(Reading time: 78 - 156 minutes)

சில நாட்களுக்குப் பிறகு,

“நியூஸ் பார்த்தீயா?... எக்ஸாம் போட்டிருக்காங்க… இந்த தடவை கண்டிப்பா நீ பாஸ் பண்ணனும் சரியா?...”

அழுத்தமாக அர்னவ் கூற, அவளோ யோசனையில் இருந்தாள்…

“ஹே… என்னாச்சு?... லைனில் இருக்குறியா இல்லையாடா?...”

“ஆ… இருக்குறேன் கார்த்தி….”

“என்ன யோசனை பண்ணுற?...”

“இல்ல… அப்பா ஆசையே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்னு தான்… அதை நிறைவேத்தாம போயிடுமோன்னு உள்ளுக்குள்ள ஒரு கவலை இருந்துட்டே இருந்தது…”

“எனக்குப் புரியுதுடா உன் மனசு… கல்யாணத்துக்கும் நாள் இன்னும் குறிக்கலை… அதுக்குள்ள எக்ஸாமும் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்துடும்னு தான் நினைக்கிறேன்…”

“ஆமா கார்த்தி… நாள் நிறைய இருக்கு… ஜனனி கேட்டுட்டே இருந்தா… அவ கிட்ட முதல்ல இத சொல்லணும்… மேடம் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி, பெரிய ஆஃபீசர் ஆகணும்னு ஆசப்படுறாங்க…”

“ஓ… நல்ல விஷயம் தான்… சிஸ்கிட்ட சொல்லி எழுத சொல்லு…”

“கண்டிப்பா கார்த்தி….” என்றவள், சற்று நேரம் தயங்கி நிற்க, அந்த தயக்கத்திற்கான காரணம் அவனுக்கும் தெரியாமல் இல்லை…

“கார்த்தி… வந்து… நான்…”

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும் ஜானவி… ப்ளீஸ்… இந்த ஒரு விஷயத்துல என்னை கம்பெல் பண்ணாத…. விட்டுடேன்… எனக்கு இதுல இஷ்டம் இல்லை…”

சகி மறைந்து ஜானவி வந்திட்டதை கவனித்தவளுக்கு கோபம் முணுக்கென்று உதயமானது…

“சரி நான் எதுவும் சொல்லலை… உங்க விருப்பம்…”

“ம்ம்ம்… கோபமா இருக்குறீயா?....”

“நான் ஏன் கோபப்படணும்?...”

“இல்ல நீ கோபமாதான் இருக்குற…. எனக்குத் தெரியும்…”

“சரி… நான் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது… நான் போய் ஜனனிகிட்ட விஷயத்தை சொல்லுறேன்…”

“சிஸ் உங்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்களா?....”

“இல்ல… இன்னும் மூஞ்சியை தூக்கிதான் வச்சிட்டிருக்குறா…”

“நான் பேசி பார்க்கவா?...”

“இல்ல வேண்டாம்… நானே சமாதானம் செய்துக்குறேன்….”

‘ம்ம்…. சரி… எப்போ இருந்து படிக்க ஸ்டார்ட் பண்ணப்போற?...”

“எதுக்கு கேட்குறீங்க?...”

“சும்மாதான் சொல்லேன்…”

“ஒரு டைம் டேபிள் போட்டுட்டு ஆரம்பிக்கணும்… அதான் இப்போ ஜனனியும் இருக்குறால்ல… அவகூட சேர்ந்து ஜாயின் பண்ணி படிச்சா ஈசியா புரிஞ்சிடும்…”

“சிஸ் கூட கம்பைன் ஸ்டடியா அப்போ?...”

“தெரியலை… மேபி…”

“சரி… ஓகே… நீ சிஸ்கிட்ட விஷயத்தை சொல்லு… எனக்கு ஒரு வேலை இருக்கு… அப்புறம் பேசுறேன்…”

“சரி…. பார்த்துக்கோங்க….” என்றவளும், சற்று நேரம் அவன் எதாவது பேசுவான் என்று காத்திருந்தாள்… அவன் எதுவும் பேசாமல் இருக்கவே, அழைப்பை துண்டித்தாள் சிறு கோபத்தோடு…

காலையிலேயே முகச்சுருக்கத்தோடு வந்தமர்ந்த ஜானவியிடம் என்ன ஏது என்று கேட்க நினைத்து பின் தன் முடிவை மாற்றிக்கொண்டாள் ஜனனி…

“ஜன்னீனீனீனீனீ………..”

உரக்க கத்தினாள் ஜானவி…

“காது கேட்குது… சொல்லுங்க…..”

‘ஹேய்… நான் தான் சாரி கேட்டேன்லடி… இன்னும் ஏண்டி இப்படி மூஞ்சியை தூக்கி வைக்குற?...”

“ஆமா எனக்கு ஆசை…. அதான்…”

“ப்ளீஸ் ஜனனி… கஷ்டமா இருக்கு…. எனக்கு….”

ஜானவி கண்கள் பனிக்க கூற, “அப்போ எனக்கு கஷ்டமா இருந்துருக்காதா சொல்லு?....” என்றாள் ஜனனி கோபமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.