(Reading time: 37 - 74 minutes)

உள்ளே வந்தவளை இறுக்கி அனைத்து கொண்டான்

மாமா இது என்ன இங்க வச்சு வினோத் வீடு

அவங்க காலேஜ் கிளம்பிட்டாங்க அவளுக்கு ஸீட் கிடைச்சிட்டு  இன்னைக்கு  ஃபீஸ் கட்டனுமாம்  அதான்

ஓ நல்ல  விசயம் ஆனா உங்களுக்கு என்ன ஆச்சு  மாமா ஏன்  இப்படி இருக்கீங்க ஆஃபீஸ்  கிளம்பல

நீ மேல வா சொல்றேன்

வந்தாச்சு சொல்லுங்க

என்னோட மஹாராணி  இல்லாமல் மஹாராஜாவுக்கு   காச்சலாம் ஆனா இப்ப குறைந்து விட்டதே உன்னை பார்த்த உடனே பூஸ்ட் குடித்த  மாதிரி  இருக்கு

ஏன்  மாமா என்கிட்ட சொல்லவே இல்லை உங்கள பக்கத்துல இருந்து பாத்துக்க முடியலை  ஸாரீ மாமா கஸ்ட பட்டீங்களா

அன்னைக்கு  உன்ன  அனுப்பிட்டு  வந்து  தனியா  இருக்க  எப்படியோ  இருந்தது  வேலைக்கு   போகணுமேன்னு  இருந்தேன்  அடுத்த  நாளும்  அது  போல  தான்  ஆனா  உன்ன ரொம்ப  தேடுச்சு

நேத்து    நைட்    சுத்தமா  உன்ன  பாக்காம  இருக்க  முடியல  அதான்   எடுத்து  வச்சேன்  ஊருக்கு  வர  இணைக்கு  ஆபீஸ்  போய்ட்டு   நைட்  ஊர்க்கு  கிளம்ப  நினைச்சேன்  லீவு  எல்லாம்  சொல்லிட்டேன்  அப்புறம்  நைட்  மழை   பெஞ்சதா   அன்னைக்கு   நம்ம  ரெண்டு  பேர்  மட்டும்  மழையில்   நனஞ்சோமே  அன்னைக்கு  நடந்தது  எல்லாம் நினைவு   வந்து  மழையில்  நனைய   தோணிச்சு   அப்புறம்  என்ன  உன்னோட  நினைப்புல  தலையை  கூட  துவட்டாமல்   தூங்கி  பாதி  ராத்திரில   காச்சல்  டேப்லெட்  போட்டுட்டு  படுத்தேன்  காலைல  அப்பு  கஞ்சி   வச்சி  தந்தா   இப்ப  குறைஞ்சிட்டு  டா   ஆனா சோர்வா இருந்தது  ஆபீஸ்க்கு  லீவு  சொல்லிட்டேன்.

ஹாஸ்பிடல் போலாம் வாங்க தவித்து போனாள் அவனை கவனிக்காமல் போனோமே என்று

அதன் குறைந்துவிட்டதே

இல்லை  சூடு இருக்கு

இது வேற சூடு ஹாஸ்பிடல் வேண்டாம்

அப்ப  சாப்பாடு செஞ்சு தரேன் அத்தைகிட்ட  கத்துகிட்டு  வந்துருக்கேன் டாப்லேட்  போட்டுட்டு  தூங்குங்க

அதெல்லாம் இப்ப வேணாம் வேற ஒண்ணு தான் வேணும்

என்ன மாமா

நீ தான் வேணும் முடில டீ  கீர்த்தி என்ற படி  அவள் மேல் படர்ந்தான்

இன்னும் குளிக்க கூட இல்லை  மாமா பல்லு கூட விளக்கலை  கச  கசனு  இருக்கும்

ஏ  ஸீ ப்ஸ்ல  என்ன கசகசப்பு  பல்லு விளக்காமல்  எத்தனை  நாள் சாப்பிட்டு  அத்தை  கிட்ட அடி வாங்கிருக்க  இதெல்லாம் பெரிய விசயமா கொஞ்ச நேரம் கழிச்சு மாமாவே  உன்னை  குளிக்க வைப்பேணாம்  என்று அவளை சிறை செய்தான்

இது பகல் மாமா

ஏண்டி ஒரு வாரமா கைக்கு சிக்காம கடைசியில் காச்சலையும் வர வச்ச இப்ப பகலா

உங்களை யாரு மழையில்  நனைய  சொன்னா  அதான் காச்சல்  வந்தது

மழையில்   நனஞ்சி ஒண்ணும் காச்சல்  வரல என் பொண்டாட்டிய  பாக்காம   அவள இப்படி கொஞ்சமா ஏக்கத்தில்  தான் காச்சல் வந்தது இப்ப உன்னை  பாத்தது எனக்கு எவ்வளவு நிறைவா இருக்கு தெரியுமா. உடம்பும் மனசும் உன்னை தேடுது  டி இது தான் காதல்னும் புரியுது

நீ என்னை தேடுனியா  கீர்த்தி நான் நிஜமாவே தவிச்சு போனேன் தெரியுமா  டா

தேடாமல்  தான் சொல்லாம கொள்ளாம ஓடி  வந்துருகேணா

அப்றம் ஏண்டி  பிடிக்காத மாதிரியே பகல் அது இதுணு ஸீன்  போட்ற

நான் அப்படி சொன்னா  மட்டும் நீங்க என்னை விட்டு   தள்ளியா  நீக்கீங்க  ஒட்டி  உராசிக்கிட்டு சும்மா பேச்ச  பாரு

நான் உன்னை  இப்படி உரசிகிட்டு  நிக்குறதுல உனக்கு ரொம்ப கவலை போல உன் கையை  பாரு என் முதுகை   இறுக்கி கிட்டு இருக்கு நம்புற   மாதிரி பொய்  சொல்லுடி

உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும் மாமா தாத்தா விடம்  பேசியதை சொல்ல வந்தாள்  அவனிடம்

பேசுறது எல்லாம் அப்றம் நோ மோர் டாக்கிங்  ஓகே  .....

அவளுக்கான அவன் தேடுதலில் அவள் உள்ளம் சிலிர்த்தாள்  அன்புடன் நம்மை யாராவது தேடினாலே அது அலாதி சுகம் தான் ஆழ்ந்து அனுபவித்தாள் கீர்த்தி விருப்பதுடன்  அவன்  கைகளுக்குள் சிறை பட்டவளை மொத்தமாக எடுத்து கொண்டான் கார்த்திக்

கொஞ்சலும் மிஞ்சலும்  காதலும் போட்டி  போட்டு கொண்டு ஒரு வழியாக இருவரும் விலகும் போது மாலை நான்கு மணி

போங்க மாமா வந்தது 9 மணி இப்ப நாலு இன்னும் குளிக்க கூட இல்லை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.