(Reading time: 24 - 47 minutes)

" ஷ்வின் .. ஐ லவ் யூ டா .. உனக்கு ஒன்னும் ஆகாது எனக்கு தெரியும் " என்றாள் ..

" அப்பறம் ஏன்டீ கார்ல அழுதுட்டே வந்த ? என் கைய அவ்வளவு கெட்டியா பிடிச்சு இருந்த ? இங்க பாரு உன் வளையல் அடையாளம் என் கையில " என்று சற்று இயல்பாய் பேச முயன்றான் அவன் .  அவனை ஆச்சர்யமாகவும் , காதலுடனும் பார்த்தவள் " உனக்கு எப்படி டா தெரிஞ்சது ?  உனக்கு  ஒன்னுன்னா, என்னால தாங்க முடியாது " என்றபடி அவனை கட்டிகொண்டாள் ..

" லூசு , நீ கார்ல அழுதப்போ உன் கண்ணீர் என் கன்னத் துல பட்டத்தை நான் பீல் பண்ணேன் .. எனக்கு ஒன்னும் ஆகாது டீ .. லவ் யூ சோ மச் டீ " என்று அவளுக்கு ஆறுதல் உரைத்தான் அஷ்வின் . அப்போதுதான் அம்மா அப்பா இருவரையும் பார்த்தான் அஷ்வின் .. " ஒன்னும் இல்ல அம்மா ..அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் இப்போதான் இந்த பிரச்சனை  " என்றான் அவன் ..

" எங்களுக்கு தெரியும் டா உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு .. அதுனாலத்தான் தைரியமா இருந்தோம் .. அனன்யாவுக்கு தான் என்ன பதில் சொல்லுறதுன்னு பதறிட்டோம்  " என்று அவர் கூற,  அவர்களை கேள்வியுடன் பார்த்தால் அனன்யா ...

" வாம்மா டாக்டர் ராஜேஷை பார்க்கலாம் .. அவர் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுவார் " என்றபடி அவளை அழைத்து சென்றார் அப்பா .

" ஹெலோ டாக்டர் .. இவங்க அனன்யா .. அஷ்வினோட வைப் " என்று அறிமுகபடுத்தி வைத்தார் அப்பா .. அறிமுகபடுத்தி கொள்ளும் அளவு பொறுமை அவளுக்கு இல்லை .. எனினும் மரியாதையை நிமித்தமாய் புன்னகைத்தாள்  அனன்யா ..

" ஹலோ டாக்டர் .. அஷ்வினுக்கு ??"

"  அஷ்வினுக்கு ஒன்னும் இல்ல .. ஹி இஸ்  பெர்பெக்ட்லி ஆல்ரைட் .. "

" யா ஓகே  டாக்டர் .. ஆனா அவனுக்கு சாரி அவருக்கு மெண்டலி என்ன பிரச்சனை? "

" லாஸ்ட் மந்த் , அவரை தனியா விட்டுட்டு எங்கயாச்சும் போனிங்களா மிசர்ஸ் அஷ்வின் ?"

" யெஸ்  டாக்டர் .. கல்யாணத்துக்கு முன்னாடி என் வேலைய விட்டுட்டேன் .. ஆனா , அதுல நான் கடைசியா அட்டெண்ட் பண்ணின எக்ஸாம்ல பாஸ் பண்ணி இருந்தேன் ..அதுக்காக ஒரு செமினார் விஷயமா நாலு நாட்கள்  பெங்களூர்  போனேன் .. "

" ஹான் .. அதுதான் அவருடைய isolophobia பிரச்சனையை மீண்டும் கொண்டு வந்திருக்கு .. நேம் கேட்டு பயப்படாதிங்க .. it’s a  simple disorder.. தனிமைன்னா  ஒருவித பயம் இருக்கும் அவங்களுக்கு .. அந்த பயம் தான் இந்த பிரச்சனைக்கும் காரணம் .. அவ்வளவுதான் .. 5 வருஷம் முன்னாடி ஹாஸ்டல்ல  ஒரு வாரம் அஷ்வின் தனியாய் இருந்து அப்போ தான் இந்த பிரச்சனை வந்து நான் அவருக்கு ட்ரீட்மண்ட்  பண்ணேன் .. கவலை படுற அளவுக்கு எதுவுமே இல்லை .. ஜஸ்ட், அவரை ரொம்ப தனியா பீல் பண்ண விடாதிங்க ".. டாக்டரிடம் தனது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள்  அனன்யா .. அவளும் பொறுமையாய் அவளுக்கு பதில் அளித்தார் .. அவருக்கு நன்றி கூறி விடை பெற்று  கொண்டாள்  அவள் ..

" அன்னைக்கு அஷ்வின் தான்மா , இந்த மாதிரி பிரச்சனை  திரும்பவும் வருதுன்னு எங்கள போன் பண்ணி வர சொன்னான் .. அதுக்கு பிறகு இங்க டாக்டரை நானும் அம்மாவும் பார்த்துட்டு வர்ற நேரம் தான் நாங்க வழி மாறி போயி உனக்கு போன் பண்ணோம் " அனன்யாவிற்கு இப்போது எல்லாம் புரிந்தது ..

ஒருவழியாய் இதை சரி படுத்திவிட்ட நிம்மதியில் அப்பாவும் அம்மாவும் அவர்களது வீட்டிற்கே சென்றுவிட்டனர் .. இதற்கு மேல் அனன்யா சமாளித்து விடுவாள் என்ற நம்பிக்கை வந்தது அவர்களுக்கு ..

அவர்களை வழியனுப்பிவிட்டு  அஷ்வினிடம் வந்தாள்  அனன்யா ..

" என்னை விட்டுட்டு போகமாட்ட தானே டீ ?"

 அவனை இறுக அணைத்து  கொண்டு "போனா, என் உயிர் தான் போகும் " என்றாள்  அவள் ..

அதுவரை அவர்கள் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது .. இவள் அவனை கட்டியணைத்த  நேரம் மின்சாரம் வந்துவிடவும் குறும்பாய் சிரித்தான் அஷ்வின் ..

" உன் ஹக்ல எவ்வளவு பவர் இருக்கு பாரேன் " என்று அவன் கண் சிமிட்டி சிரிக்க , அவளும் அவனுடன் இணைந்து சிரித்தான் .. அவர்களது அறையில் வானொலி திடீரென ஒலித்தது.. " நான் மெரசலாயிட்டேன்  " அதே பாடல் ... நேரமோ 9.26am .. அவர்கள் வாழ்வில் உளவியல் பிரச்சனைகள் தீர்ந்து விட்டது ..ஆனால் அமானுஷ்யம் ??

This is entry #23 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.