“ஊரு உலகம் என்ன சொல்லுமோன்னு பார்த்திருந்தா சரவணன் சார் எனக்கு அந்த உதவியை செய்திருக்க முடியாது! இன்னைக்கு இளவரசி வந்து ராஜன் சாரை காப்பாத்தி இருக்க முடியாது! தங்கமான குணம் இரண்டு பேருக்கும்!”
“நான் கனவுலயும் நினைச்சு பார்க்கலை! இப்படி ஒரு நல்ல சம்மந்தம் அமையும்ன்னு. இந்த நேரம் அப்பா மட்டும் இருந்திருந்தா எவ்வளோ சந்தோஷ பட்டு இருப்பார் தெரியுமா? உன் கல்யாணத்தை பார்க்க அப்பா இல்லாம போயிட்டாரேன்னு தான் கவலையா இருக்கு!”, என்று சொல்லும் பொழுதே அவர் கண் கலங்கியது.
கலகலப்பாக இருந்தாலும் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார் ரஞ்சிதம். அவருக்கு உண்டான அனுபவம், இளவரசியை சரியாக புரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
எந்த விஷயமும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. நான் பார்த்ததிற்கும், அம்மா அதை பார்த்ததிற்கும் எத்தனை வித்தியாசம்! நான் இளவரசியை மட்டுமே நினைத்தேன்.. அந்த நெருக்கத்தை மட்டுமே பார்த்தேன்! ஆனால் அம்மா அவள் கண்ணியத்தையும்... சூழ்நிலையையும் நினைத்திருக்கிறார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இளவரசி நல்ல நோக்கத்திற்காக செய்த காரியம், மூடு பனியாய் அவன் மனதை ஆக்கிரமித்த எண்ணங்களை போக்கி தெளிவு படுத்தி இருக்கிறது. என்று எண்ணிக் கொண்டவன்.. தந்தையின் நினைவில் கலங்கிய தாயை ஆறுதல் படுத்த.. சமாதானமடைந்தவர்,
சிறிது நேரம் கழித்து ஏதோ நினைவு வந்தவராய்,
“இளவரசி ஏதோ ஸ்பெஷல் டேன்னு சொன்னாளே! உன்கிட்ட ஏதாவது பேசணும் நினைச்சாலும் நினைப்பான்னு அவசர அவசரமா அங்க இருந்து உங்களை அனுப்பி வைச்சேன்.. என்னடா ஸ்பெஷல் டே? அவளுக்கு பிறந்த நாள் கூட செப்டம்பர் தானே!”, என்று கேட்க...
“இளவரசி என்னை மாப்பிள்ளை பார்த்துட்டு போய் இன்னைக்கோட ஐம்பது நாள் ஆகுதும்மா! அதான் ஸ்பெஷல்!”, என்று அவன் சொல்ல..
“மாப்பிள்ளை பார்க்கிறதா?”, என்று திகைத்தார் ரஞ்சிதம்.
This is entry #14 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}