Page 11 of 11
இல்லை. குடும்பம் அவர்களுடையது. வேலை இருந்தால் செய்துவிட்டு, சோறு இருந்தால் சாப்பிட்டுவிட்டு, இப்படியே என் காலத்தைக் கழிப்பேன்" என்று சிலமுறை அம்மாவிடம் பேசியபோது குறிப்பிட்டார். அந்தப் பேச்சு அவருடைய மனநிறைவைக் காட்டியதே தவிர, கவலையைக் காட்டவில்லை.
விடுமுறையில் ஒரு பாதி இப்படிக் கழித்துவிட்டது. மறுபாதியில்தான் படிக்கத் தொடங்கினேன். முற்பகுதியின் குறையை ஈடுசெய்யும் அளவிற்கு நன்றாகவே படித்தேன். சந்திரனைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது. ஆயினும் முன்போல் அதனால் சோர்வடையவில்லை.
----------
தொடரும்...