கண்ணே பட்டு விடப் போகிறது என்று அஞ்சினான்.
"அன்றைக்கு அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த தைக் கேட்டாயோ? உன் சம்மதம் தெரிந்தால் ஊருக்குப் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விடுவேன்'' என்றான் சங்கரன்.
காமு பூமியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். ''சம்மதம் வேண்டுமாம் இவருக்கு!" காமுவின் மனம் பல தடவைகள் இவ்வார்த்தைகளைச் சொல்லியது. கரும்பு நின்பதற்குக் கூலியா கேட்பார்கள்? வருடந்தோறும் மார்கழி திங்களில் விடியற்காலம், தான் வணங்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளினால் அல்லவா வலியவே வந்து தன்னை மணக்க வேண்டுகிறார்?- கண்ணனின் கருணைதான் என்ன? கருணைக்கடல் என்று பெரியவர்கள் தெரியாமலா குறிப்பிட்டார்கள் அவனை?
"காமு...!" என்று உள்ளம் குழைய அழைத்தான் சங்கரன்.
காமு தலை நிமிர்ந்து, நீர் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தாள்.
"அசடே! ஏன் அழுகிறாய்? லட்சுமி தேவியைப் போல் இருக்கும் உன்னை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி அல்லவா? சம்மதம் தானே காமு?" என்று இரண்டாம் முறையாகக் கேட்டான் சங்கரன்.
காமுவின் கொவ்வை அதரங்கள் உணர்ச்சியால் துடித்தன. அதில் நெளிந்தோடும் புன்னகையால் அவள் சம்மதத்தை அறிந்து கொண்டான் சங்கரன்.
அதே சமயம் ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டை யிலிருந்து திரும்பி வந்து சேர்ந்தார். ரேழியைத் தாண்டி தகப்பனார் உள்ளே வருவதற்குள் காமு சமையலறையில் பதுங்கிக் கொண்டாள்.
"வா, அப்பா சங்கரா! என்ன, படுக்கை பெட்டி எல்லாம் தடபுடலாக இருக்கிறது?" என்று கேட்டு விட்டு, ஊஞ்சலில் உட்கார்ந்தார் அவர்.
''நாளைக்கு ஊருக்குப் புறப்படுகிறேன் மாமா. இங்கு வந்து இரண்டு நாட்கள் கூடத் தங்காமல்