(Reading time: 15 - 30 minutes)

"இந்த விடியலுக்காக தானே காத்திருந்தீங்க?இன்றோட உங்க மேலே நான் வைத்திருந்த பகையிலிருந்து நான் உங்களுக்கு விடுதலை அளிக்கிறேன்!இனி,எந்த ஒரு அவமானமும் உங்க வாழ்க்கையில நுழையாது!காத்திருந்த விடியல் தோன்றியாச்சு!"-என்று ஆதவனைச் சுட்டினாள் மாயா சற்றே திணறிய குரலில்.காயத்ரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.ஆம்..!அவ்விடியலுக்காக தான் எத்தனை யுத்தங்கள்!போராட்டங்கள்!!

"நான் வந்த கடமை முடிந்தது!"-என்றவளின் வாக்கியம் யாவரது மனதிலும் குழப்பத்தினை மட்டும் விளைவித்தன.

"திரும்பிப் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!இது எனக்காக விடியல்!"-அவளுடைய வாக்கியத்தில் ஒருவித நிம்மதி!!!

"இல்லை...மாயா!நான் சொல்றதை கேளும்மா!"

"மாயா!பைத்தியக்காரத்தனம் பண்ணாதே மாயா!உனக்காக..நாங்க..."

"மாயா!யாருக்காவும் வாழ மாட்டா அர்ஜூன்!"-என்றாள் கசப்பான புன்னகையுடன் செங்குருதிப் படித்த தனது கரத்தை அவனை நோக்கி உயர்த்தியப்படி!

"அவ பிடிவாதம் உயிரோட இருக்கிற வரை,அவளுடைய நிழலைக் கூட யாராலும் நெருங்க முடியாது!"-என்றவள் இறுதியாக ஒருமுறை புன்னகைப் பூத்தாள்.விரைந்து அருகிலிருந்த தனது காரில் ஏறினாள்.விரைந்து அதை உயிர்பித்தவள்,அம்மலை முகட்டினை நோக்கி அதை வேகமாக செலுத்தினாள்.அது முகட்டிலிருந்து அப்படியே சரிந்து கீழே விழுந்தது!!

"மாயா!"-என்ற அவள் நாமத்தின் ஓம்காரம் மட்டும் எண்திசையிலும் அங்கு ஒலித்தப்படி இருந்தது.!

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.