இம்மைக்கும், மறுமைக்கும், மற்றெதற்கும் சாதன மனிக்கக் கூடியது அந்த தாரக நாமந்தான் என்று அன்று ஒரு புத்தகத்தில் படிக்க வில்லையா! எனக்குற்ற குற்றத்திற்குத் தண்டனை விதிக்கவோ, தூக்கு மரத்தில் தொங்கச் செய்யவோ கடவுள் திருவுள்ளப்படியேதான் நடக்கும். இவைகளுக்காக நீ சித்தம் சிதறாதே! வருந்தாதே! சதா கவலை கொள்ளாதே! உன் விஷயத்திவ் நான் கவலைப் பட்டும் ஆவதொன்றுமில்லை. கர்மாவின் வழியே காரியம் நடக்கும். ஆதலால் எல்லாவற்றிற்கும் தைரியமாக இருக்க வேண்டும். என்னுடைய செய்கையை ஒருவரும் கவனிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆயினும் சொல்வதற்கில்லை. அப்படி ஏதேனும் சம்பவம் நேர்ந்தால் நீ கதறாதே; பதறாதே!" என்று பல விதமான தேறுதல்களைக் கூறினாள்.
கோமதிக்கு மனத்திற்குள் எத்தனையோ விசனம் அழுத்தியதெனினும் பாலாவின் பொன்னுரைகளைக் கேட்டுத் தன் கவனத் தைக் கடவுள் பேரில் செலுத்தித் தியானிக்கலானாள். பாலா தினந் தோறும் தன் வேலை முடிந்ததும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலிய படங்களை வைத்துப் பூஜை செய்து பாடுகிற வழக்கம். அதே போல அன்றும் தன்னுடைய மாறுதலைக் காட்டிக் கொள்ளலாகா தென்கிற நோக்கத்துடன் படத்தருகில் பாட உட்கார்ந்தாள். அவள் சகோதரியாகிய நீலாவும் சேர்ந்து இருவரும்,
("கோரீபஜிந்துனு" என்ற மெட்டு)
வாரீஜ லோசனா! பாப விமோசனா ! மார ஜனக கோபாலா—வா
தாரக நாமா! பாரினில் எம்மை சீருடன் காக்கும் பிதாவே
நந்த குமாரனே! நவநீத சோரனே! பந்த மகற்றி யருள்வாயே
செங்கண் மாலா! மங்கை லோலா! பங்கய மலர் பொற்தாளா-
பார்த்தன் தேரோட்டிய நாதா-
-------