Unnai naanariven ennaiyandri yaararivar - Tamil thodarkathai
Unnai naanariven ennaiyandri yaararivar is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty fifth serial story at Chillzee.
முன்னுரை
ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒருவன் ஆத்மாவுடனே காதல் புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான் என்பதே இக்கதையாகும்.
Check out the Unnai naanariven ennaiyandri yaararivar story reviews from our readers.
Feel free to Add your Review by clicking here.
-
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 01 - சசிரேகா
விக்ராந்தின் மீதும் சரி ராகுலின் மீதும் சரி 9 பேய் குழந்தைகள் படுத்தபடி இருக்க அதிர்ச்சியில் கண்களை இறுக்க முடி பின் திறந்துப் பார்த்தான் விக்ராந்த், இப்போதும் அதே காட்சிகள் அனைத்து குழந்தைகளும் பார்க்க விகாரமாக இருந்தது, அயர்ந்து உறங்குவதுப் போல இருந்தது, அதைக்கண்ட விக்ராந்த் மெதுவாக ராகுலை
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 02 - சசிரேகா
“எனக்கு பேய்ங்கன்னா ரொம்ப பிடிக்கும், பேய் சம்பந்தப்பட்ட சினிமாதான் நான் நிறைய விரும்பிப் பார்ப்பேன், பேய்ங்கலாம் சூப்பர் ஸ்மார்ட், நாம நினைக்காததை எல்லாம் அவங்க செய்வாங்க, இன்னும் சொல்லனும்னா நான் ஸ்கூல்ல காலேஜ்ல நடந்த நாடகத்தில எல்லாம் பேய் வேஷம்தான் போடுவேன், அப்படியே ரியலா பேய் போலவே
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 03 - சசிரேகா
அந்த குழந்தைங்க இறந்துட்டாங்க அந்த விசயம் அதுகளுக்கு தெரியுமா தெரியாதா, ஏதோ மனுஷ குழந்தைகளை போல நடந்துக்கறாங்களே, பேய்ங்கன்னா பயமுறுத்தும், சாகடிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்படி கதை கேட்டு தூங்கும், முத்தம் கொடுக்க வரும்னு நான் எதிர்பார்க்கலை, அப்படின்னா அந்த 9 பேய் குழந்தைகளும் நல்ல
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 04 - சசிரேகா
”என்னடா இது ஊர்க்காரங்க ஏகப்பட்ட கதை சொல்றாங்க, இதுல எது உண்மை எது பொய்யுன்னு தெரியலையே, ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் உண்மை, அங்க 9 பேய் குழந்தைகள் இருக்கு, ஆனா அந்த பேய்ங்க மோசம் இல்லை, நான் சொன்னா கேட்டுக்கறாங்க ம் தீராத ஆசையோட இறந்தாங்கன்னு ஒருத்தன் சொல்றான், வாழ வேண்டிய வயசுல அல்ப்ப ஆயுள்ல
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 05 - சசிரேகா
அபியும் விக்ராந்தின் நெருக்கத்தில் கட்டுண்டுப் போனாள், அவனுக்கும் அபியுடன் டான்ஸ் ஆடுவது அலாதியாக இருந்தது, எத்தனையோ பெண்களுடன் இதுபோல பார்ட்டிகளில் டான்ஸ் ஆடியிருக்கிறான் ஆனால், அபியுடன் ஆடும் போது எழும் உணர்ச்சிகள் வேறு அதை யாரிடமும் அவன் கண்டதில்லை காதலுடன் அவளின் முகத்தை பார்த்தபடி ஆட
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 06 - சசிரேகா
”அவங்களை பேயா பார்க்காத, மேக்கப் செய்துக்கிட்ட குழந்தைகளா பாரு, சரியா போயிடும்” என விக்ராந்த் இயல்பாகச் சொல்லிவிட்டு டிபன் சாப்பிட செல்ல ராகுலோ நீண்ட பெருமூச்சுவிட்டு அந்த குழந்தைகளை இப்போது பேய்கள் போல அல்லாமல் குழந்தைகள் போல பார்க்க முயற்சி செய்தான், அப்படி பார்க்க அவைகளும் நட்பாக சிரித்து
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 07 - சசிரேகா
“எப்படி நீங்க இறந்தீங்க” என ராகுல் கேட்க பேய் குழந்தைகளும் ஏதோ சைகை செய்து புரிய வைக்க முயல அவனால் முதலில் புரிந்துக் கொள்ள சிரமப்பட்டான், சில நிமிடங்கள் கழித்து சட்டென அவன் மூளையில் மின்னல் ஒன்று தாக்கியது ”ஓ காட், அப்ப நீங்க எல்லாரும் கொலை செய்யப்பட்டீங்களா” என கேட்க அதற்கு அந்த குழந்தைகள்
