"அட பாவி, நீ சரி விவரம் தான் அண்ணா. அப்புறம் அப்பா எப்ப அவங்க வீட்டில வந்து பொண்ணு கேக்கன்னு கேக்க சொன்னாங்க"
"இப்ப வேண்டாம்ணு சொல்லிரு காயு. ஒரு ஆறு மாசம் போகட்டும்"
"சரி அண்ணா . நீ உடம்பை பாத்துக்கோ. காவ்யாவை அப்புறமா என்கிட்ட பேச சொல்லு, வைக்கிறேன்"
"சரி டா ", என்று சொல்லி விட்டு போனை வைத்தவன் முகத்தை கழுவி கொண்டு ஒரு டீசர்ட் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பேண்ட்டை அணிந்து கொண்டு கீழே சென்று சுந்தருடன் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான்.
திலகா அவனுக்கு சினாக்ஸ் மற்றும் காப்பி கொடுத்து கொண்டிருக்கும் போது மதியும், காவ்யாவும் உள்ளே வந்தார்கள். பின்னாடியே சூர்யாவும் வந்தான்.
மதி மற்றும் காவ்யா அருகில் வந்து நின்ற சூர்யா "பாத்தியா இப்பவே மாப்பிள்ளை உபசாரம் நடக்குது", என்று இருவரிடமும் சொல்லி சிரித்தான்.
ஷியாமை பார்த்து சிரித்த படியே மதியும், முறைத்த படியே காவ்யாவும் சென்றார்கள்.
சூர்யா அமைதியாக ஷியாம் அருகில் போய் அமர்ந்து கொண்டான். அடுத்து அவர்களுக்கும் காப்பி கொடுக்க பட்டது.
தன்னையே பார்த்து கொண்டிருந்த காவ்யாவை பார்த்த ஷியாம் "எப்படி ஐயாவோட பிளான் ?", என்று கண்ணை காட்டினான்.
"போடா", என்று சைகை செய்தாள் காவ்யா. அதை ஆசையாக ரசித்து கொண்டிருந்தான் ஷியாம்.
பின் மதியும் சூர்யாவும் ஷியாமை நல்லா பாத்துக்க சொல்லி திலகா மற்றும் சுந்தரிடம் சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
சுந்தரும், ஷியாமும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். திலகா நைட் சமையல் செய்ய சென்று விட்டாள்.
காவ்யா தன்னுடைய அறைக்கு செல்வதுக்காக மாடி ஏறினாள். அப்போது அவள் அறை அருகே இருந்த கதவு திறந்திருப்பதை பார்த்தவள் "ஐயோ தினமும் இந்த வழியா தான் மேல் மாடிக்கு போவானோ? இன்னும் என்னோட ரூமை பப்பரப்பனு தொறந்து போடாம பூட்டி வைக்கணும் பா. சரியான கள்ளன்", என்று நினைத்து சிரித்து கொண்டே குளிக்க சென்றாள்.
நைட்டி அணிந்து பாத்ரூமை விட்டு வெளியே வந்த பிறகு தான் நினைவு வந்தது. யாராவது வீட்டில் இருந்தால் நைட்டி அணிந்தால் திலகாவுக்கு பிடிக்காது என்பது.
"இவன் இருக்கும் போது இப்படி போனா அவன் ஒரு மார்கமா பாப்பான். அம்மா பல மார்கமா பாக்கும். வேண்டாம் பா", என்று நினைத்தவள் ஒரு மிடியை எடுத்து போட்டு கொண்டு கழுத்தை சுற்றி ஒரு பழைய துப்பட்டாவையும் போட்டு கொண்டாள்.
துள்ளி குதித்து கீழே வந்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் ஷியாம். அவளை இது வரை சுடிதாரில் மட்டும் தான் ஷியாம் பார்த்திருக்கிறான். பாவாடை சட்டையில் இன்னும் அழகாக இருந்தாள்.
அவன் பார்வையை கண்டவள் "இதுக்கே இப்படி பாக்குறான். இதுல நைட்டி போட்டிருந்தா அவ்வளவு தான்", என்று நினைத்து கொண்டு திலகாவுக்கு உதவ சென்று விட்டாள்.
நைட்டியை போட்டுட்டு வருவியோன்னு நினைச்சேன் டி ", என்றாள் திலகா.
"எதுக்கு? அதை போட்டுட்டு வந்து உன்கிட்ட திட்டு வாங்கவா?", என்று சிரித்து கொண்டே கேட்டாள் காவ்யா.
"பரவால்லயே, என் பொண்ணுக்கு, இந்த அளவுக்கு யோசிக்க மூளை வளந்துருச்சா?"
"அம்மா.... உனக்கு போய் ஹெல்ப் பண்ணாலாம்னு வந்தேன் பாரு?"
"சட்னி வச்சிட்டேன். தோசை சுட்டுட்டு இருக்கேன். இதுல நீ என்ன ஹெல்ப் பண்ண போற?"
"போமா"
"சரி டி, அப்புறம் இனி உன் ரூம்ல இருந்தே படி சரியா? அந்த தம்பி டிவி பாக்கட்டும்"
"ஓ சரி மா"
"சரின்னு சொல்லிட்டு ரூம்ல படிக்காம தூங்குனியோ, அடி பிச்சிறுவேன்"
"படிக்கேன் மா, படிக்கேன். கொடுமை படுத்தாத"
"சரி, அப்புறம் உன் ரூம் பக்கத்துல இருக்குற மேல் மாடிக்கு போற டோரை அடைச்சு வச்சிராத. அந்த தம்பி இங்க இருக்குற வரைக்கும் அது துறந்தே இருக்கட்டும்"
திருடனுக்கு கதவை நீங்களே திறந்து வைக்க சொல்றீங்க?", என்று நினைத்து கொண்டு நல்ல பிள்ளையாய் "சரி மா", என்றாள் காவ்யா.
அதன் பின் இரவு மூவரையும் அமர வைத்து பரிமாறினாள் திலகா. காவ்யா பக்கம் பார்வையை திருப்ப கூட செய்யாமல் சுந்தர் மற்றும் திலகாவிடமே பேசிய படி சாப்பிட்டான் ஷியாம்.
அதை பார்த்து காவ்யாவுக்கு தான் குழப்பமாக இருந்தது. அவனை அடிக்கடி அடி பார்வை பார்த்து கொண்டே சாப்பிட்டு முடித்தாள். அதன் பின்னர் அவன் அவனுடைய ரூமுக்கு சென்று விட்டான்.
தன்னுடைய அறையில் படிக்க ஆரம்பிக்கலாம் என்று எடுத்த காவ்யாவுக்கோ சுத்தமாக படிக்க தோன்றவே இல்லை. மேல் வீட்டில் அவன் இருக்கும் போது அவளுக்கு எப்படி படிக்க தோன்றுமாம்?