இன்ஸ்பெக்டர் ரவி : “ இல்ல கந்தசாமி ..... நீங்க இல்லைன்னா .... இதப் பண்ணீருக்க முடியாது ..... நீங்க உங்க குடும்பத்தக் கூட , பாக்காம , இந்த மூணு நாளா , என்கூடவே இருந்தீங்க ...அதனால தான் , இதப் பண்ண முடிஞ்சது ... “ என்றார் பெருமிதத்தோடு ....
ஏட்டு கந்தசாமி : “ சார் ! இன்னைல இருந்து , நானும் உங்களமாதிரி ஒரு நாத்திகன் சார் ..... “ என்றார் கர்வத்தோடு .....
இன்ஸ்பெக்டர் ரவி : (... சிரித்துக்கொண்டே ...) “ அடப்போய்யா..... “ என்று சொல்லிக்கொண்டே , தன் வீட்டுக்கு கிளம்பியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .
இருபது நிமிடப் பயணத்தில் ,,,,, வீட்டை அடைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ... எதையோ சாதிருந்த மகிழ்ச்சி , அவர் முகத்தில் தெரிந்திருந்தது . அடுத்தநாள் காலையில் செய்ய , வேண்டிய பணிகளைப் பற்றியே , அவரது சிந்தனை இருந்தது .... அதே யோசனையிலேயே இரவு உணவை , முடித்திருந்தார் .... வழக்கம் போல , கிரைம் நாவல்களை , அவர் வீட்டுப் புத்தகக் கிடங்கில் ,தேடிக்கொண்டிருந்தார் .... பிரபல எழுத்தாளர் நடேசனின் , “ மரணத்துக்கு அப்பால் ” என்ற நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்திருந்தார் ... மனிதனின் மரணத்துக்குப் பிறகு ,நடக்கக் கூடிய சம்பவங்களை ஒட்டி , மிக விறுவிறுப்பாகவும் , பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்தது அந்த நாவலின் கதைக்களம் ... நிறைவேறாத ஆசையுடன் கூடிய ஆன்மாக்கள் ,மீண்டும் கடந்து வந்த பாதைகளைகளியே , சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் , என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருந்தார் அந்த நாவலாசிரியர் நடேசன் ... பாதிப் பக்கங்களைப் புரட்டியிருப்பார் .... திடீரென அவர் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது .... இந்த நேரத்தில் யாராக இருக்க முடியும் ??? என்று யோசித்துக் கொண்டே , கையில் டார்ச்சையும் ,ரிவால்வரையும் எடுத்துக் கொண்டு , கதவுப் பக்கத்தில் சென்றார் ... கதவு வேகமாக தட்டப்பட்டுக் கொண்டிருந்தது .... மின்னல் வேகத்தில் , கதவைத் திறந்தார் ரவி ... வெளியே ஆள் அரவமற்று இருந்தது ... சற்றே திடுக்கிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் ரவி ... வெளியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , கதவுப் பக்கம் திரும்பிய அவரின் அடுத்த வினாடி , திடீரென்று , ஏதோ ஒரு உருவம் , வேகமாக அவரைக் கடந்து செல்வதைப் போல் இருந்தது ... பயத்தில் உறைந்திருந்த அவர் , உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார் .... அந்த நேரம் பார்த்து , மீண்டும் மின்சாரம் வந்து , வந்து போய்க்கொண்டிருந்தது .... டார்ச் விளக்கை , தயாராகவே வைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ... உள்ளே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ... ஒரு கட்டத்தில், மின்சாரம் முற்றிலுமாக நின்றிருந்தது ... டார்ச் விளக்கை அடித்துக் கொண்டே , முன்னேறியிருந்தார் ... யாரோ , தன்னைப் பின் தொடர்வதைப் போல அவர் உணர்ந்தார் ..... பயத்தின் உச்சத்தில் இருந்த அவருக்கு , உடல் முழுக்க வியர்த்து வழிந்திருந்தது .... அவரின் வலதுபுறமாக கண்ணாடிக்குப் பக்கத்தில் , யாரோ நிற்பது போல் இருந்தது .... டார்ச்சை வலதுபுறமாகத் திருப்பிய அவர் , அரண்டு போயிருந்தார் ... தலைவிரிக் கோலத்தில் , ஒரு பெண் குனிந்து , அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததை , அந்தக் கண்ணாடி அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ... யார் .... யார்ரர்ர்ரு ????? என்று உளற ஆரம்பித்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .... குனிந்திருந்த அந்த முகம் , திடீரென நிமிர்ந்து , அவரைப் பார்த்து சிரித்தது ... சப்த நாடிகளுமே அடங்கிப் போயிருந்தது அவருக்கு ... கோர முகத்துடன் , இறந்து போயிருந்த வெண்ணிலாதான் அங்கு நின்று கொண்டிருந்தாள் ... மீண்டும் மின்சாரம் வந்திருந்தது .... அந்த உருவம் மறைந்திருந்தது .... அவருடைய மனம் படபடத்திருந்தது ... அந்தக் கண்ணாடியில் , எதோ குறிப்பு , எழுதியிருப்பதைப் போல அவருக்குத் தெரிந்தது .... அதைப் பக்கத்தில் சென்று ,படிக்க ஆரம்பித்த அவர் அதிர்ந்து போனார் ....
“ ... தவபுண்ணியத்தின் கடைசி அரைமணி நேரம் ...“ என்று அதில் எழுதப்பட்டிருந்தது .... அப்பொழுது தான் பொன்னையா சொன்ன , பதில்கள் அவருக்கு நியாபகம் வந்திருந்தது ...சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் , வெண்ணிலாவின் ஆவிதான் பழி வாங்கியிருகிறது என்பதை , அவர் உணர்ந்தார் ... பதற்றத்துடன் தவபுண்ணியத்தின் , தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டார் .... ரொம்ப நேரமாகவே , அழைப்பு மணி அடித்துக் கொண்டிருந்தது ... யாரும் எடுத்த பாடில்லை ... போலிஸ் ஜீப்பில் ஏறியிருந்த , அவர் மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார் .... “ THE NUMBER YOU ARE TRYING TO REACH IS NOT ATTENDING THE CALL .. PLEASE TRY AGAIN LATER “ என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் பேசியிருந்தது .... போலீஸ் ஜீப்பை வேகமாக செலுத்தியிருந்தார் .... ஏட்டு கந்தசாமியின் எண்களைத் தொடர்பு கொண்டார் .... வெகுநேரமாகியும் அவரிடமிருந்தும் ஒரு பதிலுமில்லை ...அவருக்கு “ CALL ME – URGENT ” என்று MESSAGE அனுப்பிருந்தார் ... குழப்பத்தின் உச்சத்தில் , போலிஸ் ஜீப் புயலாகக் கிளம்பியிருந்தது .... அந்த நேரம் பார்த்து அவருக்கு , அன்பாலாய வேதாந்த சுவாமிகளின் நியாபகம் வந்திருந்தது ... தேடித்பிடித்து அவருடைய எண்களைத் தட்டினார் .. மறுமுனையில் , தொடர்ந்து ரிங் போய்க் கொண்டிருந்தது .. கடைசி நேரத்தில் , போனை எடுத்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ....
இன்ஸ்பெக்டர் ரவி : ( ... பதற்றத்தில் ...) சுவாமிஜி !!! சுவாமிஜி !!! என்று பதறினார் .... அவரின் பதற்றத்தைப் புரிந்து கொண்ட சுவாமிகள் ,