(Reading time: 8 - 15 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

வெளியேற்றினார்.

  

பட்டிக்காட்டான் பேசினான். "கேஸ் தானே ஜெயிச்சுடும்னா ஜையாகிட்டே ஏனுங்க நான் வரேன்? சத்தியத்துக்கு அவ்வளவு மதிப்பு இருந்ததுன்னா கோர்ட்டு, ஜட்ஜு, வக்கீல் எல்லாரும் எதுக்குங்க? பேசப் போறயோ சாகப் போறயோ என்று சொன்னாப்பலே, வாயடி அடிக்கிறவனுக்குத்தான் இது காலமா இருக்குங்க."

  

"என்னப்பா, நீ அநாகரிகமாப் பேசறே! என்னுடைய பேச்சாற்றலால் வாதத் திறனால்தான் கேஸ் ஜெயிக்கணும்னு கொஞ்சம் கௌரவமா சொல்லேன். கேட்க நல்லா இருக்கும்."

  

"ஆமாங்க, அது தானுங்க; நீங்க நல்லா ஓங்கி அடிச்சுப் பேசணும்."

  

"அடிச்சும் பேசறேன். மேஜையிலே ஓங்கிக் குத்தியும் பேசறேன்."

  

"அந்த அம்மா பொம்பிளை வக்கீல் வாயைத் திறக்க முடியாதபடி அடிச்சுடணுங்க."

  

"என்ன? அட்வொகேட் பவானி வாதிக் கட்சியிலே பேசப் போகிறாளா?"

  

"ஆமாங்க."

  

"அப்படியானால் ஃபீஸ் நூறு ரூபாய் சேர்த்துத் தரணும், அப்பா! அந்த அம்மாவோடு 'ஆர்க்யூ' பண்ணினால் தொண்டைத் தண்ணி வத்திப் போயிடும். பத்துக் கேஸிலே பேசற பேச்சை ஒரு கேஸிலேயே பேசும்படியாகிவிடும்."

  

"அதுக்கென்ன நூறு ரூபாய் அதிகம் வாங்கிக்குங்க. கேஸ் மட்டும் ஜயிச்சால்....."

  

"கேஸ் ஜயிச்சால் எனக்குக் கனகாபிஷேகம் பண்ணிவிடுவாயாக்கும்? திரும்பிக் கூடப் பார்க்கமாட்டாய்...."

  

உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசை அதிகரித்தது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.