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 08 - சசிரேகா
”நண்பா நான் கடைக்குப் போறேன், கார் என்கிட்ட இருக்கட்டும், நீ சர்ச்க்கு போ அரை மணி நேரம் கழிச்சி நானே வந்து உன்னை பிக்கப் பண்றேன், பாதர்கிட்ட கவனமா பேசுடா வார்த்தையில பொறுமையிருக்கட்டும், அப்புறம் அவர் எதை தந்தாலும் வாங்கிடாத, ஏதாவது மந்திரிச்சி வைச்சிருக்கப் போறான்” என ராகுல் சொல்ல
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 09 - சசிரேகா
”பார்ப்பா அபி விவரமானவள்தான், பேய் மேல பயம் இருக்கு, அதுக்கு பயந்து பாதர்கிட்ட உதவி கேட்டிருக்கா, அப்படின்னா அந்த பாதரையே இவள்தான் வரவழைச்சிருக்கனும், ஏற்கனவே அந்த பாதருக்கு இந்த காட்டேஜ் மேல ஒரு கண்ணு, இவளை வைச்சி ஏதோ சாதிக்கனும்னு ஆசைப்படறான், அந்தாளு கெட்டவன்னு தெரியாம இந்த அபி பாவம் தெரியாம
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 10 - சசிரேகா
என்னோட இந்த கடன் பிரச்சனைக்கு முன்னாடி இந்த பேய்கள் பிரச்சனை கூட பெரிசா தெரியலை, ஏன்னா சின்ன வயசில இருந்து கடன்காரங்க எங்கப்பாவை எப்படியெல்லாம் திட்டி அவமானப்படுத்தினாங்க, அதையெல்லாம் நேர்ல பார்த்திருக்கேன், என் அப்பா வருத்தப்படறப்ப நானும் வருத்தப்பட்டிருக்கேன் எனக்கு எப்படி அவர்தான் உலகமோ அதே
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 11 - சசிரேகா
நீங்க சொர்க்கத்துக்குப் போன பின்னாடி ராகுல் மனசு உடைஞ்சிப் போயிடக்கூடாது, ஏற்கனவே அவன் அப்பா அம்மாவை இழந்திருக்கான், இதுல நீயும் இல்லைன்னா வாழ்க்கையையே வெறுத்துடுவான், அவன்கூட பழகறப்ப பார்த்து பழகும்மா, அதிகமா பழகி வைக்காத, அப்புறம் அவன் உன்னையே நினைச்சிக்கிட்டு தனக்குன்னு ஒரு வாழ்க்கையை
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 12 - சசிரேகா
”என்னாச்சி உங்க எல்லாருக்கும், நாங்க ஏதாவது கேட்க கூடாததை கேட்டு வைச்சிட்டோமா, இல்லை உண்மையிலயே இங்க புதையல் இருக்கா, அதனாலதான் அந்த பாதர் இந்த காட்டேஜ் வேணும்னு ஆசைப்படறாரா, இதுக்காகதான் உங்களை கொன்னாங்களா சொல்லுங்க, எதுவாயிருந்தாலும் சரி உண்மையை மறைக்காம சொல்லுங்க” என விக்ராந்த் கேட்க அதற்கு
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 13 - சசிரேகா
அடுத்த நொடியே சோபியாவுக்குள் புது தைரியம் வந்தது, அதுவரை ஆன்டர்சனை நினைத்து பயந்தவள் இப்போது அந்த பயத்தையே விரட்டியடித்தாள், என்ன ஆனாலும் சரி தங்களுக்கு நடந்த அநியாயத்திற்கு அந்த ஆன்டர்சன் பதில் சொல்லியே ஆக வேண்டும், தங்களுக்கு நியாயம் கிடைப்பது விட அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், தங்களுக்கு
... -
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 14 - சசிரேகா
”என்னால போக முடியாது, அந்த குழந்தைகள் என்னை அவங்க அம்மாவா நினைக்கறாங்க, அவங்க கஷ்டத்தில இருக்கறப்ப என்னால அவங்களை விட்டுட்டு போக முடியாதுப்பா, எவ்ளோ பெரிய கஷ்டத்தில நான் மாட்டினாலும் சரி அவங்களுக்கு துணையா இருப்பேன்பா, ப்ளீஸ்பா என்னை அனுப்பாதீங்கப்பா” என அபி கெஞ்சினாள் தன் தந்தையிடம்
-
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 15 - சசிரேகா
”சோபி போனதால இன்னொரு வாழ்க்கையை அமைச்சிக்காம இப்படி தனிமரமா இருக்கலாமா, இதுல சொர்க்கத்துக்கு போன குழந்தைகளை மனசுல வைச்சிக்கிட்டு அவங்க வயசுல இருக்கற பிள்ளைகளை அநாதை ஆசிரமத்தில இருந்து தத்து எடுத்து அவங்களுக்கு அதே பேரை வைச்சி வளர்த்து ஆளாக்கறதுங்கறது” என ராமலிங்கம் இழுக்க அதற்குள் ராகுல்
...