“ஓ ஹோ... அப்போ தெலுங்கா இருந்தா கிண்டல் அடிப்பியா..?! சரி.. இப்போ எதுக்கு என் பின்னாடியே வந்து, நான் சொன்னதையே சொன்ன..?! ” என்று இன்னும் உக்கிரமாக முறைத்தாள்.
“நான் ஒன்னும் உன் பின்னாடி வரல... இவங்ககிட்ட பேச தான் வந்தேன்... நீயா ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்காத.. சரியா..?!” என்று இவர்கள் இருவரும் வார்த்தையால் போர் தொடுக்கும்போது, நல்ல வேலையாக இவர்கள் ஆர்டர் செய்திருந்த கேக்குகள் வந்து அங்கிருந்த மக்களை காப்பாற்றியது.!!
அவரவர்கள் கேக்குகளை வாங்கிக்கொண்டனர்., ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டே. காவ்யா விருட்டென்று திரும்பி செல்ல, உதய், “ஹலோ மிஸ்... நில்லு.. இப்படி உன் பேரை சொல்லாமல் ஓடினா எப்படி??” என்று கூவிக்கொண்டே ஓடினான், அவளின் பின்னால். வாழ்க்கை என்னும் மைதானத்தில், இவர்கள் இருவரும் தான் கைகோர்த்துக்கொண்டு ஓடப்போகிறார்கள் என்பதை அறியாமல்.
{kunena_discuss:1151}