“ let’s take a selfie pulla..give me a umma..umma” சிறுபிள்ளையை போல குரலை மாற்றி அவள் பாட,
“ லொள்ளு ஜாஸ்தி ஆச்சு உனக்கு வரவர ? காஃபி வேணுமா? வேணாமா டீ?” என்றான் அஷ்வின்..
“ அஹெம் அஹெம் வேணும்”
“ வேணும்னு சொல்லிட்டு திருப்பி தூங்கறியா?ம்ம்ம்ம்ம்ம்ம் நீ லேட் பண்ணுற..நான் குடிக்க போறேன்..போடீ” என்று அவளை மிரட்டினான் அஷ்வின்.
“டேய், குடிச்ச கொன்னுருவேன்” என்று அனன்யா மிரட்டவும் அஷ்வின் குஷியானான்…
“குடிக்க போறேன்..குடிக்க போறேன்…குடிச்சிட்டேன்” என்றபடி அவளது காஃபியை கொஞ்சமாய் குடித்து வைத்தான். “ நீ சிப் பண்ணிட்டியா ? என் ப்லான் சக்சஸ்.. இப்போ கொடு.. லவ் யூ செல்லம்” என்று அவள் கண்ணடித்தபடியே காற்றில் அவனுக்காக முத்தத்தை பறக்கவிட்டு அவன் கையில் இருந்த காஃபியைன் குடித்தாள்.. “அடி கள்ளி” என்று அவளது குறும்பை ரசித்தபடி கன்னத்தை கிள்ளினான் அஷ்வின். ஒருவழியாய் தனது காதல்கடமைகளை முடித்துவிட்டு ஆபிசிற்கு அவன் கிளம்பிய நேரம் வானொலியில் அதேபாடல் ஒலித்தது.. “நான் மெரசலாயிட்டேன்”.. நேரம் 9.26AM..அலட்சியமாய் தோளை உலுக்கி கொண்டு வழக்கம் போல பாடலுடன் இணைந்து பாடினான் அஷ்வின்.அடுத்த நாள் அஷ்வினுக்கு சற்று இயல்பாகவே இருந்தது.
புதன்கிழமை… வேலை முடித்து மாலை, வீடு திரும்பிய அஷ்வினை வாசலிலேயே அணைத்து கொண்டாள் அனன்யா.. சில வினாடிகளுக்கு பிறகு, மெல்ல அவனை விடுவித்துவிட்டு, “அழுக்கு பையா, போய் குளிச்சிட்டு வா…நான் காஃபி போடுறேன்” என்றாள். அங்கிருந்து நகர முயன்ற, அவளை இறுக அணைத்து கொண்டான் அஷ்வின்..
“எங்கடீ ஓடுற?”
“டேய் விடுடா பொறுக்கி…வீட்டுல யாரும் இல்லாத நேரமாய் பார்த்து என்னை என்னடா பண்ணலாம்னு பார்க்குற?” வில்லன் கையில் சிக்கிய நாயகி போல அவள் பயத்துடன் மிரல,
“ஹான்…உன்னை கதம் கதன் பண்ண போறேன்” என்று வில்லத்தனமாய் சிரித்தான் அவனும்.. அவன் தொடுதலில் உருகி நின்றவள்,
“ ச்சி..போடா” என்று அவனை விலக்கி விட்டு, அவன் கைகளில் மீண்டும் அகப்படாமல் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் .. “நில்லு டீ” என்று மனைவியை பின்தொடரச் சென்றவனை தடுத்து நிறுத்தியது அந்த சத்தம் .. கொஞ்சம் வெகுண்டுத்தான் போனான் அஷ்வின் ..எங்கிருந்து வருகிறது இந்த சத்தம் ? அவன் கண்கள் தன்னிச்சையாய் அவர்களது அறை மீது படிய , கால்கள் அறையை நோக்கி நடந்தன ..அருகில் செல்ல செல்ல அந்த சத்தம் அவனுக்கு தெளிவாகவே கேட்டது .. அது விக்கல் சத்தம் ! மனைவி சமையலறையில் இருக்க , தான் இங்கு இருக்க , இருவர் மட்டுமே இருக்கும் வீட்டில் மூன்றாவதாய் யார் இது ? என்ற கேள்வியுடன் அறைக்குள் நுழைந்தான் திகிலுடன் .
அவர்களது கட்டில் மெத்தையின் அடியில் இருந்து சத்தம் வரவும், நடுங்கிய கரங்களால் மெத்தை அவன் விலக்க, அங்கு மறைந்திருந்தது ஒரு கடிகாரம் .. அந்த அலாரம் சத்தம் தான் விக்கலாய் கேட்டதா ? என்று அவனது மூளை ஆராய்ச்சி செய்யும் முன்பே , ஏதோ ஒன்று அவனை கட்டிலில் தள்ள மெத்தை மீது விழுந்த அஷ்வினின் மீது பாரம் கூடியது ..
" டேய் அழுக்கு பையா , இன்னமும் ட்ரெஸ் கூட மாத்தாம என்ன பண்ணுற நீ ?" என்று கொஞ்சலுடன் அவன் மீது சாய்ந்திருந்தாள் அனன்யா .. அவளுடைய அருகாமையை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் திகிலுடனே பேசினான் அஷ்வின் ..
" எரும , இப்படியா வந்து பயமுறுத்துவ ?"
" என்னை பார்த்து நீ பயப்படுறியா ? ஏன்டா இப்படி இப்படி பொய் சொல்லுற ?"
" ஆமா , பொண்டாட்டிக்கு பயப்படாமல் தான் இருக்கோமாக்கும்..உனக்கு தாலி கட்டின அன்னைக்குல இருந்து இப்போ வரைக்கும் பயந்தவனாய் தானேடீ இருக்கேன்? " என்று புன்னகைத்தபடி அவளை அணைத்து கொண்டான் அஷ்வின் .. என்னதான் அவள் முன்பு காதலுடன் அவன் புன்னகைத்தாலும் , மனமோ இன்னமும் பயத்தில் தான் உறைந்து இருந்தது!
மறுநாள், வழக்கம் போல வேலைக்கு தயாராகி கொண்டிருந்தான் அஷ்வின் .. " நான் மெரசலாயிட்டேன் " அந்த பாடல் மீண்டும் கேட்டது அவனுக்கு .. ஒரு உந்துதலில் கடிகாரத்தை பார்த்தான் அஷ்வின் .. 9.26am. இந்த முறை எப்போதும்போல , தோளை உலுக்கி கொண்டு வேலையை பார்க்க அவனால் முடியவில்லை .. கடிகாரம் தான் பழுதாகிவிட்டதோ ? என்ற சந்தேகத்துடன் போனை பார்க்க, அதிலும் அதே நேரம் தான் காட்டியது . ஏதோ சரி இல்லையே என்று உணர்ந்தவனாய் பட்டென அருகில் இருந்த வானொலியை அணைத்தான் அஷ்வின் .. பாடல் நின்ற நிசப்தத்தில் கோரமாய் ஒரு பெண்ணின் குரல் .. " என்னடா பயந்துட்டியா ?" என்றது . அந்த குரல் கேட்கவும் தூக்கி வாரி போட்டது அவனுக்கு .. குரல் வந்த திசையில் அஷ்வின் திரும்ப அவன் பயத்தை கண்டு கலகலவென சிரித்து வைத்தாள் அனன்யா ..
" டேய் லூசு, என்னடா நான் வர்றதை பார்த்து ரேடியோ எல்லாம் ஆப் பண்ணுற ?" என்று அவள் இன்னமும் குறும்பாய் கேட்கவும் ..