அதற்குள் கமலா நீலாவுடன் பேசிக் கொண்டு அந்தப் பக்கம் வருவது கேட்கவே அவசரமாக; "எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவுக்கு உங்களைப் பார்த்தால் சந்தோஷ மாக இருக்கும்” என்று கூறிவிட்டு காமு அங்கிருந்து போய் கமலாவுடன் சேர்ந்து கொண்டாள்.
பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? ஒரு வார்த்தை பேசுவதற்கு எவ்வளவு திணறிப் போய்விட்டாள் அப்போது? அவளை ஏமாற்றியவனை எவ்வளவு அன்பாக தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள்? என்ன கள்ளமற்ற உள்ளம்? போதாததற்கு அவனைப் பார்த்தால் அவள் தாப்பனாரும் சந்தோஷப்படுவார் என்று வேறு பெருமை அடித்துக் கொள்கிறாள்!
சங்கரன் சிறிது நேரம் தன்னைப் பற்றியே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். படித்துப் பட்டம் வாங்கிய வனாக இருந்தாலும் ராமபத்திரய்யருக்கு இருக்கும் கபட மற்ற குணமும், பெருந்தன்மையும் தனக்கு இருக்கின்றனவா என்று சிந்தித்தான். குண விசேஷம் அலாதியாக வாய்ப்பது. கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் அதை விலைகொடுத்து வாங்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு.
"மிஸ்டர் சங்கரன்! உங்களை உங்கள் மனைவி நெடு நெரமாகத் தேடறாளே, இருட்டில் இங்கே என்ன பண்ணு கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டு கமலா வந்தாள். 'பார்டி'க்கு வந்தபோது இருந்த உற்சாகம் குறைந்து சங்கரனின் முகம் வாடிப் போயிருந்தது.
"கொஞ்சம் தலைவலியாக இருந்தது! காற்றாட வந்து நின்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, "புறப்படலாமா நீலா?" என்று மனைவியின் பக்கம் திரும்பிக் கேட்டான். அங்கே அவளுக்குப் பக்கத்தில் காமு நின்றிருந்தாள்.
“துணிகளை மிகவும் அழகாகத் தைக்கிறாள், இந்தப் பெண். ஓ! 'ஸாரி!' மிஸ் காமு என்று சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நம் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறேன். என்னிடம் நிறையத் துணிகள் இருக்கின்றன. தைக்க வேண்டும்" என்று நீலா, காமுவை அவர்கள் வீட்டிற்கு அழைத்ததைச் சங்கரனிடம் கூறினாள்.
காமுவைச் சங்கரன் அவர்கள் வீட்டிற்கு விரும்பி அழைக்கவில்லை. ஆனால், நீலா,