(Reading time: 16 - 32 minutes)
Vata malli
Vata malli

  

கண்டிப்பா எங்க அக்காவுக்குக் கல்யாணம் நடந்துடும்னு சொல்றீங்களா...”

  

ஏன் நடக்காது... எதுக்காக நடக்கப்படாது... கண்டிப்பாக நடக்கும்...”

  

அந்தப் பெண்ணால், அதற்குமேல் கேள்வி கேட்க விருப்பமில்லை. அவள் மனமும் நின்றுபோன கலியாணத் தையே நினைத்தது. இதற்குள் அவன்தான் தானாகப் பேசினான்.

  

அப்பா சூடு போட்டார்! அண்ணன் சூடு கொடுத்தான்! அப்படியும் எனக்கு சொரணை இல்லாம போயிட்டே... எங்க அக்கா, எவ்வளவு சொல்லியும் என்னால சேல கட்டாம இருக்க முடியலையே... பொம்பளங்க பக்கத்துல அவங்களோட அவங்களா நிக்கணுமுன்னு வருகிற ஆசையை தடுக்க முடியலையே!”

  

திடீரென்று, அந்தப் பெண் அவன் தலையைத் துாக்கி தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவன் நெஞ்சை நீவி விட்டாள். அவள் கண்ணிர் அவன் மார்பை நனைத்து அவையும் நெருப்புக் கொப்புங்கள்போல் நின்றன. அவள் கீழே குனிந்து குனிந்து தனது நெற்றியால் அவனது நெற்றியை லேசாய் முட்டி முட்டியே சன்னக் குரலில் ஒப்பாரி வைத்தாள்.

  

என் மகளே... என் மகளே... நானும் ஒன்ன மாதிரி, ஒரு நல்ல குடும்பத்துல பிறந்து, நீ பட்ட அத்தன கொடுமை களையும் பட்டவள்தாண்டி! கைய ஒடிச்சாங்கடி! தலையை மொட்டையடிச்சாங்கடி! எல்லாருக்கும் மாதிரி, ஒன்ன மாதிரி - என்ன மாதிரி இருக்கிற அத்தனபேருக்கும் கிடைக்கிற மாதிரி எனக்கும் சூடு கிடைச்சுதுடி! நம்மள மாதிரி யாரும் பெறக்கப்படாதுடி... பெறந்தாலும் இருக்கப்படாதுடி...”

  

எக்கா... என்னல்லாமோ பேசுறீங்க...”

  

பேசவேண்டியததாண்டி பேசறேன் என் மகளே. நான், இனிமேல் ஒனக்கு அக்கா இல்ல - அம்மா... ஒன்னப் பெறாமல் பெத்த அம்மா... எத்தனையோ பேரு எங்கிட்ட தத்தெடுக்கச் சொல்லி வந்தாளுவ... நான்தான் யோசிச்சேன்... ஒரு மகள் இருந்தாலும் - அது உருப்படியா இருக்கணும்னு நிதானிச்சேன். என் புருஷன் கூத்தாண்டவர் சத்தியமாய் சொல்றேண்டி...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.