(Reading time: 29 - 57 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

அவனருள்.

   

கேசவன் :- கண்ணே! பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அது ஈழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. 'இந்த சந்தோஷகரமான விஷயத்தைக் கேட்டு முழு மனத்துடன் ஆநந்திப்பதற்கு என் தாயார் இல்லையே!' என்கிற துக்கம் தொண்டையை அடைக்கின்றது. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு அன்னைக்கு ஈடாகுமா! என்பார்கள். அது போல என் தாயார் ஒருத்தி இருந்து அனுபவிக் கும் ஆனந்தத்திற்குச் சமானம் எது வரும்? அன்பே! "பசி; பசி" என்று வாடி, வருந்தி, கத்திக் கொண்டிருந்த சகோதரிகளையும் தாயாரையும் பிரிந்த அக் கால நினைவு இப்போதும் என் கண் முன்பு தோன்றுகின்றது. நளனையும் தமயந்தியையும் சனி பகவான் பிரித்தது போல என்னையும் என் தாயார், சகோதரிகள் ஆகியவர் களையும் விதி பிரித்து விட்டதே! நளனுக்கு ஏழரை வருடமானதும் சேரும்படியாகப் பிராப்த மிருந்தது. நான் அக் கதியுமற்று தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது இந்த துயரம் தீர்ந்து விட் டால் நான் முற்றும் கவலையற்றுக் களிப்புறும் மனிதனாவேன்.என் இன்னமுதே! இன்று நமக்கு நற்காலம், தீயகாலம் இரண்டும் சேர்ந்திருந்ததாகவே நினைக்கிறேன். ஏனெனில் இவ்விதமான ஆபத்து எனக்கு சம்பவித்ததனாலேதான் நான் இந்த வேளையில் இங்கு வரவும், அன்பு பரஸ்பரம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆயிற்று. நான் சென்று வருகிறேன்; பயப்படாதே. எந்த நேரத்திலும் கடவுளைத் தொழுது வேண்டு. அவன் காப்பாற்று வான்!" என்று கூறிப் புறப்பட்டான்.

   

இது கேட்ட பரிமளா "அன்பரே! சென்று வாருங்கள். நீங்களும் கூடுமான வரையில் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள் ளுங்கள். என்னுயிர் உங்கள் கையீல் தானிருக்கிறது என்பதை மறக்காதீர்கள்; இந்த காயங்களுக்குத் தக்க சிகிச்சை செய்யுங்கள். அடிக்கடி சந்திப்பதை மறந்து விடாதீர்கள்." என்று விடை பகர்ந் தாள். பிறகு கேசவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு வெளியே வந்து தன் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தான். அன்றிரவு நித்திரையே கொள்ளவில்லை. அன்று நிகழ்ந்த சம்பவத்தையே எண்ணி எண்ணி இன்பமும் துன்பமும் அடைந்தவாறு இரவைக் கடத்தினான்.

   

சில தினங்களாயின. எஜமானர் ஊரிலிருந்து வந்தார். வந்த உடனே கேசவன் நடந்த விஷயங்கள் சகலமானவற்றையும் தெரிவித்தான். இது கேட்ட எஜமானர் திடுக்கிட்டு "அப்புறம் எதுவும் நடக்கவில்லையா! பரிமளா சௌக்யமாக இருக்கிறாளா?” என்றார்.

   

கேசவன்:- சௌக்யமே.தந்தையே! நமது துப்பறியும் நாயுடுகாருவினிடம் நான் சொல்லியதற்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.