வாங்கினாள்.
உள்ளே போனபோது 'ஏர் கண்டிஷன் குளுமையும், ’கம் ஸெப்டம்பர்’ கானத்தின் இனிமையும் அவர்களை வர வேற்றன. இருவரும் ஒரு மூலையாகப் போய் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள். மிஸ் டூ லிப் மட்டும் உற்சாக மிகுதியில் தன் கால்களால் தரையைத் தட்டித் தாளம் போட்டபடியே, ''ஐ லவ் திஸ் ஸாங் வெரி மச்!'' என்றாள்.
யாராவது தன்னைக் கவனித்துவிடப் போகிறார்களே என்ற திகிலில் உட்கார்ந்திருந்த பாரதி, 'எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கு டூலிப்'' என்றாள்.
"பயப்படாதே! ஹிச்காக் படம் தான் பயப்படணும். மர்டர், மிஸ்டரியெல்லாம் வரும். இது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரியாச்சே!'' என்றாள் டூலிப்.
"சற்று நேரத்துக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டுப் படம் ஆரம்பமாயிற்று. இருவரும் ஆளுக்கொரு சுவிங்கத்தை வாயில் போட்டுச் சுவைத்தபடியே படத்தை ரசிக்கத் தொடங்கினர். நேரம் ஆக ஆகத் தியேட்டரில் நிலவிய இருட்டுக்குள்ளேயே ஒரு தெளிவு பிறந்தது. அத்தெளிந்த இருட்டில் தனக்குத் தெரித்தவர்கள் யாராவது வந்திருக் கிறார்களா என்று பாரதி சுற்றுமுற்றும் கண்ணோட்டமிட்ட போது. ஆமாம் - ராஜா சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்தான்! அவனைக் கண்டதில் அவளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் தான் படம் பார்க்க வந்திருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிந்துவிடப் போகிறதே என்று கவலைப்பட்டாள்.
காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் பாரதியைச் சந்தித்தபோது, 'படம் பார்க்க வருகிறாயா?’ என்று அழைத்தான். அவள் செல்ல மறுத்துவிட்டாள். இப்போது மட்டும் தான் வந்திருப்பதைக் கண்டால், ராஜா என்ன நினைத்துக் கொள்வான்?
இடைவேளையில் தற்செயலாகப் பின்புறம் திரும்பிய ராஜா, அங்கே பாரதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து போனான். ஆயினும் படம் முடியும்வரை அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. பாரதிக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. எங்கே தன்னைக் கண்டதும் பாய்ந்து வந்துவிடுவானோ என்று பயந்த அவளுக்கு, அவனுடைய பெருந்தன்மையான போக்கு நிம்மதியை அளித்தது.
பாரதி, லேசாகத் தன் கண் இதழ்களை உயர்த்தி அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தாள். அவன் தேநீரைச் சுடச்சுடக் குடித்துவிட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டு திணறினான். 'ராஜா எதிலுமே கொஞ்சம் அவசரப் புத்திக் காரர். அன்று அவசரப்பட்டு ஆணி அடிக்கும்போது கையை நசுக்கிக் கொண்டார். இன்று அவசரப்பட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்' என்று எண்ணியபோது அவளுக்கு அவன் மீது இரக்கமே உண்டாயிற்று. இன்னொரு நாள் அவன் வாணலியில் வெந்து கொண்டிருந்த கோஸ் கறியைப் புகையப் புகைய வாயில் போட்டுக்கொண்டு தவித்த தவிப்பு பாரதிக்குத் தெரியாது.