(Reading time: 57 - 113 minutes)

வந்ததில் இருந்தே அவள் செய்கையை தான் கவனித்து கொண்டு சிரித்து கொண்டு அமர்ந்திருந்தான் ஷியாம்.

அவன் அருகே வந்ததும் அவன் எதிரே இருந்த டீபாயில் டம்ளரை வைத்தவள் " காபி எடுத்துக்கோங்க ஷியாம் ", என்று  சொல்லி விட்டு மாடிக்கு போக பார்த்தவளின்  கையை பிடித்து சுண்டி இழுத்தான் ஷியாம்.

இப்படி எதாவது செய்வான் என்பதால் கவனமாய் இருந்தாள் காவ்யா. அதனால் காபி கொட்டாமல் தப்பித்தது. டம்ளரை கீழே வைத்தவள் அவனை முறைத்தாள். மறுபடியும் பிடித்து இழுத்தான் ஷியாம்.

அவன் அருகில் போய் விழுந்தவன் அவனை போலியாக மறுபடியும்  முறைத்தாள்.

"இப்ப எதுக்கு இழுத்தீங்க?"

"என் பக்கத்துல உக்காந்து குடி டி ", என்று சொல்லி அவள் கையில் ஒரு டம்ளரை கொடுத்தான்.

அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். குடித்து முடித்து டம்பளரை  கீழே வைத்தவள் அருகில் சென்றவன் அவளை பிடித்து வைத்து கொண்டு அவள் முகம் நோக்கி குனிந்தான்.

"ஷியாம் பல்லு விளக்கலை, வேண்டாம் விடுங்க"

"அதெல்லாம் விட முடியாது", என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை விரலால் பிடித்தவன் "இந்த உதடு என்னோட புராபர்ட்டி. அது மட்டுமில்லாம இன்னைக்கு புல்லா அது என் கூடவே தான் இருக்கும்", என்றான்.

"உங்களை நம்பி என்னை விட்டுட்டு போய்ருக்காங்க பாருங்க"

"பொண்டாட்டியை புருசனை நம்பி தான விட்டுட்டு போக முடியும்? டிஸ்டர்ப் பண்ணாத டி. கிஸ் பண்ணனும்", என்று சொல்லி தன் வேலையை தொடர்ந்தான்.

அவனிடம் இருந்து விலகியவள் "நான் குளிச்சிட்டு வரேன்", என்று சொல்லி விட்டு ஓடி  விட்டாள்.

சிரித்து  கொண்டே அமர்ந்திருந்தான் ஷியாம். அதன் பின் குளித்து முடித்து நைட்டி அணிந்து வந்தவளை வெகுவாக ரசித்தான். அவன் ரசணையில் முகம் சிவந்தவள் "வேற டிரெஸ் எல்லாம் அம்மா துவைச்சு போட்டுருக்காங்க. வீட்டுல சுடிதார் போட கடுப்பா இருக்கும். அம்மா கிட்ட நைட்டி போட்டதை சொல்லிறாதீங்க. காஞ்ச உடனே அதை மாத்திருவேன்", என்றாள்.

"லட்டு சான்சை போய் மிஸ் பண்ணுவேனா டி? மழை பேஞ்சு அந்த டிரெஸ் காயவே வேண்டாம். இந்த டிரெஸ்ல தான்  சும்மா கும்முன்னு இருக்க டி", என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கினான்.

"கிட்ட வந்தா கொன்னுருவேன். வாங்க சாப்பிடலாம்", என்று சொல்லி கொண்டே சாப்பிட அமர்ந்து விட்டாள் காவ்யா. அவனும் சிரித்து கொண்டே அவளருகே சென்று அமர்ந்தான்.

சாப்பிடும் போது புரை ஏறிய போது அவனை நெருங்கியவள் அவன் தலையில் தட்டி கொடுத்தாள்.

கண்களில் நீரொடு "தேங்க்ஸ் டி", என்றான். 

"என்ன ஷியாம் இதெல்லாம்?"

"எனக்கு இப்படி யாருமே செஞ்சது இல்லை கவி. நீ எனக்கு அம்மாவா இருப்பேன்ணு எனக்கு முன்னாடியே தோணுச்சு. ஆனா இப்ப அதை உணர்ந்துட்டேன் டி"

"ஷியாம்", என்ற படியே அவனை அணைத்து கொண்டாள். அவள் மார்பில் முகம் புதைத்திருந்தவன் இந்த அழகான நிமிடத்தை ரசித்தான்.

அதன் பின் அவளை ஊட்டி விட சொல்லி அவனும் அவளுக்கு ஊட்டி விட்டு சாப்பிட்டு முடித்த போது மணி பதினொன்று ஆகி இருந்தது. அவனை டிவி பார்க்க சொல்லி அனுப்பி விட்டு அனைத்தையும் ஒழுங்காக வைத்தாள்.

பின் இருவரும் பேசிய படியே டிவி பார்த்து கொண்டிருந்தாள். ஒரு மணி ஆகி இருக்கும் போது எழுந்தாள் காவ்யா..

"என்ன கவி எங்க போற?", என்று கேட்டான் ஷியாம்.

"மதியத்துக்கு சாதம் வைக்க வேண்டாமா ஷியாம்?"

"ஏண்டி காலைல சாப்பாடையே இப்ப தான சாப்பிட்டோம்? ரெண்டு மணிக்கு மேல வையேன்"

"ரெண்டு மணிக்கு மேல வச்சா நான் எப்படி நாடகம் பாக்க?"

"என்னது நாடகமா?  என்ன டி சொல்ற?"

"அன்னைக்கு சொன்னேன்ல? நினைத்தாலே இனிக்கும், அது தான்"

"ஏய் அது தினமும் ஈவினிங் தான போடுவான்னு சொன்ன?"

"தினமும் போடுறதை மொத்தமா சண்டே மதியம் போடுவான். அம்மா தினமும் சாயங்காலம் பாக்க விட மாட்டாங்க. அதனால மொத்தமா  பாப்பேன்"

"ஹா ஹா, சரி போய் சாதம் வை, நானும் இன்னைக்கு உன் கூட பாக்குறேன்", என்று சிரித்தான் ஷியாம்.

சாதம் வைத்து முடிக்கும் போது மணி ஒன்றரைஆகி இருந்தது. பிறகு அவனுடன் அமர்ந்து நாடகம் பார்த்தாள். இரண்டு மணிக்கு குழம்பை சூடு செய்து அவனுக்கும் இவளுக்கும் சேர்த்து ஒரே தட்டில் எடுத்து வந்து அவனுக்கு ஊட்டிய படியே அவளும் சாப்பிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.