சரி டா செல்லம் கோப படாதீங்க. இப்ப சொல்லு ப்ளிஸ் உனக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும் ஆனால் காரணம் தெரியாதே சொல்லு ப்ளிஸ்
நீங்க என்னுடைய மாமாவின் மகன் அதனால் தான் நீங்கள் எனக்கு அறிமுகம் இந்த உறவு இல்லை என்றால் உங்களை எனக்கு தெரிந்திருக்காது.ஒதுக்குறேன் ஆனால் காதலிப்பதுக்கு அந்த காரணம் போதுமா என்ன. காதல் வேற பாசம் வேற உதாரணத்துக்கு உங்களுக்கு என் மேல இருந்தது பாசம் ஆனால் எனக்கு உங்க மேல் இருந்தது காதல் மயக்கம் உங்களுக்கான எனக்குள்ள ஒரு தேடல் தவிப்பு நீங்க வேண்டும் என்ற ஏக்கம் உங்களை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு செல்லும் ஏங்கும்.
ஏண்டி எனக்கு மட்டும் உன் மேல மயக்கம் இல்லையோ இது நம்ம கீர்த்தி தப்பா பாக்க கூடாது னு நினைச்சு என்னையே கண்ட் ரோல் செய்துப்பேன் எனக்கும் ஒரு வாரம் உன்னை பாக்க வில்லை என்றாலும் ஏன் வரலை வரலைனு அம்மாவ தொல்லை பண்ணுவேன் தெரியுமா
அப்ப ஏன் நான் வந்தா நீங்க வீட்டில் இருக்காம ஊர சுத்த போவீங்களாம்
அது தான் சொன்னேனே கீர்த்தி உன்கிட்ட சண்டை போட்டாலும் நீ என் பக்கத்துல வரும் போது அன்னைக்கு பார்த்த காட்சி கண்ணுக்குள்ளே வரும் என்ன செய்ய சொல்ற பின்ன இப்ப மாதிரி என் கை போகும் அதனால் தான் என்றான். வாய் பேசினாலும் அவன் கைகள் வேறு மொழி பேசியது
ச்சி போங்க மாமா
ஹெலோ மேடம் இதுக்கே வெக்க பட்டா எப்படி இன்னும் நிறைய இருக்கு. எதிர் பாக்கவே இல்ல டி அன்னைக்கு. சரி விடு உன்னை அன்று இரவு அணைத்த பிறகு எப்பா என்னால முடியவே இல்லை அடுத்து தான் உன்னை விரும்பினேன் என்று தெரிந்தது. ஆனாலும் உன் படிப்பு வீணாக கூடாது என்று பொறுமையாக இருந்தேன். போங்கவா அதுக்கு இனி வாய்ப்பே இல்லை அம்மா தான் நல்ல நேரம் பார்த்து சொன்னாங்க தானே
தாத்தா உன் டைரியை என்கிட்ட குடுத்துடாறு கீர்த்தி
அவர் தான் அதை திருடியதா வாசித்து விட்டீர்களா எல்லாவற்றையும்.
ஹ்ம் வாசித்து விட்டேன். இனியும் பேசி கொண்டே இருக்கணுமா.
நானா பேச சொன்னேன்
அதான பார்த்தேன் நீ தான் ரவ்டி ரங்கமா ஆச்சே. அன்னைக்கு மாதிரியே ஒரு முத்தம் குடேன் நெஞ்சில் அப்படியே ஜிவ்வுனு இருந்தது
அதன் பின் நடந்த அனைத்துக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பு அவள் இதழ்களில் தொலைந்தவன் அவனையே அவளுக்குள் தொலைத்தான்
சேலை கட்டி கொண்டு வந்தவளும் காலையில் தான் அதை தேடவே செய்தாள் கிட்டத்தட்ட காலை நாலு மணிக்கு தூக்கம் வருது கீர்த்தி என்று அவளை விட்டான் ஆஃபீஸ் வேற போகணும். காலையில் சாப்பாடு ஏதாவது செய்து வை என்று சொல்லி விட்டு அவளை இருக்க கட்டி கொண்டு தூங்கி விட்டான்.
அவனுடைய வெற்று மார்பில் முகத்தை வைத்து படுத்தவள் அங்கு ஒரு முத்தத்தை எப்போதும் போல் தந்து விட்டு சமையல் வேலையை நாளைக்கு நீங்க தான் மாமா செய்யணும் என்று மனதினுள் சொல்லி கொண்டு படுத்து கொண்டாள்.
அடுத்த நாள் காலை அவளை பார்த்து சாப்பாடு செஞ்சிட்டியானு கேட்டான் கார்த்திக் அதே போல திரு திரு என்று விழித்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்தவன் அவளுடைய உதடுகளை சிறை படுத்தி விட்டு இதுவே நல்ல சாப்பாடு தான் ஆனால் இதை மட்டுமே சாப்பிட்டு வாழ முடியாது மா என்று சொல்லி இரண்டு அடியை பரிசாக பெற்றான்.
சீக்கிரம் சமையல் செய்ய பழகு டி என்றான் கார்த்திக்
அது நடந்தால் பார்க்கலாம் என்று மனதினுள் நினைத்தாள் கீர்த்தி அதுக்குள் வினோத் மேல வந்து விட்டான் கீழ சாப்பாடு தயாரா இருக்கு வாங்க என்று இருவரையும் அழைத்தான். போகும் போது போன் பண்ண நேரம் காலம் கிடைக்கலயாடா உனக்கு என்று திட்டவும் மறக்க வில்லை.
அப்படி என்ன முக்கியமான வேலை செய்துட்டு இருந்த என்று கார்த்திக் கின் டலையும் பெற்று கொண்டான்வினோத்
ஒரு நாள் நால்வரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது வினோத் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் கார்த்திக் எனக்கு லைட்டா தொப்பை போட்டுட்டு எப்படி குறைக்க அதுவும் இந்த அப்பு வந்து நல்லா சமைச்சி போட்டு இன்னும் பெருசா ஆகிவிட்டது. உனக்கு சமையல் தெரியாத பொண்டாட்டி கிடைத்திருக்கா என்று சொல்லி இருவரின் முறைப்பையும் பெற்று கொண்டான்.
அப்படியே பேச்சு வேறு பக்கம் திரும்பியது ஆனால் கீர்த்திக்கு மட்டும் மனத்தினுள் திட்டம் உருவானது.
வெளியே போகலாமா என்று கேட்டான் வினோத் நீயும் அபர்ணாவும் இன்னைக்கு போங்க நாளைக்கு நாலு பேரும் போகலாம் என்றான் கார்த்திக் கீர்த்தியும் சரி என்றாள்.
வினொத்தும் அபர்ணாவும் பக்கத்தில் இருந்த கோயிலுக்கு போய் விட்டு வந்தனர் வரும் போதே தாகத்தோடு வந்தான் வினோத். ஃப்ரிட்ஜ்ல ஏதும் இருக்கா அப்பு.