(Reading time: 78 - 156 minutes)

ந்திர வேத முழக்கங்கள் ஐயர் கூற, சுற்றிலும் சொந்த பந்தங்கள், பெரியவர்கள் என குழுமியிருக்க,

மாப்பிள்ளையை கைப்பிடித்து அழைத்து வந்தான் திலீப்…

அவன் அமர்ந்ததும், பொண்ணை அழைச்சிட்டு வாங்க, என்ற ஐயரின் குரல் கேட்டு,

சரயூவும் ஜனனியும் ஜானவியை அழைத்து வந்தார்கள்…

அவள் வரும் பாதை பார்த்து, விழி வைத்திருந்தவன், அவள் வந்த்தும், அவளை பார்த்தான்…

காலில் அவன் எடுத்து கொடுத்த கலகல கொலுசு, நேற்று வைத்துக்கொண்ட மருதாணி, அவளின் பாதமெங்கும் அலங்கரித்திருக்க, தழைய தழைய அவன் தேர்ந்தெடுத்த புடவை அடுத்து அவன் கண்களில் பட்ட்து…

அதை நேர்த்தியாக அவள் அணிந்திருக்க, மருதாணியும், வளையலும் மாறி மாறி அவளின் தளிர்க்கரங்களில் குடிகொண்ட்து போதாதென, ஒரு வண்ணப்பூச்செண்டும் அவளது கரங்களுக்குள் இருக்க, கழுத்தில் மெல்லிய நகைகள் அணிந்து, முகத்தில் வெட்கத்தினையும், அழகினையும் ஒருங்கே கொண்டு, தலையில் மலரினை சூடியிருந்தாள் அவள்..

அவன் எடுத்து கொடுத்த அந்த பிங்க் நிற புடவையில் தாமரையே நடந்து வருகிறதோ என்றென்ணி வியந்து போய் அமர்ந்திருந்தான் அவன்…

முகத்தில் தோன்றிய வெட்கம், அந்த தாமரை அழகையும் தள்ளிவிடுமோ என்றே தோன்றியது அவனுக்கு…

மெல்ல நடந்து வந்து அவனருகில் அவள் அமர, அவன் உடல் படபடத்தது…

மந்திரங்கள் ஒரு பக்கம் இருவரும் கூற, அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை…

“கெட்டி மேளம் கெட்டி மேளம்….” என்ற கூவல் எழ,

தன் கைகளில் மங்கலநாண் தரப்பட, நடுங்கும் விரல்களோடு அதை வாங்கியவன், அவளைப் பார்த்திட, அவள் தலை குனிந்து அதை ஏற்க தயாரானாள்… விழி மூடி தனக்குள் போராடியபடி…

பூத்தூவல்கள் இருவரின் மேலேயும் விழத் தயாராக, அவன் அவளருகில் குனிந்தான்…

அவள் கழுத்தருகே அவன் கரம் செல்ல, அவளின் சுவாசம் எகிறியது…

“சகி….” அவனின் அழைப்பு அவளின் செவியோரம் தீண்ட, அவள் விழகள் பிரிந்த்து அதற்கு மேலும் முடியாமல்…

அருகே தெரிந்த அவனின் முகம், பட்டு வேஷ்டி சட்டையில், இருந்த அவனது கம்பீரம், அவனது அழகு விழி, அத்தனையிலும் அவள் சிக்கிக்கொள்ள, அவன் கரங்கள் அவளை நெருங்குவது புரிந்தது…

“கார்த்தி……….” அவள் உதடுகள் உச்சரிக்க நடுங்கும் விரல்களை கட்டுப்படுத்திக்கொள்ள,

அவன் அவள் விழி பார்த்தபடி, மங்கல நாணை அவளுக்கு சூட்ட, அவள் ஸ்பரிசம் பட்டு மேனியெங்கும் அதிர்வு எழ, அருகில் தெரிந்த அவன் விழிகளில் அவள் தன்னை தொலைக்க, தானாகவே அவள் விழிகள் கலங்கியது…

“என் சகி….” என்றபடி

அவன் மூன்று முடிச்சை போட்டு முடிக்க, அவள் விழிகளிலிருந்தும் மூன்று சொட்டு கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்தோடியது…

“சகி… ப்ளீஸ்…” அவனது விழிகள் கெஞ்சி கலங்க, தனது விழிகளை துடைத்துக்கொண்டாள் அவள்…

குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் அவன் வைத்த போது, அவனது கண்ணீர்த்துளி அவளது கன்னத்தில் பட்டுத் தெறிக்க, அவளோ கலங்கிய விழிகளுடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்…

அவன் தன்னை சமாளித்துக்கொள்ள, அவளும் தன்னை சமாளித்துக்கொண்டாள்…

அக்னியை எழுந்து வலம் வந்தவர்களின் மேல், ஆயிரம் பூத்தூவல்கள் விழுந்திருக்க, பெற்றவர்களின் ஆசியினை வாங்க அவர்களிடம் சென்றனர்…

மனமார, உள்ளம் குளிர வாழ்த்தினர் அவர்களும் தங்களது பிள்ளைகளை கண்கள் கலங்க நெஞ்சம் நெகிழ…

சரயூவிடமும், திலீப்பிடமும் ஆசீர்வாதம் வாங்க முற்பட, திலீப் அர்னவினையும், சரயூ ஜானவியையும் தடுத்து அணைத்துக்கொண்டனர் வாழ்த்து சொல்லி…

பின்னர் சம்பிரதாயங்களும், சடங்குகளும் முடியும் வரை இருவருக்குமே பேச நேரமில்லை…

சந்திரன், வானில் தோன்றி, நட்சத்திரத்தினை குளிர்வித்துக்கொண்டிருக்க, தனதறையில், தன்னவளுக்காக காத்திருந்தான் அர்னவ்…

ஏனோ வானில் இருந்த குளிர்ச்சி அவனில் இல்லை… ஒரு வித படபடப்பும், பயமும் குடிகொண்டிருந்தது அவனிடத்தில்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.