(Reading time: 57 - 113 minutes)

"எனக்கு மூளையா நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை திலகா? ஒரு முக்கியமான விசயம் பேசணும். இங்க வா", என்று அழைத்தவர் மோகன் சொன்ன அனைத்தையும் சொன்னார்.

"சுந்தர் எனக்கு ஒரு சந்தேகம்"

"கேளு திலகா"

"ஷியாம், நம்ம காவ்யாவுக்காக தான் இங்க தங்க வந்திருக்காரோ?"

"திலகா????", என்று அதிர்ச்சியாக அழைத்தார் சுந்தர். இப்போது தான் அவருக்கும் இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது.

....

"எப்படி அப்படி சொல்ற? எனக்கும் அப்படி இருக்கலாம்னு இப்ப தான் டி தோணுது"

"காதல்னு சொன்னப்பறம்  தான் தோணுச்சு. ஷியாம் மாதிரி ஒரு நல்ல பையன் கிடைச்சா எனக்கும் சந்தோசம் தாங்க. ஆனா ஷியாம் காவ்யாவுக்காக தான் இங்க தங்கிருக்கான்னு நமக்கு தெரிஞ்சதை காட்டிக்க வேண்டாம். வருங்கால மாப்பிள்ளைக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்க வேண்டாம்"

"சூப்பர் திலகா. மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணிட்டியா? நாளைக்கு ஷியாம் சந்தோசமா கிளம்பி போவான்"

அடுத்த நாள் அழகாக விடிந்தது. அன்று சூர்யா வீட்டுக்கு சென்று அப்படியே ஊட்டி செல்வதாய் முடிவெடுத்திருந்தார்கள்.

எல்லாரும் காவ்யா வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

ஷியாம் மட்டும் கீழே  வர வில்லை.

"நான் சாப்பாடு தயார் செய்யவா?", என்று கேட்டாள் திலகா.

"வேண்டாம் மா , ஷியாம் காலைலே  சூர்யா வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டான். சூர்யா வீட்டில தான் காலைலயும் மதியமும் சாப்பாடு. அதனால கிளம்ப வேண்டியது தான். அவன் தான் இன்னும் வரலை. அம்மாடி காவ்யா, ஷியாமை கீழ வர சொல்லு மா", என்றார் மோகன்.

"சரி அங்கிள்", என்று சந்தோசமாக ஓடினாள் காவ்யா. அவள் முகத்தில் இருந்தே அவள் மனதையும் திலகாவும்  சுந்தரும் உணர்ந்தார்கள்.

கிளம்பி கண்களை மூடி அமர்ந்திருந்தான் ஷியாம். அவளை  விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்து அவனுக்கு வெகுவாக வலித்தது.

அவனை பார்த்த உடனே அவன் மன நிலையை உணர்ந்தவள் அவனை நெருங்கி அவன் தலையை கோதி விட்டாள்.

கண் விழித்தவனின் கண்களில் ஒளி வந்தது. "கவி", என்று அழைத்தவனின்  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"இது என்ன சின்ன பிள்ளையாட்டம்? நான் காலேஜ்ல இருந்து திருட்டு  தனமா கால் பண்றேன் சரியா? என் ஷியாம் இப்படி எல்லாம் சின்ன பையன் மாதிரி அழ கூடாது", என்று சமாதான படுத்தியவளுக்கும் கஷ்டமாக  இருந்தது.

எழுந்து நின்றவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான். அவள் தோள் வளைவில் முகம் புதைத்தவன் "சீக்கிரம் ஒரு வருசம் போகணும் டி. என்னால உனக்கு கால் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சா பண்ணு. இல்லைன்னா கண்டிப்பா வாரத்துல ஒரு தடவையாவது மெயில் அனுப்பிரு", என்றான்.

"கண்டிப்பா ஷியாம், அப்பறம் உங்க பேக்ல ஒரு கிப்ட் உங்களுக்கே தெரியாம வச்சிருக்கேன். அதை பார்த்தா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சரியா? கீழே  எல்லாரும் கூப்பிடுறாங்க  போகலாமா?"

"ஹ்ம் சரி", என்று பேகை எடுத்தவன் "ப்ளீஸ்  டி ஒரே ஒரு  முத்தம்". என்று சொல்லி அவள் உதடுகளை சிறை செய்தான். 

பின் அவளுக்கு முன்னே கிளம்பி முன்னே நடந்தான். ஆனால் கண்களில் நீரோடு "மாமா", என்று அழைத்தாள் காவ்யா.. கையில் இருந்த பேகை அப்படியே கீழே போட்டவன்  அதிர்ச்சியாக திரும்பி அவளை பார்த்தான்.

"மாமா", என்ற கதறலோடு  அவன் அருகே ஓடி  வந்தவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து அவன் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தாள்.

அவனை சமாதானம் செய்தவளுக்கு அவன் கிளம்பியதும் தன்னையே அடக்க முடிய வில்லை.

இந்த வேகத்தை எதிர்பார்க்காத ஷியாமோ திகைத்து ஆனந்தமாக அவளிடம் முகத்தை காட்டிய படி நின்றான். பின் அழும்  அவளை சமாதான படுத்துவது அவனுடைய முறையானது.

பின் இருவரும் கண்ணீரை துடைத்து கொண்டு போலி புன்னகையுடன் கீழே வந்தார்கள். அவர்களை பார்த்தே அவர்கள் நிலைமையை  அனைவரும் உணர்ந்தார்கள்.

"உன்னை ஷியாமை கூட்டிட்டு வர சொன்னா? இவ்வளவு நேரமா காவ்யா?", என்று சிரித்து கொண்டே கேட்டார் சுந்தர்.

என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக தலைகுனிந்தாள் காவ்யா.

"சரி நான் கிளம்புறேன். என்னை இத்தனை நாள் தங்க வச்சதுக்கு தேங்க்ஸ் அங்கிள். எங்க அம்மாவோட சாப்பாட்டை சாப்பிட்ட நினைவுகள் கூட எனக்கு இல்லை. ஆனா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி பாசமா சாப்பாடு போட்ட உங்களுக்கு தேங்க்ஸ் ஆண்ட்டி", என்றான் ஷியாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.