ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன உன்னதமான மாளிகை! என்ன செல்வம்! அரண்மனையும் இதற்கு ஈடாமோ? எத்தனை தாதிமார்! எத்தனை வேலைக்காரர்! இந்த இடத்தின் சுகம் சுவர்க்கத்திலும் கிடைக்குமோவென்பது சந்தேகம்.
வஸ : ஸ்வாமி! ஸோமேசரே! நமஸ்காரம்; வர வேண்டும்.
ஸோமே : மங்களானி பவந்து! ஸுகிபவா!
வஸ : தயவு செய்து இந்த ஆசனத்தில் உட்காரும்.
ஸோமே : நீயும் உட்கார்.
வஸ : எஜமானர் க்ஷேமந்தானே?
ஸோமே: க்ஷேமந்தான்! இவ்விடத்தில் எல்லாரும் செளக்கியந்தானே?
வஸ : தங்கள் ஆசீர்வாதத்தால் க்ஷேமமே. கெளரவமென்னும் விதை முளைத்து, நாணம் என்னும் அடி மரமாய் வளர்ந்து, நற்குணங்கள் என்னும் கிளைகளாய்ப் படர்ந்து, நல்லொழுக்க மென்னும் இலைகளாய் விடுத்து, தயாள குணத்தை மலர்களாய்ப் புஷ்பித்து, நன்மை என்னும் பழங்களைச் சொரியும் மரமாகிய இந்த மாளிகையில், பிரியமாகிய பறவைகள் ஆனந்தமாய் தங்கி வசிக்கின்றன.
ஸோமே : (தனக்குள்) ஆகா! எவ்வளவு இலக்ஷணமாகவும் புத்தி நுட்பமாகவும் பேசுகிறாள். (வெளிப்படையாக) அப்படியா! மிகவும் சந்தோஷம்! மாதவராயர் தன்னுடைய ஆசீர்வாதத்தையும் பிரியத்தையும் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்.
வஸ : (வணங்கி) அவருடைய ஆக்ஞையை வணங்கிச் சிரசினால் ஏற்றுக் கொண்டேன். (வணங்குகின்றாள்)
ஸோமே ; ஆனால்...