Page 21 of 21
வேலை பார்க்க விடலே. அவங்க அவனை ஒரு சுதேச ராஜாவோட ராணுவத்திலே சேர்த்துட்டாங்க. அந்த வேலையிலே பதவிப் பெருமையைத் தவிர வேற என்ன இருக்குங்க?"
நான் உம்மென்று உட்கார்ந்திருந்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.
"இப்போ இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரோட நிலை என்ன ஆச்சுன்னு பார்க்கணும். இவன் இன்னொரு ராணி பசந்த். இந்தப் பொண்ணு அபூர்வ அழகியாம். அழகாயிருந்தா நடத்தை கெட்டவளாயிருப்பாங்கறதிலே என்ன ஆச்சரியம்? எவ்வளவுக் கெவ்வளவு கெட்டவளாயிருப்பாளோ அவ்வளவுக்கவ்வளவு அழகியாயிருப்பா."
பெருமூச்சு விட்டார் கான் பகதூர்..
-----------------------------