இது கண்ட பாலா தட தடவென்று எழுந்து, "ஐயா ! இதென்ன அக்கிரமம்! போலீஸ்காரரின் முன்னிலையில் இத்தகைய அநியாயம் நடக்குமா? ஐயோ! போலீஸ்காரரே! இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதற்கா நீங்கள் வந்தீர்கள்! இந்த பெண்பிள்ளை மூர்ச்சித்து விட்டாளே! இந்த கதிகாலத்தில் இத்தகைய அக்கிரமங்கள் நடப்பது தான் தருமமா?" என்று கூறிக் கொண்டே இருக்கையில் இன்னும் இரண்டு தடியர்கள் வேகமாக வந்து போலீஸ்காரர்களைக் கட்டி உருட்டி விட்டார்கள். கீழே கிடக் கும் பெண்ணைப் பார்த்து, ஒருவன் "ஹா! கமலவல்லீ! பிண மானாயோ! சண்டாளன் கைக்கு இரையானாயோ!" என்று புலம்பிய வாறு தன் மடியிலிருந்த துப்பாக்கியை எடுத்து முன் வந்தவனைச் சுட முயன்றான்.
இந்த விபரீதச் செய்கையைக் கண்ட பாலா முதலிய எல்லோ ரும் நடு நடுங்கி விட்டார்கள்; எனினும் பாலா வெகு தைரியமாய் "ஐயோ! இதென்ன அக்ரமம்! நீங்கள் யார்? இவ்விதம் அன்னியர்களின் வீட்டில் வந்து இத்தகைய விபரீதச் செய்கைகளைச் செய்கின்றீர்களே! துப்பாக்கிப் பிரயோகமென்ன! கொலை செய்வதென்ன! இதென்ன விபரீதம்!" என்று கூறியவாறு துப்பாக்கி பிடித்திருக்கும் மனிதனின் கரத்திலிருந்து வெடுக்கென துப்பாக்கி யைப் பிடுங்கிக் கொண்டாள்.
--------
அந்த மனிதன் பாலாவின் செய்கைக்கு நகைத்தவாறு, "ஆ! நான் விட்டேனா பாரு. இதோ கத்தி இருக்கிறது." என்று கூறிக் கொண்டே கத்தியை எடுத்துக் குத்த முயன்றான். இதற்குள் கீழே விழுந்து கிடக்கும் பெண்மணி "தாகம் தாகம்" என்று சைகை செய்தாள். இதைக் கண்ட பாலா ஒடோடியும் தண்ணீர் கொணர்ந்து அந்த பெண்பிள்ளையின் வாயில் வார்க்கப் போகையில் பாலா திடுக் கிட்டாள். "ஹா! அம்மா! நாம் ஏமாந்தோம். இதில் ஏதோ மோச மிருக்கிறது. பெண்பிள்ளையாக நடித்தது ஓர் ஆண் பிள்ளையே யாகும்." என்று பாலா கத்திக் கொண்டே விலகிக் கொண்டு மற்றொரு பெண்ணைப் பார்த்தாள். அவனும் ஆண்பிள்ளையாகவே இருப்பது கண்டு நடுக்கலுற்றாள்.
இதைக் கண்ட எல்லோரும் கடகடவென்று நகைத்து, எழுந்து நின்றார்கள். பாலாவுக்கோ ஒன்றுமே அர்த்தம் விளங்க வில்லை; விழிக்கின்றாள். எனினும் தைரியத்தை விடாமல் "ஐயா! இதென்ன நகைப்பு! என்ன செய்கை! ஒன்றும் எனக்கு விளங்க வில்லையே!" என்றாள்.