நிமிடம் என்பது போல் நூறு நிமிடம் ஆகிவிட்டது. அவன் பொறுமை இழந்து உள்ளே போகப்போனபோது, இரண்டு சப்-இஸ்ன்பெக்டர்களும் வெளியே வந்தார்கள். இளங்கோ குறுக்கே போய் நின்றான். ஒருவர் அதட்டினார். இன்னொருவர் அந்த அதட்டலுக்கு அபிநயம் பிடிப்பவர் போல் தலையை மேலும்கீழும் ஆட்டினார்.
"என்ன மிஸ்டர் உன்னோட பெரிய தொல்ல? அந்தப் பொண்ணு எப்படிப் பொறுமையா நிக்கறா பாரு. உனக்கு என்ன கேடு? அவசரமாக வெளியில போறோம். வெயிட்... வந்து கவனிக்கிறேன்.'
ஜீப்பில் சகாவுடன் ஏறிக்கொண்ட கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், துப்பாக்கியை கண்டும் போது எப்படி விரலை இழுத்து விடுவாரோ, அப்படி அவனைப் பார்த்து விரலைச் கண்டினார். இளங்கோ ஓடோடிப் போய் நின்றபோது-
“ஆல் ரைட்... நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கு வந்திரு. வராமல் மட்டும் இருந்துடாதே. அந்தப் பொண்ணு சொல்றது சீரியஸ் குற்றச்சாட்டு. இந்தாப்பா இவரோட அட்ரஸ்ஸ வாங்கிக்கோ, சரோசா உனக்குந்தான், கரைக்டா வந்துடணும்."
"சரி சாரே, அதுவரைக்கும் இந்தப் பிள்ளாண்டான் என்னை..."
ஜீப்காரர்கள், பதில் சொல்லாமலே பறந்துவிட்டார்கள். இளங்கோவிற்கு அந்தக் குளிரிலும் வேர்த்தது.இப்போது விவகாரத்திலிருந்து கழட்டிக்கொண்டால் போதும் என்பது மாதிரியாகிவிட்டது. வீட்டுக்கு ஓடிப்போய் சரணடைய வேண்டும் என்று தோன்றிது. சரோசாவை பார்க்காதது போல நடந்தான். ஆனால் அவளோ, அவனை வழிமறித்துக் கொண்டே வாதித்தாள்:
"யோவ், ஆட்டோவில கொண்டுவந்து விட்டுட்டு, அப்புறமா என்ன நடக்கவைச்சா எப்படி? அதான் நம்மகிட்ட நடக்காதுன்னேன்... என்னை எந்த இடத்துல ஏத்தினியோ அந்த இடத்தில இறக்கிடு டாக்ஸி வேணாம், ஆட்டோ போதும்."
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...