(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

   

வந்தவள்.- அம்மா! நீ கேட்பது மிகவும் சரியே! உன்னுடைய கேள்விக்கு நான் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என் கடமையை நான் செலுத்திய பிறகு உன்னுடைய வாக்கை நீ நிறைவேற்றாது மறுக்கக்கூடும். அதைப்பற்றி நான் இப்போது சொல்ல வேண்டாம். நீ உன்னுடைய இனிமையான கான விருந்தை முதலில் அளித்துவிடு; பிறகு நான் பேசுகிறேன்" என்றாள்.

   

இதுகேட்ட பரிமளா தன் தாயாரை அவ்விடத்திற்கு வரவழைத்துக்கொண்டு பிறகு பாடத் தொடங்கினாள்.

   

("எத்தனை ஜென்மங்கள்" என்ற மெட்டு)
(1) அச்சுதன் காமங்கள் உச்சரித்தால் பெரும்
துச்சவினைகளும் தீர்ந்திடுமே-
பச்சைமா மேனியும் மெச்சுகை யாழியும்
பார்த்திடப் பாபங்கள் தீர்ந்திடுமே:
உச்சித பாதங்கள் உச்சிமேற் கொண்டிடில்
உள்ள கரும வினை தீர்ந்திடுமே!

   

------

(2) ஏழை என்றோரது பாழ்வினை போக்கிடும்
இன்ப நாமம் துயர் தீர்த்திடுமே
ஆழ்கடல் மூழ்கினும் அனுதினம் போற்றிடில்
தாழ்வுறும் தீமைகள் தீர்ந்திடுமே:
(3) அந்தரங்க பக்தி சொந்தமாய்ச் செய்திடில்
முந்தி வினைகளும் தீர்ந்திடுமே:
மந்தகாசன் திவ்ய அந்தமாம் சரிதை
மனனம் செய்தால் துயர் தீர்ந்திடுமே:
(4) குன்றமெடுத்தோனை அன்றலர்முகத்தோனைக்
கோரிடில் கொடுமைகள் தீர்ந்திடுமே
கன்றினோடாடிய காருண்ய மூர்த்தியின்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.