(Reading time: 78 - 156 minutes)

னனியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதும்,

“சரி மாமா… நான் போயிட்டு வரேன்…” என்றவன் ஜானவியின் தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டிருந்த போது,

ஜானவியின் அன்னையும், ஜனனியும் வர, அவர்களிடமும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றவனின் பின்னேயே ஓடினாள் ஜானவி…

அவளைக் கண்டதும் முகம் மலர்ந்து போனவன் “ம்ம்… வரேண்டா…” என்றான்…

“ம்ம்… சரிங்க…”

“உடம்பை பார்த்துக்கோ…”

“நீங்களும்…”

“ம்ம்.. கிளம்புறேண்டா…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“சரிங்க… வீட்டுக்கு போனதும் போன் பண்ணுங்க…”

“கண்டிப்பாடா…”

“பார்த்து போயிட்டு வாங்க…”

“சரிடா…”

அந்த பத்தடி தொலைவில் நின்ற பைக்கை அவன் அடைவதற்குள் நூறு முறை விடைபெற்றுக்கொண்டார்கள் இருவரும்…

அவனுக்கோ போக மனமில்லை… அவளுக்கோ அவன் செல்வதில் உடன்பாடில்லை… காதலில் விழுந்த இதயங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மறுத்து அங்கே போராட,

அந்த மௌனத்தை கலைத்தாள் ஜானவி…

“கார்த்தி…..”

“ம்ம்… சொல்லுடா….”

“நான் கேட்டா எனக்கு பதில் சொல்லுவீங்களா?...”

“கண்டிப்பா சொல்லுவேன்… ஆனா நான் கொஞ்ச நாள் கழிச்சு பதில் சொல்ல வேண்டிய சில கேள்விகளும் இருக்கு… அதை மட்டும் கேட்டுடாத… ப்ளீஸ்…”

“ம்ம்… ஹூம்….”

அவளின் சிணுங்கல் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க,

“லூசு… நான் தான் சொல்லுறேன்னு சொன்னேன்ல… அப்புறம் என்ன?...”

“ப்ளீஸ்… கார்த்தி… எத்தனை நாள் தான் சஸ்பென்ஸ் வைப்பீங்க?....”

“வெயிட் பண்ணுடா… இன்னும் கொஞ்ச நாள் தான்… கல்யாணம் மட்டும் முடியட்டும்… சொல்லிடுறேன்…”

“அதுக்கு இன்னும் ஒருமாசம் இருக்கும்மா…”

“சீக்கிரம் ஓடிடும்டா…”

“போங்க… அதெல்லாம் போகாது… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமா போறது எனக்குத்தான தெரியும்…”

அவள் நாள்தோறும் மனதிற்குள் உணர்ந்துகொள்வதை இன்று வெளிப்படையாக கூறிவிட, அவன் முகம் மலர்ந்தது…

“சகி…………………”

அவன் மென்மையாக அழைக்க, அவளுக்கு அப்போது தான் உறைத்தது தான் கூறிய வார்த்தைகள்…

“சகி….” என்றவன் திரும்பி அவளை நோக்கி வர, அவள் இதயம் படபடத்தது…

“இல்ல நான்…. வந்து… ஏதோ…. தெரியாம….”

அவள் தன் விரல்களை பிசைந்து கொண்டே அவசர அவசரமாய் கூற, அவன் அவளருகே வந்து நின்றான்…

அவளுக்கு எதிரே நின்றாலும் அவனது இடைவெளி, அவளுக்கு இம்சையினையும், ஆசுவாசத்தையும் சேர்ந்தே கொடுத்தது…

தலை குனிந்து நின்றவளின் முகத்தருகே குனிந்தவன்,

“என்னைப் பார்க்கமாட்டியாடா?...?” எனக் கேட்க, அவள் தன் முகம் மறைத்தாள் வேகமாய்…

“சகி… ப்ளீஸ்… என்னைப் பாரு….”

“ஹ்ம்ம்…ஹூம்….”

“சீக்கிரம் அங்க வந்துடு சரியா?... நீ இல்லாம என்னால…..”

அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள்,

“அடடா… இந்த கொசுத்தொல்லை தாங்கலையே… சூ சூ… போ… போ…”

கைகளை ஆட்டிக்கொண்டே கொசுவை விரட்டுகிறேன் என்றபடி வந்து நின்றாள் ஜனனி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.