"ஏ...இல்லம்மா!உன் மேலே எந்தத் தப்பும் இல்லை!"-அவளது கன்னம் பற்றி சமானதானம் செய்ய முனைந்தான் ருத்ரா.
"இல்லை...நான் அவர் பேச்சை கேட்டிருக்கணும்!ஒருவேளை,அவர் உயிரோட இருக்கும் போதே இது எனக்கு தெரிய வந்திருந்தா...இந்நேரம் அவர் சந்தோஷமா என் கூட இருப்பார்ல!"-அதுநாள் வரை தன் மனவலிகளை கொட்டி தீர்த்த மாயாவினை அவன் கண்டதில்லை.அந்நொடி அனைத்தும் மறந்துப் போக,அவளை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான் ருத்ரா.
"உன் மேலே எந்தத் தப்பும் இல்லைம்மா!என்னை நம்பு!"-அங்கு சில நொடிகள் கனத்த மௌனம் நிலவியது.அவள் ஏதும் பேசவில்லை.மனவெழுச்சி உச்ச நிலையை அடைய,அப்படியே மயங்கி சரிந்தாள்.
"மாயா!"-பதறிக்கொண்டு அவளை தாங்கினான் ருத்ரா.
"ஏ..மாயா!என்னம்மா ஆச்சு?"
"............."
"மித்ரா..!"-பதறியப்படி கத்தினான் அவன்.அவன் குரல் கேட்டு ஓடி வந்தவள்,நிலைக்கண்டு திகைத்து நின்றாள்.
"அக்கா!"
"மித்ரா டாக்டருக்கு போன் பண்ணு"
"சரி..சரி மாமா!"-அனைத்தும் ஒரு நொடியில் பரபரப்பானது!!இனி நிகழப்போவது தான் என்ன??சூழப்பட்ட புத்தம் புதிய வியூகத்தை எவ்வாறு தகர்க்கப் போகிறாள் இவள்???
தொடரும்
{kunena_discuss:1104}