(Reading time: 57 - 113 minutes)

"எங்க மாப்பிள்ளைக்கு நாங்க செய்யாம வேற யார் செய்வா?", என்று சிரித்து கொண்டே கேட்டார் சுந்தர்.

அதிர்ச்சியாக அவரை பார்த்த ஷியாம் அதே அதிர்ச்சியோடு காவ்யாவை  பார்த்தான். அவளும் திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.

மற்றவர்கள் அனைவரும் சிரித்து  கொண்டிருந்தார்கள்.

அதை பார்த்து எல்லையில்லா மனநிறைவு ஷியாமுக்கு வந்திருந்தது.  "காவ்யா படிச்சு முடிச்ச அப்புறம்  உங்க ரெண்டு பேருக்கும்  கல்யாணம் பண்ணி வைக்கிறதா நானும் சம்பந்தியும் பேசிட்டோம் . அதுக்கப்புறம் நீங்க  பாரினுக்கு   அவளை கூட்டிட்டு போனாலும் சரி, இல்லை  இந்தியால வேலை பாத்தாலும் சரி. அவ எக்ஸாம்  எழுதின அடுத்த முகூர்த்ததுல உங்களுக்கு கல்யாணம் தான்", என்று சிரித்தார் சுந்தர்.

"தேங்க்ஸ் அங்கிள்", என்று சந்தோசத்துடன்  சொன்ன ஷியாம் "அப்பா", என்று சொல்லி அவரை அணைத்து கொண்டான். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர்  வழிந்தது. தன்னுடைய மகனின் பாசத்தை முழுமையாக திரும்ப பெற்ற நிறைவு மோகனிடத்தில் வந்திருந்தது. 

பின் அவர்கள் அனைவரும் சூர்யா வீட்டுக்கு கிளம்பும் போது தன்னுடைய மகளின் முகத்தை பார்த்த சுந்தர் "நாங்களும் சூர்யா வீட்டுக்கு வரோம்", என்று சொல்லி அவள் முகத்தில் புன்னகையை வரவைத்தார்.

ஷியாமும் காவ்யா அன்று சாயங்காலம் வரை தன்னுடன் இருப்பாள் என்று சந்தோசமாக நினைத்தான்.

எல்லாரும் சூர்யா வீட்டுக்கு சென்றார்கள். சூர்யா வீட்டில் அனைவரையும் வரவேற்றவர்கள் காவ்யா வீட்டில் இருந்து வந்திருப்பதை பார்த்து வியந்தாலும் சந்தோசமாகவே வரவேற்றார்கள்.

அதன் பின் அவர்களின் திருமண விசயம் என அனைத்தும் அலச பட்டது. மங்களத்துக்கு சமையலுக்கு உதவியாக திலகாவும் சேர்ந்து கொண்டாள்.

காலை சாப்பாடு அனைவருக்கும் கொடுத்து விட்டு மதியம் சமைக்க ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.

மதியும், காவ்யாவும் மங்களத்திடம் "நாங்களும் உதவி செய்றோம்", என்றார்கள்.

ஆனால் மங்களமோ "காவ்யா உன்னை கட்டிக்க போறவன்  இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவான். மதி, உன்னை கட்டி கிட்டவன்  நாளைக்கு ஊருக்கு போயிருவான். அதனால ரெண்டு பேரும் அவங்க கூட பேசிட்டு இருங்க", என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டாள்.

சூர்யா அறையில் இரண்டு ஜோடிகளும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். காயத்ரி டிவியில் போட்ட ஒரு படத்தில் மூழ்கி விட்டாள். அதன் பின் மதியம் சாப்பாடு அனைவரும் சாப்பிட்டார்கள்.  

சாப்பிட்டு மாலை வரை இருந்து விட்டு மோகன், ஷியாம் காயத்ரி மூவரும் ஊட்டியை நோக்கி பயண பட்டார்கள்.

காவ்யா வீட்டினரும் அப்போதே சென்று விட்டார்கள். அதன் பின் மதியும், சூர்யாவும் தங்களின் அறையில் தங்கள் பிரிவை நினைத்து வருந்தி கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்குள்ளே இருந்தால் அவள் வருத்த பட்டு  கொண்டே இருப்பாள் என்பதால் "கோயிலுக்கு போய்ட்டு வரலாமா?", என்று கேட்டான் சூர்யா.

"சரி அத்தான்", என்று எழுந்தவள் மற்றொரு முறை குளித்து சேலை கட்டி கொண்டு மங்களம்  மற்றும் சிவ சுப்ரமணியத்திடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

நெல்லையப்பர் கோயில் சென்று தரிசனத்தை முடித்து விட்டு மௌனமாக அவனுடன் அமர்ந்திருந்தாள் கலைமதி.

"கலை,  கவலை படமா இரு சரியா. அப்புறம்  அம்மா அப்பாவை நீ தான் நல்லா பாத்துக்கணும். அதுக்காகவே நீ சரியா சாப்பிடணும். எந்த கஷ்டமா  இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் எனக்கு போன்  பண்ணி சொல்லணும் சரியா குட்டி?", என்று சொன்னான் சூர்யா.

"ஹ்ம் சரி", என்று மண்டையை ஆட்டி கேட்டு கொண்டிருந்தவள் அவனுடைய கையை விடாமலே இருந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் பெரியவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து விட்டு இரவு உணவையும் முடித்து முடித்தார்கள்.

"காலைல ஆறு மணிக்கு டிரைன் மா. அஞ்சு மணிக்கே கிளம்பனும். அதனால முன்னாடியே  எழுப்பி விடுங்க", என்று சொன்னான்  சூர்யா.

 அதன் பின் சிறிது நேரம் பேசி விட்டு  மதியும் சூர்யாவும்   தங்கள் அறைக்கு சென்றார்கள்.

உள்ளே வந்ததும் உடை மாற்ற பாத்ரூம் கிளம்பியவளை கைகளை பிடித்து தடுத்தவன் "சேலை கழட்ட வேண்டாம் டி", என்று சொல்லி அணைத்து  கொண்டான்.

அவளும் அவனை அணைத்து  கொண்டாள். கட்டிலில் அமர்ந்து அவள் முதுகை நீவி விட்டு கொண்டே இருந்தான் சூர்யா. அவளுடைய கண்ணீர் அவன் மார்பை நனைத்து கொண்டிருந்தது. 

பின் அவளை படுக்க வைத்து அவள் அருகே படுத்து கொண்டவன் அவளை இழுத்து அணைத்து அவள் முகத்தில் மூத்த ஊர்வலத்தை நடத்தினான். அவன் தரும் ஒவ்வொரு முத்தையும் ஆழ்ந்து அனுபவித்து  அந்த நினைவுகளை தன் மனப்பெட்டகத்துக்குள்  சேகரித்தாள் கலைமதி. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.