இன்ஸ்பெக்டர் ரவி : “ சரி ! அதெல்லாம் இருக்கட்டும் ..... ஆனா நீ ...... எதுக்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் கொலை பண்ணின ?? அவங்க கூடவே இருந்த நீ , எதுக்கு அவங்கள கொலை செஞ்ச ????? அவங்களுக்கும் உனக்கும் அப்படியென்ன , தனிப்பட்ட பிரச்சனை ??
(.... மௌனமாக இருந்தான் பொன்னையா .....)
ஏட்டு கந்தசாமி : “ எதுக்காக அவங்கள நீ கொலை பண்ணின ? .... நீ கொலை பண்ணதுக்கான ஆதாரங்கள் எங்க கிட்ட இருக்குது .... மரியாதையா உண்மைய சொல்லிடு .... உனக்கு பின்னாடி , யார் யாரெல்லாம் இருக்கா ???? உன்னோட அடுத்த குறி யாரு ???? தவபுண்ணியம் தானே .... சொல்லு !!!...... “ .
பொன்னையா : “ அவங்க , ரெண்டு பேர்த்தையும் , கொலை பண்ண சொன்னதே , தவபுண்ணியம் ஐயா தான் ...... “ என்றான் கோபமாக .
(... அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ...)
இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன ??? தவபுண்ணியமா ??????? அவர் எதுக்காக அவருடைய நண்பர்களையே ????? .......... “ என்றார் .
பொன்னையா : “ இதுவரைக்கும் நாங்க பண்ண எல்லாமே சரியாத்தான் நடந்துட்டு வந்துச்சு ... ஆனா நாங்க எதிர்பாராத ஒன்னு , என்னன்னா ??? அது உங்களோட விசாரணை தான் .... நீங்க விசாரிக்கிறதப் பார்த்த , இன்னும் கொஞ்ச நாள்லயே , தவபுண்ணியத்த நெருங்கிருவீங்களோன்னு , பயந்து தான் ... அவர் ஒரு திட்டம் போட்டார் ... அதன்படி தான் , இந்த கேஸ திசை திருப்புவதற்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையுமே , அவர் கொலை பண்ண முடிவெடுத்தார் ... அவங்கள கொலை பண்ணிட்டா , இந்த கேஸ் மறுபடியும் , ஆவி , அமானுஷ்யங்கற கோணத்திலேயே , இன்னும் கொஞ்ச நாளைக்கு , இழுத்தடிக்கும் ... அதனால தான் , அவர் இதை பண்ண சொன்னார் ...”
(... இன்ஸ்பெக்டர் ரவி , தன் கன்னத்தில் கை வைத்து , பொன்னையாவையே பார்த்துக் கொண்டிருந்தார் .... அவனிடம் , ஆர்வமாக , அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுகொண்டிருந்தார் கந்தசாமி ...)
ஏட்டு கந்தசாமி : “ SO , ஒரு கொலைய மறைக்கறதுக்காக , நீங்க ரெண்டுபேரும் , அடுத்தடுத்து ரெண்டு கொலை பண்ணீருக்கீங்க ..... நாளைக்கு , உங்க ரெண்டு பேரையும் , உங்க ஊர்க்காரங்க முன்னாடி , அடிக்கிற அடியில , தவபுண்ணியத்தோடு வாயிலயிருந்தே , எல்லா உண்மையையும் , வெளில கொண்டு வர்றோம் .... “
(... அதை நினைத்து , அதிர்ந்து போன பொன்னையா ... உடனே ...)
பொன்னையா : “ சார் ! சார் ........ ! நான் அவங்கள கொலை பண்ணத்தான் , அங்க போனேன் ... ஆனா அவங்க ரெண்டு பேருமே , என்னைப் பார்த்த உடனே , எதோ ஒரு அதிர்ச்சியிலயே செத்துட்டாங்க ... நான் அவங்கள கொலை பண்ணல சார் !!! நான் நிரபராதி ..... என்ன விட்டுடுங்க சார் !!! .. நான் புள்ளகுட்டிக்காரன் .... எனக்கு குடும்பம் இருக்குங்க சார் !!! ... “ என்று திரும்பத்திரும்ப இதையே சொல்லி , அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான் ....
இன்ஸ்பெக்டர் ரவி : (.... உக்கிரமான முகத்துடன்....) “ அப்ப ..... செத்துப் போனவங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ???? ... “ என்று மீண்டும் , ஆத்திரம் தீரும் அளவுக்கு அவனை அடித்துவிட்டு , வெளியே வந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் “ ....
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் , அவனை விசாரணை செய்திருப்பார்கள் .... மணி 9 –ஐத் தொட்டிருந்தது ... இருவரும் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து , சிகரெட்டைப் பற்ற வைத்து , புகையை ஊதித் தள்ளியிருந்தனர் ...
ஏட்டு கந்தசாமி : “ சார் ! எப்ப சார் ??? நாம , தவபுண்ணியத்த கைது பண்ணப் போறோம் ??? “
இன்ஸ்பெக்டர் ரவி : “ நாளைக்கு காலைல , சரியா 9 மணிக்கு , பொதுமக்கள் முன்னாடியே , தவபுண்ணியத்தோட கையில , விலங்க மாட்டி , ஸ்டேஷனுக்கு , இழுத்துட்டு வரப் போறோம் .... அதுக்கு அடுத்தபடியா , அன்பாலய வேதாந்த சுவாமிகளையும் கைது பண்ணி , ஸ்டேஷன்ல வெச்சு வெளுத்தா எல்லா உண்மையும் வெளில வந்துரும் .... இன்னிக்கு ஒரு நாள் ராத்திரி மட்டும் , நீங்க ஸ்டேஷன்லயே இருங்க ... ஏன்னா .... பொன்னையாவ கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும் “ ... என்னால முடியல . ரொம்ப நாளைக்கு அப்புறம் , இன்னிக்குதான் நான் நல்லா தூங்கப் போறேன்னு நெனைக்கிறேன் ... “ என்றார் சிரித்துக்கொண்டே ...
ஏட்டு கந்தசாமி : “ சார் ......! அதெல்லாம் நான் பாத்துக்கறேன் சார் .... நீங்க வந்ததுக்கப்புறம் தான் இந்த ஊருக்கும் , இந்த கேஸ்க்கும் , ஒரு விடிவு காலமே பொறந்திருக்குது ... உங்களுக்காக இதைக் கூட , நான் பண்ண மாட்டெனா ??? “ என்றார் ...