அதற்கு அங்கு வந்தவர்களில் முதலாளியாகியவன் "அம்மணீ! பயப்படவேண்டாம்! எங்கள் வேலை முடிந்தது; நாங்கள் சென்றுவருகிறோம். எங்கள் வரலாற்றைத் தெரிவிக்காமல் சென்றால் தங்கள் மனம் எவ்விதம் சமாதானமாகும். அம்மணீ! இந்த ஊரில் ஓர் சினிமா படமெடுக்கும் கம்பெனி நாங்கள் வைத்திருக்கிறோம். அதில் முதன்முதல் ஒரு கதையை நடிக்கப் பழக்குகின்றோம். அக்கதையில் இத்தகைய சம்பவம் வருகின்றது. அந்த பாகத்தைத் திறமையாக நடிக்கின்றார்களா! அதனால் பிறருக்கு உண்மையிலேயே அதற்கு வேண்டிய பயம், அச்சம், முதலிய உணர்ச்சிகள் உண்டா கின்றனவா! என்று பார்ப்பதற்கே திடீரென்று ஒரு வீட்டில் புகுந்து இந்த பாகத்தை நடிக்கச் செய்தேன். உங்களுக்கேற்பட்ட உணர்ச்சி களையும், மற்றையோரின் பீதியையும் கண்டு இவர்களின் நடிப்பு நன்றாக விருக்கிறதென்று அறிந்தேன். அம்மணீ! அனுமதி இன்றி உள்ளே வந்ததற்குக் கோபிக்கவேண்டாம். நடிப்புத் திறமையைக் காணவே அங்ஙனம் செய்தோம். இங்கு நடித்ததால் உங்கள் மூலம் இன்னும் சில விஷயங்கள் நடிக்கக் கற்றுக்கொண்டோம். இக்கம்பெனியில் பெண்கள் பாகத்தை பெண்களே நடிப்பதற்கான ஏற் பாடு செய்திருக்கிறது. பிரியமிருப்பின் நீங்கள் யாரேனும் சேரலாம். வித்தியாசம் எண்ணவேண்டாம்" என்றான்.
------
இதைக் கேட்ட பாலா முதலிய எல்லோருக்கும் பெரும் ஆச்சரியமுண்டாகி விட்டது. "அடாடா! ஒரு க்ஷண நேரத்தில் ஏமாந்து விட்டோமே! படக்காக்ஷிக்காரர்களா நீங்கள்! என்ன வியப்பு! என்ன சாமர்த்தியம். ஆகா! உண்மையிலேயே ஏதோ பெரிய விபரீதமான கொலை இவ்விடத்தில் நடக்கப்போகிறது. அதனால் எங்களுக்கும் பேராபத்து நோப்போகின்றது என்றல்லவோ நான் எண்ணிவிட் டேன். என்ன பயங்கரம்!" என்றாள்.
வந்தவன்.- அம்மா! அந்த துப்பாக்கியைக் கொடுங்கள். அது வெறும் துப்பாக்கி. தோடா இல்லை. இக்கத்தியும் சாதாரண அட்டையில் செய்த கத்தி. இன்று நடிப்பின் திறமையைக் கண்டு கொண்டு நாளைய தினம் படம் பிடிக்கலாமென்று உத்தேசம். அம் மணீ! நாங்கள் உத்தரவு பெற்றுக்கொள்கிறோம். இன்று நடந்த சம்பவத்திற்கு எங்களை மன்னிக்கவும். இப்படியே ஏதேனும் ஒரு சமயம் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் இவ்விடம் வருவோம். வித்யாசமாக எண்ணவேண்டாம்." என்று கூறி விடைபெற்றுக்கொண்டு எல்லோரும் போய்விட்டார்கள்.
------