(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

சசி : (வஸந்தஸேனைக்கு) ஸ்திரீ ரத்னமே! உனக்கு ஈசுவரன் சகல மங்களமும் அளிக்கட்டும். அடி மல்லிகா! உனக்கு சுதந்திரமும், மனைவி என்னும் மேன்மை நிலைமையும் அளித்த பேருபகாரியாகிய உன் எஜமானியை நன்றி பெருக வணங்கி விடை பெற்றுக் கொள்.

   

வஸ : பிரிய மல்லிகா! சுகமாய்ப் போ!

   

(”ஷாஜமான்” என்ற இந்துஸ்தானியின் மெட்டு)

   

மல்லி : பெண்மணீ! சென்று வருவேன் தல்லியே!

   

வஸ : கண்மணீ! சென்று-வருவாய் மல்லிகா!

   

மல்லி : காணக் கிடைக்காத வென்றன் - மானே!

   

நற்றேனே! என்னன்பே - என்னாவியே!

   

வஸ : ஆசைக்குகந்த வென்றன்மாதே! நற்கோதே!

   

கவலாதே! மறவாதே!

   

மல்லி : சுந்தராங்கி! நின்னையினி - மறவேன்.

   

வஸ : சொன்னமே! நின் நன்மையினி - மறவேன்.

   

(மல்லிகா விசனத்துடன் வணங்கச் சசிமுகன் அவளை அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியில் வரு கிறான். அந்த சமயத்தில் இராஜபாட்டையில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்.)

   

”துடும், துடும், துடும், துடும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.