பப்பு வை கொஞ்சி கொண்டிருந்த அபர்ணாவையும் கீர்த்தியையும் பார்த்தவர்கள் அவர்கள் அருகில் சென்றனர்
கீர்த்தி
என்ன மாமா
அப்பு க்கு நீங்க படிச்ச காலேஜ்லயே சீட் வாங்கலாம் னு வினோத் சொல்றான் உனக்கும் அங்கேயே வாங்கவா ரெண்டு பெரும் சேர்ந்து போவீங்க என்றான்
மண்டையை இட வல மாக அசைத்தவள் வேண்டாம் என்றாள்
நான் சொன்னேன்ல என்ற படி வினோத்தை பார்த்தான்
எப்படி மண்டைய ஆட்டுது பாரு அரை லூசு படிக்கணும்னா கரி வலிக்கும் என்று வினோத் இந்த காதில் சொன்னான்
வினோத் உம மண்டையை ஆட்டினான் சரி கீர்த்தி அப்ப எங்க ஆபீஸ்க்கு வேலைக்கு வரியா நாங்க ரெண்டு பெரும் ரெஃபர் பன்றோம்
அதுக்கும் ஒரு மண்டையாட்டல்
ஏய் மாற மண்டை அதுவும் செய்ய மாட்டிக்க இதுவும் செய்ய மாட்டிக்க என்ன அபர்ணா சமையல் செஞ்சு போடுவா நீ தின்னுட்டு தின்னுட்டு தூங்கலாம்னு நினைக்கியா
லூசா மாமா நீங்க நான் வேலைக்கு போய்ட்டா பப்பு குட்டிய யாரு பார்த்துப்பா அழும்
நினைச்சேன் டி நீ அன்னைக்கு இதை எடுத்துட்டு வரும் போதே நீ எதுல இருந்தாவது தப்பிக்க தாணு
குட்டு வெளிப்பட்டதால் அவனை பரிதாபமாக பார்த்தாள் கீர்த்தி
என்ன ஆனாலும் சரி நீ ரெண்டுல எதாவது ஒன்னு செய்யணும் உடனே படிக்க போலாம்னு முடிவு செஞ்சா நீ அதுவும் சும்மா போக கூடாது கஷ்ட பட்டு படிச்சு டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணனும் சரின்னா சொல்லு இல்லாட்டி வேலை தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டான்
வினோத் லூசு மாமாக்கு இதை ஞாபக படுத்துனது நீ தான ஒழுங்கா சொல்லு அவனிடம் காய்ந்தாள்
நான் ஒண்ணும் சொல்லல கீர்த்தி மா நான் அப்புக்கு உங்க காலேஜ்லயெ ஸீட் வாங்கலாமானு மட்டும் தான் கேட்டேன்
நினைச்சேன் டா வெளங்காதவனே நீ இதை சொன்னால் போதாது அதான் இப்படி வந்து சொல்லிட்டு போறாங்க போ நான் என்ன செய்ய இப்ப
கீர்த்தி வா கீர்த்தி காலேஜ் போகலாம் மறுபடியும் ஜாலியா இருக்கும் அதுவும் நம்ம காலேஜ் தான் அப்றம் என்ன
போ அப்பு எனக்கு . இஸ்டமே இல்ல
அப்பா எங்க ஆஃபீஸ்க்கு வா கீர்த்தி அங்கயும் நிறைய பொண்ணுங்க ப்ரண்ட்லியா பழகுவாங்க
போடா பண்ணி எல்லாம் உன்னால தான் அப்பு பாரு அப்பு உன் புருஷன் அங்க உள்ள பொண்ணுங்க பிரண்ட்லியா பழகுவாங்கலாம் அவனுக்கு எப்படி தெரியும்னு கொஞ்சம் விசாரி நான் மாமாவை காக்க பிடிக்க போறேன் என்று போட்டு கொடுத்துவிட்டு சென்றாள்
அவங்க அப்படி பழகுவாங்கணு உனக்கு எப்படி வினோ தெரியும்
ஐயோ அப்பு குட்டி சும்மா சொன்னேன் டா ஒரு பேச்சுக்கு
பேச்சுக்கு சொன்னது மாதிரி தெரியலையே அனுபவம் பேசுது போல சந்தேகமே இல்லாமல் சிரித்து கொண்டே கேட்டாள் அபர்ணா
மச்சானுக்கு எப்பவுமே நீ மட்டும் தான் டி லட்டு மாமன சந்தேக படலாமா அது போட்டு குடுத்துட்டு போகுது
இந்த மச்சான் மாமா லாம் யாரு
உனக்கு தெரியாதுல வா நான் யாரு னுசொல்றேன் ரூம்குள்ள வா சொல்றேன்
ஏன் இங்க இருந்து சொன்னா காது கேக்காதா
காது கேக்கும் ஆனா உனக்கு புரியுற மாதிரி சொல்லணுமே இங்க இருந்தா அந்த கீர்த்தி கரடி வரும்
கீர்த்தி உன்னை கரடினு சொல்றான் பாரு உங்க அண்ணன்
ஏண்டி இப்ப தான் ரைட் விட்டுட்டு போய்ருக்கா மறுபடியுமா முதலில் உன் வாயை மூடுனா தான் அமைதியா இருப்ப என்று சொல்லி கொண்டே அவளை தூக்கி கொண்டு சென்றான்..
தன் கண் முன் பப்புவை மடியில் அமர்த்தி கொண்டு பாவமாய் உக்கார்ந்திருந்த கீர்த்தியை பார்த்த கார்த்திக் மனதுக்குள் பல்லை கடித்தான்
எப்படி பாவ்லா பண்றா பாரு பாப்பா போல பண்றது எல்லாம் வில்ல தனம் அவளை பார்த்து சிரிப்பு வந்தது அடக்கி கொண்டான் சிரிச்சால் அப்புறம் இவளை வழிக்கு கொண்டு வர முடியாது கார்த்திக் கன்ட்ரோல் பண்ணு அவ கிட்ட உருகிறாதே என்று தனக்குள் சொல்லி கொண்டான்
சிறிது நேரம் அவளை கண்டு கொள்ளாமல் இருந்தான்