(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

வஸ : என்ன ஆனால்?

   

ஸோமே : ஒரு விசேஷம்.

   

வஸ : என்ன அது?

   

ஸோமே : சொல்ல நாவெழவில்லை.

   

வஸ : அதென்ன சங்கதி? என்னுடைய பிரபுவுக்கு ஏதாவது துன்பம் சம்பவித்ததா? சீக்கிரம் தெரிவித்தல் வேண்டும்.

   

ஸோமே : ஒன்றுமில்லை. நகை மூட்டை...

   

வஸ : நகை மூட்டைக்கு என்ன? திருட்டுப் போய்விட்டதா?

   

ஸோமே : இல்லை. எஜமானர் சூதாடி தோற்றுவிட்டார்.

   

வஸ : (தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! நகை மூட்டைத் திருட்டுப் போயிருக்கச் சூதாட்டத்தில் தோற்று விட்டதாகத் தெரிவிக்கிறாரே அவர் பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது! அவர் சொல்லும் இந்தப் பொய்கூட நான் அவர் பேரில் கொண்ட மோகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

   

ஸோமே : நகைகளைப் பற்றி வருத்தப்படாதே! காரியம் மிஞ்சிப் போய் விட்டது! என்ன செய்கிறது! அவர் சூதாடுகிறவரல்ல என்னமோ பொல்லாத வேளை இப்படி ஆனது! இதோ இந்த வைர ஸரத்தை அவற்றிற்குப் பதிலாக ஏற்றுக்கொள்.

   

வஸ : (தனக்குள்) ஆகா இது இன்னமும் அதிக ஆச்சரியத்தை விளைவிக்கிறது! என்னிடத்தில் வந்து விட்ட நகைகளைக் காட்டி விடலாமா? (யோசித்து) இருக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.