(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

பிழை செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும். (காலில் விழுந்து வணங்குகிறாள்)

   

மல்லி : (நந்தன் சரித்திரம்: ”வருகலாமோ” என்ற பாட்டின் வர்ண மெட்டு)

   

மாஞ்சி - ரூபகம்

   

ப. தருமமாமோ? அம்மா - இந்தச்

   

சிறுமியின் மீதுமக் கேனிந்தக் கோபமோ?

   

அ. இருவருமோருயி ரென்னவே - என்று

   

மிருந்ததையாயினு மெண்ணவே - உந்த

   

மிருடா தங்கள் யான் பணிந்தெத்தினேன் தேவியே! (தரு)

   

ச. தாயென உம்மையான் - அடைந்தேனே - நொடி

   

தப்பாம லருகினில் இருந்தேனே.

   

நாயென நன் றியைச் - சுரந்தேனே - என்றன்

   

ஆவியே யுமதென - மதித்தேனே - என்ன

   

விதியோ! யென்றன்தீ மையிதாகுமோ? ஞாயமோ? (தரு)

   

வஸ : அப்படி ஒன்றுமில்லை எழுந்திரு மல்லிகா! மனப் பூர்வமான உன்னை இவருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் ஆசையினாலேயே இப்படிச் சொல்லுகிறேனே யொழிய வேறு வித்தியாசமில்லை. (அன்பொழுக) எழுந்திரம்மா! இவருடன் போய் ஸெளக்கியமாக வாழ்ந்து கொண்டிரு. என்னை மாத்திரம் உன் ஞாபகத்தில் வைத்துக் கொள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.