சரிப்படு கிறதில்லை. அவருடைய வேலை யெல்லாம் மன்னிதான் கவனித்துக் கொள்கிறாள்" என்றான் சங்கரன்.
''பாவம்! ரொம்பவும் செல்லமாக வளர்ந்த பெண். நல்ல இடத்தில் தரின் வாழ்க்கைப் பட்டாள்; இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது அலாதியாக இருக்கிறது அப்பா" என்றார் அவர்.
"வீட்டிலே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்கிறாள் மாமா, ரொம்பவும் பொறுமைசாலி.'
"பொறுமைசாலியாக ஒருத்தி இராவிட்டால் அடங்காப் பிடாரிகளின் ராஜ்யம் குடும்பத்தில் நடக்குமா!" என்று காமு மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள். சங்கரன் எதற்காக அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதே தகப்பனார் பெண் இருவருக்கும் புரியவில்லை.
மத்தியானத் தூக்கம் கலைந்து விசாலாட்சி விழித்துக் கொண்டபோது கூடத்தில் சங்கரன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். இதென்ன விசித்திரம்! யாரால் காமுவின் வாழ்வு பாதிக்கப் பட்டதோ, யாரைக் காமு மறக்க முடியாமல் திண்டாடுகிறாளோ அவன் இங்கு உட்கார்ந்திருக்கிறான். திரும்பவும் சங்கரன் இங்கு எதற்காக வர வேண்டும்? பட்டினம் வருவதற்குப் பொன்மணியில் வண்டி ஏறிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, 'அவர்களால் நமக்கு என்ன ஆகவேண்டும் அப்பா, அவர்கள் வீட்டுக்கு நாம் ஏன் போசு வேண்டும்?' என்று கூறிய காமு, இன்று அதே சங்கரனுக்குக் காபி கொடுத்து உபசரிக்கிறாளே?"
இன்று விசாலாட்சிக்கு இது விசித்திரமாகத் தான் இருந்தது. புடவைத் தலைப்பை உதறிக் கட்டிக்கொண்டு எழுந்திருந்த வளைப் பார்த்துக் கைகூப்பி, "மாமி! என்னைத்தெரிகிறதா உங்களுக்கு? ரொம்பவும் இளைத்துப் போயிருக்கிறீர்களே?” என்று கேட்டான் சங்கரன்.
'இவன் ஏன் இங்கு வந்தான்? காமு இன்று வைராக்கியத் துடன் விவாகத்தை மறுக்கும் அளவு அவள் மனத்தைப் புண்ணாக்கியவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?' இவ்வித ஆத்திரத்தோடு விதெரியாமல் என்ன அப்பா? மனுஷாளை மறந்து போகும் அளவு நினைவு தப்பி விடவில்லை எனக்கு!" என்று கூறிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்.
சங்கரனின் மனம் மறுபடியும் வெட்கியது. உணர்ச்சி வசத்தில் ஏதேதோ கூறிச் சென்று பிறகு, அவைகளை மறந்தவன் சங்கரன் தானே?