்து பதில் இல்லை…

“கேட்கலைன்னா என்ன பண்ணப்போறீங்க?...”

கேலியுடன் அவள் கேட்க,

“திரும்பவும் சொல்லுவேன்….” என்றான் அவனும்…

“அப்பவும் கேட்கலைன்னா?...”

“ம்ம்… அப்பவும் கேட்கலைன்னா?......”

“ம்ம்ம்… சொல்லுங்க அப்போ என்ன பண்ணுவீங்க?...”

“வேற என்ன பண்ண முடியும்?... புரியுற பாஷையில சொல்ல வேண்டியது தான்…”

“ஹாஹா… அதென்ன புரியுற பாஷை?...” அவள் கலகலவென்று சிரிக்க, சட்டென அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் திலீப் வேகமாக…

அவளின் காதோரம், “இந்த பாஷையும் புரியலைன்னா….” அவன் இழுக்க, அவள் “அய்யோ போதும்…” என்றபடி அவனோடு ஒன்றி போனாள் வெட்கத்துடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.