(Reading time: 19 - 38 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

அணிவதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

   

நீலா அவளைத் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அவள் அவர்கள் வீட்டிற்குப் போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தன் உத்தேசத்தைத் இகப்பனாரிடம் கூறியபோது, அதெல்லாம் வேண்டாம். அம்மா! நமக்கு அங்கே என்ன ஜோலி இருக்கிறது. வேண்டு மானால் அவர்களே வரட்டும்" என்று அவர் கூறிவிட்டார்.

   

''காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு?" என்று சங்கரன் கேட்ட வார்த்தைகள் திரும்பத் திரும்பக் அணீரென்று அவள் செவிகளில் ஒலித்தன.

   

சங்கரனை மறந்து விடுவாளா காமு? அப்படி மறக்கிற வளாக இருந்தால் பத்திரிகையில் பிரசுரமான அவன் கல்யாணப் படத்தை எதற்குப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறாள்? அவனையும், அவன் மனைவியையும் நேரில் பார்க்கவேண்டும் என்று கமலாவின் வீட்டிற்கு எதற்காகப் போகிறாள்? சங்கரன் அவள் மனத்தில் நிலையாக இடம் பெற்று விட்டான். அந்த இடத்தை வேறு யாருக்கும் அவளால் அளிக்க முடியாது. மெலிந்து வாடி வரும் தாயின் அபிலாஷையைக் கூடப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் காமு 'டிரெயினிங்' படித்து உபாத்தி யாயினி வேலையை ஏற்கப் போவதும் சங்கரனை மறக்க முடியாத காரணத்தால் தான்!

   

---

   

தெருவில் பழம் விற்பவரும், சாமான்கள் விற்பவர் களும் அசந்து உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் பகல் நேரம் வெய்யில் கடுமையாகத்தான் இருந்தது. மண் கூஜாவில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சாப்பிட்டு விட்டு மறுபடியம் தையல் இயந்திரத்தின் முன்பு வந்து உட்கார்ந்தாள் காமு. அப்போது தெருவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வாயிற் கதவைத் திறந்து கொண்டு சங்கரன் உள்ளே வந்தான். காமு ஒரு கணம் திகைத்துப்போனாள். உடனே சமாளித்துக்கொண்டு அரைத் தூக்கத்தில் இருந்த தகப்பனாரிடம், ' அப்பா யார் வந்திருக்கிறார் பாருங்கள்” என்று கூறினாள்.

   

ஆவல் ததும்பும் கண்களுடன் காமுவைப் பார்த்துவிட்டு சங்கரன், அங்கு இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.