“அடச்சீ...! என்ன வேணா செய்வீயா? வா... பக்கத்துல வா பார்ப்போம்... நான் கிராமத்துல பிறந்து வளர்ந்தவ டா... வர்மக்கலை கேள்வி பட்டிருக்கீயா??? ஒரே ஒரு நரம்புல அடிச்சேன்ன்னு வை... நீ எழுந்திருக்க அஞ்சு நாள் ஆகும்...” என சீறினாள் ப்ரியா.
சந்தோஷ் முகத்தில் பயத்தின் சாயல் தோன்றவும்,
“சீ, நீ எல்லாம் ஒரு ஆம்பளை.. உனக்கு நல்ல சாவே வராது...” என ஏதேதோ ப்ரியா பேசிக் கொண்டே போக, நந்திதா அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.
“வா ப்ரியா... அவன் ஒரு லூசர்! அவனை எல்லாம் மதிச்சு பேசிட்டு இருக்கீயே...”
நந்திதாவும், ப்ரியாவும் அவன் கண் பார்வையில் இருந்து மறைந்த பின்பும், சந்தோஷ் அங்கேயே நின்றிருந்தான்...! அந்த இடத்திற்கு வந்த போது இருந்த மனநில
...
This story is now available on Chillzee KiMo.
...
விட, நந்திதா, அவளின் அறைக்கு சென்றாள்.
உதய் தன்னுடைய போனில் சேவ் செய்து வைத்திருக்கும் நம்பர்களை பொதுவாக ஒரு சின்ன டெலிபோன் டைரியிலும் எழுதி வைப்பான்...
அதை தேடி கண்டுப்பிடித்து எடுத்தவள், ‘P’ பக்கத்தில் தேடி, பூர்ணிமா எனும் பெயரை கண்டுபிடித்தாள். அங்கிருந்த நம்பரை அழைத்தாள்.