அந்த நாள் அனைவருக்கும் அழகாக இருந்தது. அன்று இரவு சாதாரண காட்டன் புடவையில் எளிமையான அலங்காரத்தில் இருந்தாள் காவ்யா.
அவள் அருகில் வந்த மதி "அண்ணா வெயிட் பண்றாங்க டி. சீக்கிரம் போ", என்றாள்.
"என்னையாவது இன்னைக்கு தான் உங்க அண்ணா தேடுறாங்க . ஆனா சூர்யா அண்ணா எப்ப டா நீ கண்ணுல சிக்குவன்னு காத்துட்டு இருக்காங்க", என்று சிரித்தாள் காவ்யா.
"ப்ளீஸ் டி, நீயும் கிண்டல் பண்ணாத. ஏற்கனவே காயு என்னை ஒரு வழி பண்ணிட்டா. நீ தான் கல்யாண பொண்ணு. அதனால உன்னை தான் கிண்டல் பண்ணனும். சரி சரி சீக்கிரம் போ. அம்மா உன்னை அனுப்ப சொன்னாங்க", என்று சொல்லி ஷியாம் அறைக்குள் அவளை விட்டாள்.
வெட்கத்துடன் மனைவியாக அறைக்குள் வந்தவளை இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான் ஷியாம்.
அவன் பார்வையில் இயல்பாக முகம் சிவந்த படி அவன் அருகில் சென்றவள் "அம்மா கொடுக்க சொன்னாங்க", என்று அவன் கையில் பால் சொம்பை கொடுத்தாள்.
"அதெல்லாம் அப்பறம் தான் தேவை. இப்ப தேவையே நீ தான்", என்று சொல்லி அவளை படுக்கையில் அமர வைத்தவன் அவள் அருகில் அமர்ந்தான்.
பின் அவள் கையை பற்றி கொண்டு ஒவ்வொரு விரலாக பிடித்து முத்தமிட்டான். அவன் செய்கையை கூச்சத்துடன் ரசித்து கொண்டிருந்தாள். மேலும் அவளை நெருங்கியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். பின் அவன் உதடுகள் அவள் கழுத்து, காது மடல் என்று ஊர்வலம் போனது.
அவளை இறுக்கி கொண்டு அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் அவளை படுக்கையில் கிடத்தி இத்தனை வருட பிரம்மசாரியத்தை முடிக்க துடங்கினான். அவளும் அவனுடன் வாகாக ஒண்டி கொண்டாள்.
அதே நேரம் பக்கத்து அறையில் இருந்த சூர்யாவும், மதியும் கூட தங்களின் காதலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தார்கள்.
"எல்லாரும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா?", என்று திட்டி கொண்டிருந்தாள் கலைமதி.
"ஏய், இது என்ன டி நியாயம்? என் பொண்டாடியை நான் பாப்பேன். யார் என்ன சொல்ல முடியும்?", என்று கேட்டு கொண்டே அவளுடன் இழைந்து கொண்டிருந்தான் சூர்யா.
"ஆமா ஆமா பெரிய உரிமை தான் போங்க. ரூம்குள்ள வந்தா என்னை ஒட்டிகிட்டே தான இருக்கீங்க? அப்புறம் மித்தவங்க முன்னாடியாவது.....", என்று பேசி கொண்டிருந்தவளின் உதடுகளை அவன் சிறை செய்திருந்தான்.
அந்த முத்தத்தில் மூச்சு முட்டி போனவள் அவனை இறுக்கி கொண்டு சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கிய மதியாக சிவந்தாள்.
ஷியாமும், காவ்யாவும் பாரின் கிளம்பும் போது சூர்யாவும், மதியும் ஹனி மூனுக்காக அவர்களுடனே கிளம்பினார்கள்.
இரண்டு ஜோடிகளுக்கும் கிடைத்த தித்திப்பான காதலை ருசித்து அனுபவித்தார்கள் நால்வரும்.
முற்றும்....
{kunena_discuss:1169}