(தோழனும் பத்மநாபனும் வருகிறார்கள்)
தோழ : மகாப் பிரபு! பத்மநாபனை இதோ அழைத்து வந்தேன். வஸந்தஸேனையை ஒப்புவித்தேனே! அவள் எங்கே இருக்கிறாள்? காணோமே!
வீர : அவள் அப்பொழுதே போய் விட்டாளே!
தோழ : எங்கே போனாள்?
வீர : உனக்குப் பின்னால் வந்தாளே!
தோழ : அந்தத் திக்கிலேயே அவள் வரவில்லையே!
வீர : நீ எந்தத் திக்கில் இருந்தாய்? தோழ நான் கிழக்குத் திக்கில் இருந்தேன்.
வீர : அப்படியானால் சரிதான்; அவள் தெற்குத் திசையில் அல்லவோ போனாள்.
தோழ : நான் தென் புறத்திலும் போனேனே!
வீர : அப்படியானால் அவள் வடக்குப் பக்கமாய்ப் போய் இருக்க வேண்டும்.
பத்ம : நான் வடக்குப் பக்கத்திலேயே இருந்தேனே! ஒருவரையும் காணவில்லையே!
வீர : மிகுதி இருப்பது மேற்குத்தானே சரிதான் அப்படித்தான் போனாள். இப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது! இந்தச் சோலையில் சூரியனிருக்குமிடம் தெரியாமையால் கிழக்கு மேற்கு தெரிகிறதில்லை.
தோழ : என்ன இது? நீங்கள் சொல்வது எனக் கொன்றும் விளங்கவில்லையே! நன்றாய்த் தெரிவியுங்கள்.